தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-565

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நாங்கள் நபி( ஸல்) அவர்களின் பின்னே தொழுது கொண்டிருந்தோம். நபி (ஸல்) அவாகள் ருகூஉ விலிருந்து தன் தலையை உயர்த்தி ‘ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா” என்று அவர்கள் கூறிய போது அவர்களின் பின்னே இருந்த ஒருவர் ‘ரப்பனா வலகல் ஹம்து, ஹம்தன் கதீரன் தப்பியபன் முபாரகன் ஃபீஹி” என்று கூறினார்.

நபி (ஸல்) அவா்கள் தொழுகையை முடித்ததும், ”சற்று முன் கூறியவர் யார்?”” என்று கேட்டார்கள். அந்த மனிதர் ”இறைத்தூதர் (ஸல்) அவர்களே! நான் தான்”” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், ”(நீ கூறியதை) தங்களில் யார் முதலில் பதிவு செய்வது என முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் போட்டி போட்டதை நான் பார்த்தேன்”” என்று கூறினார்கள்.

இதை ரிஃபாஆ இப்னு ராஃபிஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 565)

وحَدَّثَنِي مَالِكٌ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، أَنَّهُ قَالَ

كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَلَمَّا رَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ، وَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ»، قَالَ رَجُلٌ وَرَاءَهُ: «رَبَّنَا وَلَكَ الْحَمْدُ. حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ». فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنِ الْمُتَكَلِّمُ آنِفًا؟» فَقَالَ الرَّجُلُ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ رَأَيْتُ بِضْعَةً وَثَلَاثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهُنَّ أَوَّلًا»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-565.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-799 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.