தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4359

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், அப்துல்லாஹ் இப்னு சஅத் இப்னு அபீ ஸர்ஹ் (ரலி) அவர்கள், உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்களிடம் ஒளிந்து கொண்டார். பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் அவரை அழைத்து வந்து நபி (ஸல்) அவர்களிடம் நிறுத்தினார். அப்போது அவர், “யா ரசூலல்லாஹ்! அப்துல்லாஹ்வுக்குப் பைஅத் செய்யுங்கள்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி மூன்று முறை அவரைப் பார்த்தார்கள். அந்த மூன்று முறையும் பைஅத் செய்ய மறுத்தார்கள். மூன்று முறைக்குப்பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர் தங்கள் தோழர்களை நோக்கி, “நான் இவருக்குப் பைஅத் செய்ய என் கையைத் தடுத்தபோது, இவரைப் பிடித்துக் கொல்ல ஒரு புத்திசாலி மனிதர் கூட உங்களில் இல்லையா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “யா ரசூலல்லாஹ்! உங்கள் மனதில் என்ன இருந்தது என்று எங்களுக்கு எப்படித் தெரியும்? உங்கள் கண்ணால் எங்களுக்குச் சைகை செய்திருக்கக்கூடாதா?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரு நபிக்கு கண்களால் சைகை செய்யும் துரோகம் இருக்கக் கூடாது” என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 4359)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ نَصْرٍ، قَالَ: زَعَمَ السُّدِّيُّ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، قَالَ:

لَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ، اخْتَبَأَ عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ عِنْدَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَجَاءَ بِهِ حَتَّى أَوْقَفَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، بَايِعْ عَبْدَ اللَّهِ، فَرَفَعَ رَأْسَهُ، فَنَظَرَ إِلَيْهِ ثَلَاثًا، كُلُّ ذَلِكَ يَأْبَى، فَبَايَعَهُ بَعْدَ ثَلَاثٍ، ثُمَّ أَقْبَلَ عَلَى أَصْحَابِهِ، فَقَالَ: «أَمَا كَانَ فِيكُمْ رَجُلٌ رَشِيدٌ يَقُومُ إِلَى هَذَا حَيْثُ رَآنِي كَفَفْتُ يَدِي عَنْ بَيْعَتِهِ، فَيَقْتُلُهُ؟» فَقَالُوا: مَا نَدْرِي يَا رَسُولَ اللَّهِ مَا فِي نَفْسِكَ، أَلَّا أَوْمَأْتَ إِلَيْنَا بِعَيْنِكَ؟ قَالَ: «إِنَّهُ لَا يَنْبَغِي لِنَبِيٍّ أَنْ تَكُونَ لَهُ خَائِنَةُ الْأَعْيُنِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4359.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.