தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-18548

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நுபைஃ பின் ஹாரிஸ் கூறுகிறார் :

நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் எனக்கு சலாம் சொல்லி எனது கையைப் பிடித்து என் முகத்தைப் பார்த்து சிரித்தார்கள். உங்களிடத்தில் நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் எனக்குத் தெரியாது. என்றாலும் நீங்கள் ஒரு நன்மைக்காகவே இதை செய்திருப்பீர்கள் என நான் கருதுகிறேன் என்று சொன்னேன்.

அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தபோது நான் உன்னிடத்தில் நடந்துகொண்டவாறு அவர்கள் என்னிடத்தில் நடந்துகொண்டார்கள். மேலும் (இது பற்றி நான் ஏன் இவ்வாறு செய்தேன் தெரியுமா?) என்று கேட்டார்கள். நான் நீங்கள் என்னிடத்தில் கூறியவாறே அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழருக்கு சலாம் கூறி அவருடைய கையைப் பிடித்தால் அல்லாஹ்விற்காகவே இவ்வாறு செய்தால் அவ்விருவரின் பாவங்களும் மன்னிக்கப்படாமல் அவ்விருவரும் பிரிந்து செல்வதில்லை என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 18548)

حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي دَاوُدَ، قَالَ:

لَقِيتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، فَسَلَّمَ عَلَيَّ، وَأَخَذَ بِيَدِي، وَضَحِكَ فِي وَجْهِي، قَالَ: تَدْرِي لِمَ فَعَلْتُ هَذَا بِكَ؟ قَالَ: قُلْتُ: لَا أَدْرِي، وَلَكِنْ لَا أَرَاكَ فَعَلْتَهُ، إِلَّا لِخَيْرٍ، قَالَ: إِنَّهُ لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَفَعَلَ بِي مِثْلَ الَّذِي فَعَلْتُ بِكَ، فَسَأَلَنِي، فَقُلْتُ مِثْلَ الَّذِي قُلْتَ لِي، فَقَالَ: «مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ، فَيُسَلِّمُ أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ، وَيَأْخُذُ بِيَدِهِ، لَا يَأْخُذُهُ إِلَّا لِلَّهِ عَزَّ وَجَلَّ فَيَتَفَرَّقَانِ حَتَّى يُغْفَرَ لَهُمَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-17814.
Musnad-Ahmad-Shamila-18548.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18181.




இந்தச் சம்பவத்தை அறிவிக்கும் نفيع بن الحارث நுஃபைஉ பின் ஹாரிஸ் என்ற அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.

  • இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
  • அம்ர் பின் அலீ, அபூ சுர்ஆ, அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    திர்மிதீ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    தாரமீ, இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகிய அறிஞர்களும் கூறியுள்ளனர்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.(பாகம் 10 பக்கம் 471)

متروك

تقريب التهذيب: (1 / 1008)

மேலும் பார்க்க: திர்மிதீ-2727 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.