பாடம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் தேவையைத் தம் இறைவனிடமே கேட்கட்டும். எந்தளவுக்கெனில் தன் செருப்பு வார் அறுந்தாலும் அவனிடமே கேட்க வேண்டும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.
இந்தச் செய்தியை பலரும் ஜஅஃபர் பின் ஸுலைமான் —> ஸாபித் அல்புனானீ —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். அவர்கள் இதில் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களைக் குறிப்பிடவில்லை.
(திர்மிதி: 3973)بَابٌ
حَدَّثَنَا أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ الأَشْعَثِ السِّجْزِيُّ قَالَ: حَدَّثَنَا قَطَنٌ البَصْرِيُّ قَالَ: أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ كُلَّهَا حَتَّى يَسْأَلَ شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ»
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ» وَرَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الحَدِيثَ عَنْ جَعْفَرِ بْنِ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ البُنَانِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ أَنَسٍ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3536.
Tirmidhi-Shamila-0/3973.
Tirmidhi-Alamiah-3536.
Tirmidhi-JawamiulKalim-3566.
சமீப விமர்சனங்கள்