தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-813

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ஹஜ்ஜைக் கடமையாக்குவது எது? என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கட்டுச்சாதமும் (உணவு) வாகனமும் ஆகும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(திர்மிதி: 813)

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ:

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا يُوجِبُ الحَجَّ؟ قَالَ: «الزَّادُ وَالرَّاحِلَةُ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ» وَالعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ العِلْمِ: أَنَّ الرَّجُلَ إِذَا مَلَكَ زَادًا وَرَاحِلَةً وَجَبَ عَلَيْهِ الحَجُّ «وَإِبْرَاهِيمُ هُوَ ابْنُ يَزِيدَ الخُوزِيُّ المَكِّيُّ وَقَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَهْلِ العِلْمِ مِنْ قِبَلِ حِفْظِهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-741.
Tirmidhi-Shamila-813.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-740.




إسناد شديد الضعف فيه إبراهيم بن يزيد الخوزي وهو متروك الحديث

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் إبراهيم بن يزيد الخوزي இப்றாஹீம் பின் யஸீத் பலவீனமானவர். இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே இதை இங்கு குறிப்பிட்டுள்ளார்கள்.

1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-1505615703 , இப்னு மாஜா-2896 , திர்மிதீ-813 , 2998 , அல்முஃஜமுல் அவ்ஸத்-5041 , தாரகுத்னீ-2421 , 2422 , 2423 , குப்ரா பைஹகீ-8623 , 8637 , 9110 , 10129 ,

கருத்து சரியா?

உணவும் வாகனமும் ஹஜ்ஜைக் கடமையாக்கி விடும் என்று நபிகள் நாயகம் கூறியதாக உள்ள செய்தி அறிவிப்பின் அடிப்படையில் பலவீனம் அடைவதைப் போன்று கருத்தை கவனிக்கும் போதும் அது தவறான செய்தி என்பது விளங்கி விடுகிறது.

ஏனெனில் ஹஜ் யாருக்கு கடமை என்பதை குர்ஆன் விளக்கும் போது பின்வருமாறு கூறுகின்றது.

அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

(திருக்குர்ஆன் 3:97)

சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்கு ஹஜ் கடமை எனும் இறைவார்த்தையிலிருந்து உணவும் வாகனமும் இருந்து விட்டால் மட்டும் ஹஜ் கடமை என்றாகி விடாது. மாறாக சென்று வர உடல் ஒத்துழைப்பதும் – ஆரோக்கியமாக இருப்பதும் அவசியம் என்பதை அறியலாம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.