தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-4241

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், தம் தலையை உயர்த்திய போது (தமக்கு முன்) முதியவர் ஒருவர் முன்னோக்கி வருவதை கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று கூறினார்கள்.

(abi-yala-4241: 4241)

حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ، حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، حَدَّثَنَا زُرْبِيٌّ أَبُو يَحْيَى، عَنْ أَنَسٍ قَالَ:

بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ رَفَعَ رَأْسَهُ فَإِذَا هُوَ شَيْخٌ قَدْ أَقْبَلَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4241.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4182.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஸர்பிய்யு பின் அப்துல்லாஹ் முன்கருல் ஹதீஸ் என்று விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/337)

மேலும் பார்க்க: திர்மிதீ-1919 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.