தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-20356

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

“நீங்கள் ஆயுதமேந்திய மாறுபட்ட படையினராக மாறும் நிலை (பிற்காலத்தில்) ஏற்படும். ஒரு படையினர் ஷாமில் இருப்பார்கள். மற்றொரு படையினர் யமன் நாட்டில் இருப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! (அவர்களை நான் அடைந்தால்) நான் எந்தப் படையில் இருக்கவேண்டும் என்று எனக்கு தேர்வு செய்துக் கூறுங்கள்” என்று கூறினார்.

அதற்கு, “ஷாம் நாட்டுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள்” என்று மூன்று தடவை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களால் ஷாமுடன் இணைய முடியாவிட்டால் (உங்களுக்கு நெருக்கமான அல்லது உங்கள் அஸல் பகுதியான) யமன் நாட்டின் படையுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்றுள்ள நீர் தடாகத்திலிருந்து தண்ணீர் அருந்துங்கள். (அதாவது மற்ற முஸ்லிம்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே தங்களை தயார் செய்துக் கொள்ளுங்கள்)…திண்ணமாக அல்லாஹ், எனக்காக ஷாமுக்கும், ஷாம்வாசிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை மக்ஹூல் (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.

முஹம்மத் பின் ராஷித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹாஷிம் பின் காஸிம்-அபுன் நள்ர் அவர்கள், “யமன் நாட்டின் படையுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள்” என்று இரண்டு தடவை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்.

(முஸ்னது அஹ்மத்: 20356)

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، مَوْلَى بَنِي هَاشِمٍ، وَهَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَاشِدٍ، حَدَّثَنَا مَكْحُولٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَوَالَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«سَيَكُونُ جُنْدٌ بِالشَّامِ، وَجُنْدٌ بِالْيَمَنِ» ، فَقَالَ رَجُلٌ: فَخِرْ لِي يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ ذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكَ بِالشَّامِ، عَلَيْكَ بِالشَّامِ – ثَلَاثًا، عَلَيْكَ بِالشَّامِ – فَمَنْ أَبَى فَلْيَلْحَقْ بِيَمَنِهِ، وَلْيَسْقِ مِنْ غُدُرِهِ، فَإِنَّ اللَّهَ قَدْ تَكَفَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ» ،

قَالَ أَبُو النَّضْرِمَرَّتَيْنِ: فَلْيَلْحَقْ بِيَمَنِهِ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20356.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19878.




  • மக்ஹூல் அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு எந்த நபித்தோழரிடமும் ஹதீஸைக் கேட்கவில்லை; வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) அவர்களிடமிருந்தும் கேட்கவில்லை என்று அபூமுஸ்ஹிர் அவர்கள் கூறியதாக அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார்.

المراسيل لابن أبي حاتم (ص211):
789 – حَدَّثَنَا أَبِي قَالَ سَأَلْتُ أَبَا سَهَرٍ هَلْ سَمِعَ مَكْحُولُ مِنْ أَحَدٍ منِ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‌مَا ‌صَحَّ ‌عِنْدَنَا ‌إِلَّا ‌أَنَسَ ‌بْنَ ‌مَالِكٍ قُلْتُ وَاثِلَةُ فَأَنْكَرَهُ

(நூல்: அல்மராஸீல்-789)


வேறு செய்திகளைப் பார்க்கும்போது இதில் மக்ஹூல் அவர்களுக்கும், அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்களுக்கும் இடையில் அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ விடப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-18609.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.