அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்தார்கள். அப்போது, மக்கள் குர்ஆனை சத்தமிட்டு ஓதுவதைச் செவியேற்றார்கள். எனவே, (தனது கூடாரத்தின்) திரையை விளக்கிவிட்டு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிந்துக் கொள்ளுங்கள்! உங்களில் ஒவ்வொருவரும் தன் இறைவனிடம் இரகசியமாக உரையாடுகிறார். எனவே உங்களில் சிலர், சிலருக்கு சிரமத்தை ஏற்படுத்தவேண்டாம். உங்களில் சிலர், சிலருக்கு இடையூறாக தொழுகையில் குர்ஆனை சத்தமிட்டு ஓத வேண்டாம்.
(அபூதாவூத்: 1332)حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ:
اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ، فَسَمِعَهُمْ يَجْهَرُونَ بِالْقِرَاءَةِ، فَكَشَفَ السِّتْرَ، وَقَالَ: «أَلَا إِنَّ كُلَّكُمْ مُنَاجٍ رَبَّهُ، فَلَا يُؤْذِيَنَّ بَعْضُكُمْ بَعْضًا، وَلَا يَرْفَعْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ فِي الْقِرَاءَةِ»، أَوْ قَالَ: «فِي الصَّلَاةِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1332.
Abu-Dawood-Alamiah-1135.
Abu-Dawood-JawamiulKalim-1136.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . ஹஸன் பின் அலீ
3 . அப்துர்ரஸ்ஸாக்
4 . மஃமர் பின் ராஷித்
5 . இஸ்மாயீல் பின் உமைய்யா
6 . அபூஸலமா
7 . அபூஸயீத் (ரலி)
1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் —> இஸ்மாயீல் பின் உமைய்யா —> அபூஸலமா —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-, அபூதாவூத்-1332, குப்ரா நஸாயீ-, இப்னு குஸைமா-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-, …
- ரபாஹ் பின் ஸைத் —> மஃமர் —> இஸ்மாயீல் பின் உமைய்யா —> அபூஸலமா —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: தாரீகு பஃக்தாத்-4446,
2 . ஃபர்வா பின் அம்ர் அல்பயாளீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-213.
3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
4 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
5 . அபூஅம்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4620.
…
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்து கொள்ளும் நோக்கில் (அல்லது) பலாய் முஸீபத்துக்கள் இறங்குவதற்கு முன்போ அல்லது பின்போ (பாதுகாப்பிற்காக வேண்டி) திருக்குர்ஆனிலிருந்து (தாயத்தை) தொங்கவிடுவதில் எவ்வித குற்றமும் இல்லை.
ஆதாரம் :- தாரமீ 7050
ஜவ்பர் இப்னு முஹம்மது இப்னு அலி ரஹ்மத்துல்லாஹ் அவர்களிடம் பயத்திற்காக வேண்டி (தாயத்து) தொங்க விடுவது பற்றிக் கேற்கப்பட்டது” அதற்கு அவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்தும் அவனுடைய பேச்சிலிருந்தும் இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சொல்லிலிருந்தும் அந்த (தாயத்து) ஆகியிருந்தால் அதை கொண்டு நோய் நிவாரணி தேடிக் கொள்ளுங்கள் என்பதாகக் கூறினார்கள்.
ஆதாரம் :- இப்னு ஹிப்பான் 3245, ஜாத் அல் மஆத் 4/326
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தாயத்து பற்றிக் கூறினார்கள். பலாய் முஸீபத்துக்கள் இறங்குவதற்கு முன்பு அதை தொங்கவிடுவற்கு தமீமத்து (தாயத்து) என்பதாக கூறப்படும். மேலும் (பலாய் முஸீபத்துக்கள்) இறங்கியதற்கு பின்னர் அதை தொங்கவிடுவதற்கு தமீமத்து (தாயத்து) என்பதாக கூறப்படமாட்டாது.
ஆதாரம் :- பைஹகி, ஹாகிம்” முஸ்தத்ரக் 4/217
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்து கொள்ளும் நோக்கில் (அல்லது) பலாய் முஸீபத்துக்கள் இறங்குவதற்கு முன்போ அல்லது பின்போ (பாதுகாப்பிற்காக வேண்டி) திருக்குர்ஆனிலிருந்து (தாயத்தை) தொங்கவிடுவதில் எவ்வித குற்றமும் இல்லை.
ஆதாரம் :- கன்ஷுல் உம்மால் 28413
இந்த செய்திகளை அதன் தரத்துடன் பதிவு செய்யுங்கள்.
வ அலைக்கும் ஸலாம். இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.