தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-1084

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னால் எப்படி இன்புற்றிருக்க முடியும்?. எக்காளம் ஊதுகின்ற (வான)வர் எக்காளத்தின் முனைப் பகுதியை தமது வாயில் வைத்துக்கொண்டு, ஊதுமாறு எப்போது உத்தரவிடப்படும் என்று நெற்றியை உயர்த்திக் காத்திருக்கிறாரே! என்று கூறினார்கள்.

அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரே! அந்நாளில் நாங்கள் என்னக் கூறவேண்டும்’ என்றுக் கேட்டோம். அதற்கவர்கள், “ஹஸ்புனல்லாஹு, வ நிஃமல் வகீல்; அலல்லாஹி தவக்கல்னா. (பொருள்: அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்; அவனே சிறந்த பாதுகாவலன்; அல்லாஹ்வையே நாங்கள் சார்ந்துள்ளோம்) எனக் கூறுங்கள்” என்று பதிலளித்தார்கள்.

(abi-yala-1084: 1084)

حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«كَيْفَ أَنْعَمُ وَصَاحِبُ الصُّوَرِ قَدِ الْتَقَمَ وَحَنَا جَبْهَتَهُ يَنْتَظِرُ مَتَى يُؤْمَرُ أَنْ يَنْفُخَ؟»، قِيلَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، مَا نَقُولُ يَوْمَئِذٍ؟ قَالَ: ” قُولُوا: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، عَلَى اللَّهِ تَوَكَّلْنَا “


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-1084.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அஃமஷ் —> அபூஸாலிஹ்-தக்வான் —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1084 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-,

  • அதிய்யா —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, இப்னு மாஜா-4273 , திர்மிதீ-24313243 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-,

2 . அபூஹுரைரா

3 . இப்னு அப்பாஸ்

4 . ஸைத் பின் அர்கம்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.