தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4132

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் ‘மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக!’ என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) ‘உங்களை நான் இவ்வாறு (ஒன்றுபட்டவர்களாக) பார்த்த பிறகு, எனக்கு பின் நீங்கள் ஒருவர் கழுத்தை, ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடும் நிலை ஏற்படக் கூடாது என்று கூறினார்கள்-

என்று ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாக எனக்குத் தகவல் கிடைத்தது.

(நஸாயி: 4132)

أَخْبَرَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ أَبِي السَّفَرِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ قَالَ: بَلَغَنِي أَنَّ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ قَالَ:

قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَنْصِتِ النَّاسَ» ثُمَّ قَالَ: «لَا أُلْفِيَنَّكُمْ بَعْدَ مَا أَرَى تَرْجِعُونَ بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4132.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4087.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ கைஸ் பின் அவ்ஃப்-கைஸ் பின் அபூஹாஸிம் அவர்கள் பலமானவர். மேலும் இவர் ஜரீர் (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களைக் கேட்டுள்ளார். ஆனால் இந்த செய்தியை இவர் நேரடியாக ஜரீர் (ரலி) அவர்களிடம் கேட்கவில்லை என்று அவர் அறிவிக்கும் முறையில் இருந்து தெரிகிறது. எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: புகாரி-121 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.