தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-885

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

தொழுகையின் ஆரம்ப வார்த்தை.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் தொழ நின்றார். அப்போது அவர், “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார்.

(தொழுகை முடிந்த பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த வார்த்தைகளை கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அந்த மனிதர் “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அந்த வார்த்தையை பெறுவதற்கு 12 வானவர்கள் போட்டியிட்டுக் கொண்டார்கள் என்று கூறினார்கள்.

(நஸாயி: 885)

الْقَوْلُ الَّذِي يُفْتَتَحُ بِهِ الصَّلَاةُ

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ قَالَ: حَدَّثَنِي زَيْدٌ هُوَ ابْنُ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَمْرِو بْنُ مُرَّةَ، عَنْ عَوْنِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ:

قَامَ رَجُلٌ خَلْفَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: اللَّهِ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا. فَقَالَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَاحِبُ الْكَلِمَةِ؟» فَقَالَ رَجُلٌ: أَنَا يَا نَبِيُّ اللَّهِ. فَقَالَ: «لَقَدْ ابْتَدَرَهَا اثْنَا عَشَرَ مَلَكًا»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-885.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-875.




மேலும் பார்க்க: முஸ்லிம்-1052 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.