தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2526

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

சொர்க்கத்தின் வர்ணனையும் அதன் இன்பங்களும் குறித்து வந்துள்ளவை.

 நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்,
“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களிடம் இருக்கும்போது எங்கள் இதயங்கள் மிருதுவாகி, உலகத்தை வெறுத்து, மறுமையின் மக்களைப் போலாகிவிடுகிறோம். ஆனால், உங்களிடமிருந்து வெளியேறி எங்கள் குடும்பத்தாருடன் கலந்து, எங்கள் குழந்தைகளை நெருங்கும்போது, எங்களை நாங்களே மாறுபட்டவர்களாக உணர்கிறோம்” என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
“நீங்கள் என்னிடமிருந்து வெளியேறிய பின்பும் அந்த நிலையிலேயே இருந்தால், உங்கள் வீடுகளில் வானவர்கள் வந்து உங்களைச் சந்திப்பார்கள். மேலும், நீங்கள் பாவம் செய்யாவிட்டால், அல்லாஹ் புதிய மனிதர்களைப் படைத்து, அவர்கள் பாவம் செய்து, பின்னர் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவான்” என்று கூறினார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதரிடம், “அல்லாஹ்வின் தூதரே! படைப்புகள் எதிலிருந்து படைக்கப்பட்டன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீரிலிருந்து” என்று பதிலளித்தார்கள். நான், “சொர்க்கத்தின் கட்டமைப்பு என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒரு செங்கல் வெள்ளியால் ஆனது, மற்றொரு செங்கல் தங்கத்தால் ஆனது. அவற்றின் பூச்சு நறுமணம் வீசும் கஸ்தூரி. அவற்றின் கூழாங்கற்கள் முத்துக்கள் மற்றும் மாணிக்கங்கள். அவற்றின் மண் குங்குமப்பூ. அதில் நுழைந்தவர் பாக்கியம் பெறுவார்; துர்பாக்கியம் அடைய மாட்டார். அவர் நிரந்தரமாக இருப்பார்; இறக்க மாட்டார். அவர்களின் ஆடைகள் பழுதடையாது; அவர்களின் இளமை அழிந்து போகாது” என்று கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படாதவைகளாகும்.

1 . நீதமான அரசனின் பிரார்த்தனை.

2 . நோன்பாளி நோன்புத் துறக்கும் போது செய்யும் பிரார்த்தனை.

3 . அநீதமிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை.

அநீதிக்கு உள்ளானவரின் பிரார்த்தனை மேகங்களுக்கு மேலே உயர்த்தப்படுகிறது. அதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. மேலும், மகத்துவமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்: என் மாண்பின் மீதாணையாக! உனக்கு நிச்சயமாக உதவி செய்வேன்; அது சிறிது காலம் தாமதித்தாலும் கூட!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறாா்:

இந்த ஹதீஸின் அறிவிப்புத் தொடர் அந்தளவுக்கு பலமானதல்ல. மேலும் இது என்னுடைய பார்வையில் (முத்தஸிலாக இல்லை. அதாவது) அறிவிப்பாளர்தொடர் சங்கிலித்தொடராக இல்லை. இந்த ஹதீஸ் மற்றொரு அறிவிப்பாளர்தொடரில் அபூமுதில்லா —> அபூஹுரைரா (ரலி) —>  நபி (ஸல்) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

(திர்மிதி: 2526)

بَابُ مَا جَاءَ فِي صِفَةِ الجَنَّةِ وَنَعِيمِهَا

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حَمْزَةَ الزَّيَّاتِ، عَنْ زِيَادٍ الطَّائِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

قُلْنَا يَا رَسُولَ اللَّهِ: مَا لَنَا إِذَا كُنَّا عِنْدَكَ رَقَّتْ قُلُوبُنَا، وَزَهِدْنَا فِي الدُّنْيَا، وَكُنَّا مِنْ أَهْلِ الآخِرَةِ، فَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدِكَ فَآنَسْنَا أَهَالِينَا، وَشَمَمْنَا أَوْلَادَنَا أَنْكَرْنَا أَنْفُسَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّكُمْ تَكُونُونَ إِذَا خَرَجْتُمْ مِنْ عِنْدِي كُنْتُمْ عَلَى حَالِكُمْ ذَلِكَ لَزَارَتْكُمُ المَلَائِكَةُ فِي بُيُوتِكُمْ، وَلَوْ لَمْ تُذْنِبُوا لَجَاءَ اللَّهُ بِخَلْقٍ جَدِيدٍ كَيْ يُذْنِبُوا فَيَغْفِرَ لَهُمْ»

قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مِمَّ خُلِقَ الخَلْقُ؟ قَالَ: «مِنَ المَاءِ»، قُلْتُ: الْجَنَّةُ مَا بِنَاؤُهَا؟ قَالَ: «لَبِنَةٌ مِنْ فِضَّةٍ وَلَبِنَةٌ مِنْ ذَهَبٍ، وَمِلَاطُهَا الْمِسْكُ الْأَذْفَرُ، وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَاليَاقُوتُ، وَتُرْبَتُهَا الزَّعْفَرَانُ مَنْ دَخَلَهَا يَنْعَمُ وَلَا يَبْأَسُ، وَيَخْلُدُ وَلَا يَمُوتُ، لَا تَبْلَى ثِيَابُهُمْ، وَلَا يَفْنَى شَبَابُهُمْ»

ثُمَّ قَالَ: ” ثَلَاثٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ، الإِمَامُ العَادِلُ، وَالصَّائِمُ حِينَ يُفْطِرُ، وَدَعْوَةُ المَظْلُومِ يَرْفَعُهَا فَوْقَ الغَمَامِ، وَتُفَتَّحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ، وَيَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ: وَعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ

«هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِذَاكَ القَوِيِّ وَلَيْسَ هُوَ عِنْدِي بِمُتَّصِلٍ» وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ بِإِسْنَادٍ آخَرَ عَنْ أَبِي مُدِلَّةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2526.
Tirmidhi-Alamiah-2449.
Tirmidhi-JawamiulKalim-2462,
2463,
2464.




  • இந்த அறிவிப்பாளர்தொடரில் 3 செய்திகள் உள்ளன. சிலர் இந்தச் செய்தியின் சில பகுதிகளை மட்டும் அறிவித்துள்ளனர். சிலர் முழுமையாக அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . ஆபூகுரைப்-முஹம்மத் பின் அலாஃ

3 . முஹம்மத் பின் ஃபுளைல்

4 . ஹம்ஸா அஸ்ஸய்யாத்

5 . ஸியாத் அத்தாஈ (ஸஃத் என்பதே சரி)

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16238-ஸியாத் அத்தாஈ என்பவரிடமிருந்து ஹம்ஸா அஸ்ஸய்யாத், லைஸ் பின் அபூஸுலைம் ஆகியோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவரைப் பற்றி முற்கால அறிஞர்களின் நற்சான்றிதலோ அல்லது விமர்சனமோ இல்லை.
  • தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவரை அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்காஷிஃப்-2/437, தஹ்தீபுத் தஹ்தீப்-1/656, தக்ரீபுத் தஹ்தீப்-1/349)


  • ஹம்ஸா அஸ்ஸய்யாத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஃபுளைல் மட்டும் தான் ஸியாத் அத்தாஈ என்று கூறியுள்ளார். மற்றவர்கள் ஸஃத் அத்தாஈ என்று கூறியுள்ளனர். எனவே ஸஃத் அத்தாஈ என்றே பெயரே சரியாகும்.
  • இவரை வகீஃ அவர்கள் பலமானவர் என்றும்; அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-10/317, தஹ்தீபுத் தஹ்தீப்-1/699, தக்ரீபுத் தஹ்தீப்-1/372)


  • மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் ஸஃத் அத்தாஈ என்பவருக்கும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களுக்கும் இடையில் அபூமுதில்லா என்பவர் விடப்பட்டுள்ளார்.

(பார்க்க: அஹ்மத்-8043)

எனவே இது முன்கதிஃ என்பதால் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேற்கண்ட 3 செய்திகள் வேறு சில அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளன.

(பார்க்க: அஹ்மத்-8043)


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மது பின் புளைல் —> ஹம்ஸா அஸ்ஸய்யாத் —> ஸியாத் அத்தாஈ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: திர்மிதீ-2526,


  • இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
    இறப்பு ஹிஜ்ரி 181
    வயது: 63
    —> ஹம்ஸா அஸ்ஸய்யாத் —> ஸஃத் அத்தாஈ (அபூமுஜாஹித்) —> ஒரு மனிதர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஸ்ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-1075,

الزهد والرقائق لابن المبارك والزهد لنعيم بن حماد (1/ 380)
1075 – أَخْبَرَكُمْ أَبُو عُمَرَ بْنُ حَيَوَيْهِ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا حَمْزَةُ الزَّيَّاتُ، عَنْ سَعْدٍ الطَّائِيِّ حَدَّثَهُ عَنْ رَجُلٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا لَنَا إِذَا كُنَّا عِنْدَكَ رَقَّتْ قُلُوبُنَا، وَزَهِدْنَا فِي الدُّنْيَا، فَكُنَّا مِنْ أَهْلِ الْآخِرَةِ؟ وَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدَكَ أَحْبَبْنَا الدُّنْيَا، وَاشْتَهَيْنَاهَا، وَشَمَمْنَا النِّسَاءَ وَالْأَوْلَادَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّكُمْ تَكُونُونَ عَلَى الْحَالِ الَّتِي أَنْتُمْ عَلَيْهَا عِنْدِي لَزَارَتْكُمُ الْمَلَائِكَةُ فِي بُيُوتِكُمْ، وَلَوْ أَنَّكُمْ لَا تُذْنِبُونَ لَجَاءَ اللَّهُ بِخَلْقٍ جَدِيدٍ لِيُذْنِبُوا فَيَغْفِرَ لَهُمْ» ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مِمَّ خُلِقَ الْخَلْقُ؟ قَالَ: «مِنَ الْمَاءِ» ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي عَنِ الْجَنَّةِ، مَا بِنَاؤُهَا؟ قَالَ: «لَبِنَةٌ مِنْ ذَهَبٍ، وَلَبِنَةٌ مِنْ فِضَّةٍ، وَمِلَاطُهَا الْمِسْكُ الْأَذْفَرُ، وَتُرَابُهَا الزَّعْفَرَانُ، وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَالْيَاقُوتُ، مَنْ دَخَلَهَا يَنْعَمُ لَا يَبْؤُسُ، وَيُخَلَّدُ لَا يَمُوتُ، لَا تَبْلَى ثِيَابُهُ، وَلَا يَفْنَى شَبَابُهُ»

قَالَ: ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمُ: الْإِمَامُ الْمُقْسِطُ، وَالصَّائِمُ حَتَّى يُفْطِرَ، وَالْمَظْلُومُ، فَإِنَّهَا تُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ، وَتُرْفَعُ فَوْقَ الْغَمَامِ، يَنْظُرُ إِلَيْهَا الرَّبُّ عَزَّ وَجَلَّ، فَيَقُولُ: وَعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ “

இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
(மேற்கண்ட தனது ஸுஹ்த் என்ற நூலில்-1075 வது செய்தியில்) ஹம்ஸா அஸ்ஸய்யாத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தியில், ஹம்ஸா அஸ்ஸய்யாத் —> ஸஃத் அத்தாஈ —> ஒரு மனிதர் —>  அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்று அறிவித்துள்ளார். இவர் முஹம்மது பின் புளைல் அவர்களை விட பலமானவர் என்பதால் இந்த அறிவிப்பாளர்தொடரையே ஆய்வில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே ஸியாத் அத்தாஈ (ஸஃத் அத்தாஈ) என்பவருக்கும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களுக்கும் இடையில் ஒரு மனிதர் கூறப்படுகிறார். திர்மிதீ அவர்கள் கூறும் மேற்கண்ட அறிவிப்பில் அந்த மனிதர் கூறப்படவில்லை என்பதால் தான், திர்மிதீ அவர்கள் இது பலமான செய்தி அல்ல என்றும்; இது சங்கிலிதொடராக உள்ள செய்தி அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.


மேலும் இந்த செய்தியை  அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களிடமிருந்து அபூமுதில்லா என்பவரும் அறிவித்துள்ளார்.

பார்க்க: திர்மிதீ-3598.


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (11/ 235)
2258- وَسُئِلَ عَنْ حَدِيثِ أَبِي مُدِلَّةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِذَا كُنَّا عِنْدَكَ رَقَّتْ قُلُوبُنَا وَكُنَّا مِنْ أَهْلِ الْآخِرَةِ، وَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدِكَ أَعْجَبَتْنَا الدُّنْيَا وَشَمَمْنَا النِّسَاءَ … الْحَدِيثَ.
فَقَالَ: يَرْوِيهِ أَبُو مُجَاهِدٍ سَعْدُ بْنُ يَزِيدَ الطَّائِيُّ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ وَعَمْرُو بْنُ قَيْسٍ الْمُلَائِيُّ وَسَعْدَانُ بْنُ بِشْرٍ الْجُهَنِيُّ عَنْ سَعْدٍ أَبِي مُجَاهِدٍ، عَنْ أَبِي مُدِلَّةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَرَوَاهُ حَمْزَةُ الزَّيَّاتُ عَنْ سَعْدٍ الطَّائِيِّ أَبِي مُجَاهِدٍ وَقَالَ: عَنْ رَجُلٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَحْسَبُهُ لَمْ يَحْفَظْ كُنْيَتَهُ، فَقَالَ: عَنْ رَجُلٍ، وَأَرَادَ أَبَا مُدِلَّةَ، وَاللَّهُ أَعْلَمُ، وَالْحَدِيثُ مَحْفُوظٌ.

இதனடிப்படையில் இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்களின் ஸுஹ்த் எனும் நூலில் இடம்பெறும் மனிதர் அபூமுதில்லா என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் அவர்கள் குறிப்பிட்டு விட்டு இதை மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தி என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-2258, 11/235)


மேலும் பார்க்க: அஹ்மத்-8043.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.