தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-5213

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருந்தும் வானவர் கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் வானவர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார்.

அறிவிப்பவர்: ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி)

(ஹாகிம்: 5213)

حَدَّثَنَا أَبُو زَكَرِيَّا الْعَنْبَرِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الْعَبْدِيُّ، ثنا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، ثنا عَامِرُ بْنُ صَالِحٍ الزُّبَيْرِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ،

أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يَنْزِلُ عَلَيْكَ الْوَحْيُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي مِثْلِ صَلْصَلَةِ الْجَرَسِ فَيَفْصِمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ مَا قَالَ وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ، وَأَحْيَانًا يَأْتِينِي الْمَلَكُ، فَيَتَمَثَّلُ لِي فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ»

لَا أَعْلَمُ أَحَدًا قَالَ فِي هَذَا الْحَدِيثِ، عَنْ عَائِشَةَ، عَنِ الْحَارِثِ غَيْرَ عَامِرِ بْنِ صَالِحٍ ” وَقَدْ رَوَاهُ أَصْحَابُ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ الْحَارِثَ بْنَ هِشَامٍ سَأَلَ الْحَدِيثَ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-5213.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-5172.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஆமிர் பின் ஸாலிஹ் பின் அப்துல்லாஹ் மிக பலவீனமானவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/266, தக்ரீபுத் தஹ்தீப்-3113)

மேலும் பார்க்க: புகாரி-2 .

4 comments on Hakim-5213

  1. ஒரு நபிமொழி பல அறிவிப்பாளர் தொடர் வழியாக வருகிறது. அதில் சரியான அறிவிப்பாளர் தொடரை மட்டும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். (அதாவது அந்த செய்தியை மட்டுமே ஏற்றுக் கொள்கிறோம்). அறிவிப்பாளர் தொடரில் ஏதாவது பிரச்சனை இருந்தால்/அல்லது ஏதாவது அறிவிப்பாளர் குறை உள்ளவராக இருந்தால் அந்த செய்தியை நாம் விட்டுவிட வேண்டும் என்று சொல்கிறோம். அந்த அறிவிப்பாளர் தொடரை தான் நாம் விடலாமே தவிர அந்த செய்தியை ஏன் விட வேண்டும். அந்த அறிவிப்பாளர் தொடர் பிரச்சனை உள்ளதாக இருந்தாலும் அந்த செய்தி உண்மை என்று நமக்கு தெரிகிறதா இல்லையா. இதற்கு தெளிவான பதில் தரவும்.

  2. ஒரு நபிமொழி பல அறிவிப்பாளர் தொடர் வழியாக வருகிறது. அதில் சரியான அறிவிப்பாளர் தொடரை மட்டும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். (அதாவது அந்த செய்தியை மட்டுமே ஏற்றுக் கொள்கிறோம்). அறிவிப்பாளர் தொடரில் ஏதாவது பிரச்சனை இருந்தால்/அல்லது ஏதாவது அறிவிப்பாளர் குறை உள்ளவராக இருந்தால் அந்த செய்தியை நாம் விட்டுவிட வேண்டும் என்று சொல்கிறோம். அந்த அறிவிப்பாளர் தொடரை தான் நாம் விடலாமே தவிர அந்த செய்தியை ஏன் விட வேண்டும். அந்த அறிவிப்பாளர் தொடர் பிரச்சனை உள்ளதாக இருந்தாலும் அந்த செய்தி உண்மை என்று நமக்கு தெரிகிறதா இல்லையா. இதற்கு தெளிவான பதில் தரவும். அந்த செய்தி புகாரியில் வந்திருக்கிறது. ஆகையால் இந்த செய்தியை அறிவிக்கக்கூடிய அனைத்து அறிவிப்பாளர்களும் உண்மையாளர்கள் என்று அந்த அறிவிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏன் ஏற்றுக் கொள்வதில்லை. விளக்கம் தரவும்

  3. புகாரியில் வந்த அந்த உண்மையான செய்தியை அடிப்படையாகக் கொண்டு இதை அறிவிக்கக்கூடிய அனைத்து அறிவிப்பாளர் தொடர்களும் சரியான அறிவிப்பாளர் தொடராக ஏன் கணிக்கப்படுவதில்லை.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஒரு செய்தியை சரியான செய்தி என்று அல்லது பலவீனமான செய்தி என்று கூறுவதற்கும், இன்ன செய்தியின் இந்த அறிவிப்பாளர்தொடர் சரியானது அல்லது இன்ன செய்தியின் இந்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது என்று கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்பது ஹதீஸ்கலை நூல்களில் கூறப்படும் சட்டமாகும்.

      நீங்கள் சொல்வது போன்று பலவீனமானவர் இடம்பெற்ற செய்தியை (வேறு செய்தி இருப்பதால்) சரியானது என்று குறிப்பிட்டால் இதே பலவீனமானவர் மட்டும் இடம்பெறும் செய்தியை சிலர் சரியானது என்று கருதிவிடலாம் அல்லவா?.

      அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்களின் பலவீனத்தைப் பொருத்து பலவீனமான அறிவிப்பாளர்தொடரை இஸ்னாதுஹூ ளஈஃப் என்றும் கூறுவர். ஸஹீஹ் லிஃகைரிஹீ என்றும் கூறுவர். பொய்யர்கள் இடம்பெற்றால் அதை மிகவும் பலவீனமான அறிவிப்பாளர்தொடர் என்றோ பொய்யான செய்தி என்றோ கூறுவர்.

      இது பற்றி விரிவான விளக்கம்:
      1 . அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள்.
      2 . ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்றால் என்ன?
      3 . தரத்தைக் கவனித்து 12 வகை அறிவிப்பாளர்கள்
      போன்ற, ஹதீஸ்கலை பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைக் காணவும்.

      “அதேபோல தான் குர்ஆனுக்கு எதிராக இல்லாத போது அறிவிப்பாளர் தொடரையும் நாம் பார்க்க வேண்டிய தேவை இல்லை” என்ற உங்கள் கருத்து தவறானது.

      மார்க்கத்தில் பித்அத் போன்றவை தோன்றுவதற்கு காரணம்,
      ஆளைப் பார்க்ககூடாது. செய்தியைத் தான் பார்க்கவேண்டும் என்ற இது போன்ற கருத்தால் தான். நாம் பேசுவது உலகச் செய்தி பற்றியதல்ல. நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புடைய செய்திகள்-மார்க்க செய்திகள். இதற்கு அறிவிப்பாளர்களையும் பார்க்க வேண்டும் என்பது ஹதீஸ்துறையின் முக்கிய அம்சம். இது பற்றி விரிவாக காண முஸ்லிம் இமாமின் முன்னுரை பகுதியைக் காணவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.