தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-7695

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

உமர் பின் அதாஉ பின் அபுல்குவார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு நாள்) நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஸைத் பின் ஸப்பான் (ரஹ்) அவர்களுடைய மருமகன் அபூஅப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அன்னாரை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அழைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: “இமாமுடன் சேர்ந்து தொழுவதானது, தனியாகத் தொழும் இருபத்தைந்து தொழுகைகளை விடச் சிறந்தததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: இப்னு ஜுரைஜ் (ரஹ்)

அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் அறிவிப்பில், “ஸைத் பின் ஸப்பான் (ரஹ்) அவர்களுடைய மருமகன்” என்றும், இப்னு பக்ர் அவர்களின் அறிவிப்பில் “ஸைத் பின் ரய்யான் (ரஹ்) அவர்களுடைய மருமகன்” என்றும் இடம்பெற்றுள்ளது.

(முஸ்னது அஹ்மத்: 7695)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، وَابْنُ بَكْرٍ، قَالَا: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ عَطَاءِ بْنِ أَبِي الْخُوَارِ:

أَنَّهُ بَيْنَمَا هُوَ جَالِسٌ مَعَ نَافِعِ بْنِ جُبَيْرٍ، إِذْ مَرَّ بِهِمَا أَبُو عَبْدِ اللَّهِ خَتَنُ زَيْدِ بْنِ الرَّيَّانِ – وَقَالَ ابْنُ بَكْرٍ: ابْنِ الزَّبَّانِ – فَدَعَاهُ نَافِعٌ، فَقَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ مَعَ الْإِمَامِ أَفْضَلُ مِنْ خَمْسَةٍ وَعِشْرِينَ صَلَاةً يُصَلِّيهَا وَحْدَهُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-7695.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7506.




மேலும் பார்க்க: புகாரி-477 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.