தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-24022

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் ஸஜ்தா வசனங்களை ஓதி சஜ்தாச் செய்யும்போது, “ஸஜத வஜ்ஹீ லில்லதீ லிமன் கலக்கஹூ, வஷக்க ஸம்அஹூ வ பஸரஹூ பி ஹவ்லிஹீ வ குவ்வத்திஹீ” என்று கூறுவார்கள்.

(பொருள்: என் முகத்தைப் படைத்து அதில் தனது அறிவாலும் ஆற்றலாலும் செவிப்புலனையும் பார்வைத் திறனையும் ஏற்படுத்திய (இறை)வனுக்கு என் முகம் பணிகிறது.)

(முஸ்னது அஹமது: 24022)

حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ عَائِشَةَ قَالَتْ:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي سُجُودِ الْقُرْآنِ: «سَجَدَ وَجْهِي لِمَنْ خَلَقَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-22895.
Musnad-Ahmad-Shamila-24022.
Musnad-Ahmad-Alamiah-22895.
Musnad-Ahmad-JawamiulKalim-23473.




மேலும் பார்க்க: திர்மிதீ-580 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.