தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1906

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமைகள் பற்றி வந்துள்ளவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன்னுடைய தந்தை அடிமையாக இருப்பதைக் கண்டு அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தைத்) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்தவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன்-ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதாகும். மேலும் இந்த செய்தி ஸுஹைல் பின் அபூஸாலிஹ் அவர்களின் வழியாகவே வந்துள்ளதாக அறிகிறோம். இந்த செய்தியை இவரிடமிருந்து ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களும், வேறு சிலரும் அறிவித்துள்ளனர்.

(திர்மிதி: 1906)

بَابُ مَا جَاءَ فِي حَقِّ الوَالِدَيْنِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا يَجْزِي وَلَدٌ وَالِدًا إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، وَقَدْ رَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ، وَغَيْرُ وَاحِدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ هَذَا الحَدِيثَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1906.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1825.




மேலும் பார்க்க: முஸ்லிம்-3029 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.