தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-34

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 26

தலைக்கு ‘மஸ்ஹு’ செய்வது ஒரு முறைதான் என்பது தொடர்பாக வந்துள்ளவை.

34 . ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தபோது, (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி மஸ்ஹு செய்ததை நான் கண்டேன். அப்போது அவர்கள் முன்தலையில் தமது கையை முன்னிருந்து (பின்னாகவு)ம் பின்னிருந்து (முன்னாகவு)ம் மஸ்ஹு செய்தார்கள். மேலும், தமது நெற்றிப் பொட்டுகளிலும் காதுகளிலும் தடவினார்கள். ஒரே ஒரு முறையே இவ்வாறு தடவினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அலீ (ரலி), அம்ர் பின் கஅப் (ரலி) ஆகியோர் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ‘ஹசன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்ததாகும்.

நபி (ஸல்) அவர்கள் தமது தலைக்கு ஒரே முறை மட்டுமே மஸ்ஹு செய்ததாகப் பல்வேறு அறிவிப்பாளர் தொடர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நபித்தோழர்கள் மற்றும் அவர்களுக்குப் பின்வந்த அறிஞர்களில் பெரும்பாலோர் இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமெனக் கருதுகின்றனர்.

ஜஅஃபர் பின் முஹம்மத், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, அப்துல்லாஹ் பின் அல்முபாரக், ஷாஃபிஈ, அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகிய அறிஞர்களும் தலைக்கு ஒரே ஒரு முறை மட்டுமே மஸ்ஹு செய்ய வேண்டும் என்றே கருதுகின்றனர்.

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் ஜஅஃபர் பின் முஹம்மத் பின் அலீ பின் அல்ஹுசைன் (ரஹ்) அவர்களிடம், “தலைக்கு ஒரே ஒரு தடவை மஸ்ஹு செய்தால் போதுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள். “ஆம்” அல்லாஹ்வின் மீதாணையாக! என்று பதிலளித்தார்கள்

(திர்மிதி: 34)

بَابُ مَا جَاءَ أَنَّ مَسْحَ الرَّأْسِ مَرَّةً

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ ابْنِ عَفْرَاءَ،

أَنَّهَا رَأَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ، قَالَتْ: «مَسَحَ رَأْسَهُ، وَمَسَحَ مَا أَقْبَلَ مِنْهُ، وَمَا أَدْبَرَ، وَصُدْغَيْهِ، وَأُذُنَيْهِ مَرَّةً وَاحِدَةً»

وَفِي الْبَابِ، عَنْ عَلِيٍّ، وَجَدِّ طَلْحَةَ بْنِ مُصَرِّفِ. حَدِيثُ الرُّبَيِّعِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ مَسَحَ بِرَأْسِهِ مَرَّةً. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ بَعْدَهُمْ وَبِهِ يَقُولُ: جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، وَسُفْيَانُ الثَّوْرِيُّ، وَابْنُ الْمُبَارَكِ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ، رَأَوْا مَسْحَ الرَّأْسِ مَرَّةً وَاحِدَةً.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَال: سَمِعْتُ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ يَقُولُ: سَأَلْتُ جَعْفَرَ بْنَ مُحَمَّدٍ عَنْ مَسْحِ الرَّأْسِ أَيُجْزِئُ مَرَّةً؟ فَقَالَ: إِي وَاللَّهِ


Tirmidhi-Tamil-32.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-34.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




மேலும் பார்க்க: அபூதாவூத்-126 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.