ஸஃத் பின் அபூதுபாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றேன். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! என் கூட்டத்தார் இஸ்லாத்தை ஏற்றால் அவர்களிடம் இருந்த செல்வங்களை (நிலம் மற்றும் உடைமைகளை) அவர்களுக்கே உரியதாக்கி விடுங்கள்” என்று கோரினேன். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தார்கள்.
மேலும், எனது கூட்டத்தார்களை நிர்வகிக்கும் பொறுப்பில் என்னையே நியமித்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூபக்கர் (ரலி) அவர்களும், அவர்களுக்குப் பிறகு உமர் (ரலி) அவர்களும் என்னையே அந்தப் பொறுப்பில் நீடிக்கச் செய்தார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 16728)حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، قَالَ: أَخْبَرَنَا الْحَارِثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُنِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدِ بْنِ أَبِي ذُبَابٍ، قَالَ:
قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمْتُ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْ لِقَوْمِي مَا أَسْلَمُوا عَلَيْهِ مِنْ أَمْوَالِهِمْ . «فَفَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَعْمَلَنِي عَلَيْهِمْ» ، ثُمَّ اسْتَعْمَلَنِي أَبُو بَكْرٍ، ثُمَّ اسْتَعْمَلَنِي عُمَرُ مِنْ بَعْدِهِ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-16128.
Musnad-Ahmad-Shamila-16728.
Musnad-Ahmad-Alamiah-16128.
Musnad-Ahmad-JawamiulKalim-16378.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்
2 . ஸஃப்வான் பின் ஈஸா
3 . ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான்-அத்தவ்ஸீ
4 . முனீர் பின் அப்துல்லாஹ்
5 . அப்துல்லாஹ்-அபூமுனீர்
6 . ஸஃத் பின் அபூதுபாப் (ரலி)
…
பார்க்க: ராவிபெயர்-முனீர் பின் அப்துல்லாஹ்.
சமீப விமர்சனங்கள்