ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
இஸ்லாத்தில் முதல் ஷஹீத் (உயிர் தியாகி) அம்மாரின் தாயார் சுமைய்யா (ரலி) ஆவார். அவரின் மர்ம உறுப்பில் ஈட்டியை குத்தி கொன்றான் அபூஜஹ்ல்.
அறிவிப்பவர் : முஜாஹித் (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 35770)وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ:
«أَوَّلُ شَهِيدٍ اسْتُشْهِدَ فِي الْإِسْلَامِ أُمُّ عَمَّارٍ , طَعَنَهَا أَبُو جَهْلٍ بِحَرْبَةٍ فِي قُبُلِهَا»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-35770.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-35084.
இந்த சம்பவத்தை அறிவிப்பவர் முஜாஹித் ஆவார். இவர் நபிகளார் காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. நபிகளார் காலத்தில் நடந்த சம்பவத்தை இவரால் அறிந்து கொள்ள முடியாது. எனவே இந்த செய்தி அறிவிப்பாளர்தொடர் அறுந்த முர்ஸல் வகையைச் சார்ந்ததாகும்.
சமீப விமர்சனங்கள்