ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், நபி (ஸல்) அவர்களின் அவையில் 100 தடவைக்கும் அதிகமாக அமர்ந்துள்ளேன். அப்போது நபித்தோழர்கள் கவிதைகளைப் படிப்பார்கள். மேலும் அறியாமைக் காலம் குறித்துப் பேசி(ச் சிரித்து)க் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சில நேரம்) அமைதியாக இருப்பார்கள். சில நேரம் அவர்களுடன் சேர்ந்து புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். (இந்தக் கருத்தில் சிலதை) ஸிமாக் அவர்களிடமிருந்து ஸுஹைர் பின் முஆவியா அவர்களும் அறிவித்துள்ளார்.
(திர்மிதி: 2850)حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ:
«جَالَسْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرَ مِنْ مِائَةِ مَرَّةٍ، فَكَانَ أَصْحَابُهُ يَتَنَاشَدُونَ الشِّعْرَ، وَيَتَذَاكَرُونَ أَشْيَاءَ مِنْ أَمْرِ الجَاهِلِيَّةِ وَهُوَ سَاكِتٌ، فَرُبَّمَا يَتَبَسَّمُ مَعَهُمْ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رَوَاهُ زُهَيْرٌ، عَنْ سِمَاكٍ، أَيْضًا
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2850.
Tirmidhi-Alamiah-2777.
Tirmidhi-JawamiulKalim-2796.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . அலீ பின் ஹுஜ்ர்
3 . ஷரீக் பின் அப்துல்லாஹ்
4 . ஸிமாக் பின் ஹர்ப்
5 . ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
கவிதை படிப்பார்கள் என்ற கூடுதல் வாசகம் ஷரீக் பின் அப்துல்லாஹ், கைஸ் பின் ரபீஃ ஆகியோர் வழியாக மட்டுமே வந்துள்ளது. மற்ற பலமானவர்கள் இதை அறிவிக்கவில்லை.
மேலும் பார்க்க: முஸ்லிம்-1188.
அஸ்ஸலாமு அலைக்கும்,
“பானத் சுஆத்” بانت سعاد என்ற கவிதை தொகுப்பு சம்பந்தமாக கீழ்கண்ட செய்தி சரியானதா? விளக்கவும் ஜி,Jazakallah
கஅப் இப்னு ஜுஹைர் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்து, நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து “பானத் சுஆத்” கவிதையை ஓதிய சம்பவம், பல அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சீறா (நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) நூல்களில் காணப்படுகிறது. மேலும், இமாம் பைஹகீ தனது “அஸ்-சுனன் அல்-குப்ரா” மற்றும் “தலாஇலுன் நுபுவ்வஹ்” ஆகிய நூல்களிலும், இமாம் ஹாகிம் தனது “அல்-முஸ்தத்ரக்” என்ற நூலிலும் இதை அறிவித்துள்ளனர்.
وقال الحاكم:
هَذَا حَدِيثٌ لَهُ أَسَانِيدُ قَدْ جَمَعَهَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، فَأَمَّا حَدِيثُ مُحَمَّدِ بْنِ فُلَيْحٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ. وَحَدِيثُ الْحَجَّاجِ بْنِ ذِي الرُّقَيْبَةِ، فَإِنَّهُمَا صَحِيحَانِ، وَقَدْ ذَكَرَهُمَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْقُرَشِيُّ فِي الْمَغَازِي مُخْتَصَرًا.
இமாம் ஹாகிம் அவர்கள், “இந்த ஹதீஸுக்கு இப்ராஹிம் பின் அல்-முன்திர் அல்-ஹிஸாமீ பல அறிவிப்பாளர் சங்கிலிகளைத் தொகுத்துள்ளார். முஹம்மது பின் ஃபுலைஹ் அவர்கள் மூஸா பின் உக்பாவிடமிருந்தும், ஹஜ்ஜாஜ் பின் துர்-ருக்கீபாவிடமிருந்தும் அறிவித்த ஹதீஸ்கள் இரண்டும் உறுதியானவை (ஸஹீஹ்) ஆகும். முஹம்மது பின் இஸ்ஹாக் அல்-குரஷீ தனது அல்-மகாஸி என்ற நூலிலும் இதைச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.
வ அலைக்கும் ஸலாம்.
பானத் சுஆத்” بانت سعاد என்ற கவிதை தொகுப்பு சம்பந்தமாக வரும் செய்திகளை இன்னும் நாம் பதிவு செய்யவில்லை.
நாம் பார்த்தவரை இந்தச் செய்திகள் முர்ஸல் தரத்தில் உள்ளவை. எனவே இவை பலவீனமானவை என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
சில செய்திகள் மக்களிடம் பிரபலமாக இருக்கும். ஆனால் அவை சரியான செய்தியாக இருக்காது. இந்த வகையில் நீங்கள் குறிப்பிட்ட செய்தியையும் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அந்தக் கவிதையின் கருத்தில் தவறு இருந்தும் அதை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்காமல் தனக்கு முன்னால் பாட அனுமதி தந்திருப்பார்களா? என்று அல்பானீ அவர்கள் கூறியுள்ளார்.
இந்தச் செய்தி வெவ்வேறு வகையான முர்ஸல் செய்திகளாக இருப்பதால் ஹஸன் லிஃகைரிஹீ என்ற தரத்தில் உள்ளவை என்றும் சிலர் கூறியுள்ளனர்.
இன்ஷா அல்லாஹ் பிறகு நாம் பதிவு செய்கிறோம்.
இன்ஷா அல்லாஹ், jazakallah