தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-22963

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அலி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

பின்பு நரகில் செல்லும் இருவரை கூறினார்கள்.

  1. (நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல்) தீர்ப்பில் அநீதி செய்த மனிதர். இவர் நரகத்தில் புகுவார்.
  2. உண்மையை நாடியவர் தான் என்றாலும், நீதியில் தவறிழைத்தவர். இவரும் நரகத்தில் புகுவார்.
  3. உண்மையை நாடி சரியாக தீர்ப்பளித்தவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.

அறிவிப்பவர் : அபுல்ஆலியா (ரஹ்)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா (ரஹ்) அவர்கள், அலி (ரலி) அவர்களிடமிருந்து இச்செய்தியை அறிவிக்கும் அபுல்ஆலியாவிடம் , உண்மையை நாடி, நீதியில் தவறிழைத்தவர் என்ன பாவம் செய்தார்?என்று கேட்டார். அதற்கு அபுல்ஆலியா, அவர் தீர்ப்பின் சட்டங்களை அறியாமல் தீர்ப்பளிக்கும் நீதிபதி பொறுப்பிற்கு வந்திருக்கக்கூடாது என்று கூறினார்கள்.

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 22963)

حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ رُفَيْعًا أَبَا الْعَالِيَةِ، قَالَ: قَالَ عَلِيٌّ:

الْقُضَاةُ ثَلَاثَةٌ: اثْنَانِ فِي النَّارِ، وَوَاحِدٌ فِي الْجَنَّةِ “، فَذَكَرَ اللَّذَيْنِ فِي النَّارِ، قَالَ: «رَجُلٌ جَارَ مُتَعَمِّدًا فَهُوَ فِي النَّارِ، وَرَجُلٌ أَرَادَ الْحَقَّ فَأَخْطَأَ فَهُوَ فِي النَّارِ، آخَرُ أَرَادَ الْحَقَّ فَأَصَابَ فَهُوَ فِي الْجَنَّةِ» قَالَ: فَقُلْتُ لِرُفَيْعٍ: أَرَأَيْتَ هَذَا الَّذِي أَرَادَ الْحَقَّ فَأَخْطَأَ؟ قَالَ: «كَانَ حَقُّهُ إِذَا لَمْ يَعْلَمِ الْقَضَاءَ لَا يَكُونُ قَاضِيًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-22963.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-22360.




இது மவ்கூஃபான செய்தி. சில ஹதீஸ்கலை அறிஞர்கள் அலி (ரலி) அவர்கள் இதை கூறவில்லை என்று கூறியுள்ளனர்…

மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21599 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.