தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1285

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ருகூவிலும், ஸஜ்தாவிலும் இரு கைகளை உயர்த்துவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூறி தம் இருகைகளையும் தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவுக்கு செல்லும் போதும் “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூறி தம் இருகைகளையும் தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் அவ்வாறே செய்வார்கள். இருஸஜ்தாவிற்கிடையிலும், அல்லது ஸஜ்தாவுக்குச் செல்லும்போதும் இவ்வாறு கைகளை உயர்த்த மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(ஸுனன் தாரிமீ: 1285)

بَابٌ فِي رَفْعِ الْيَدَيْنِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ

أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَنْبَأَنَا مَالِكٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «إِذَا دَخَلَ الصَّلَاةَ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ، وَإِذَا رَكَعَ، كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، فَعَلَ مِثْلَ ذَلِكَ، وَلَا يَرْفَعُ بَيْنَ السَّجْدَتَيْنِ أَوْ فِي السُّجُودِ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1285.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1225.




மேலும் பார்க்க: புகாரி-735 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.