Author: Farook

Bukhari-7239

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7239. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை (எப்போதும் தொழும் நேரத்தைவிட)த் தாமதப்படுத்தினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் வந்து, ‘தொழுகைக்கு வாருங்கள், இறைத்தூதர் அவர்களே! பெண்களும் குழந்தைகளும் உறங்கிவிட்டார்கள்’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையில் நீர் சொட்டிக் கொண்டிருக்க வெளியே வந்து, ‘என் சமுதாயத்தாருக்கு’ அல்லது ‘மக்களுக்கு’ சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (இஷா) தொழுகையை இந்த (இருள் கப்பிய) நேரத்தில்தான் தொழவேண்டும் என்று அவர்களுக்கு நான் உத்தரவிட்டிருப்பேன்’ என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் இந்த (இஷா)த் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! பெண்களும் குழந்தைகளும் தூங்கிவிட்டார்கள்’ என்று சொல்ல, நபி(ஸல்) அவர்கள் தங்களின் விலாவிலிருந்து வழியும் தண்ணீரைத் துடைத்தபடி, ‘என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான்

أَعْتَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالعِشَاءِ، فَخَرَجَ عُمَرُ فَقَالَ: الصَّلاَةَ يَا رَسُولَ اللَّهِ، رَقَدَ النِّسَاءُ وَالصِّبْيَانُ، فَخَرَجَ وَرَأْسُهُ يَقْطُرُ يَقُولُ: «لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي – أَوْ عَلَى النَّاسِ وَقَالَ سُفْيَانُ أَيْضًا عَلَى أُمَّتِي – لَأَمَرْتُهُمْ بِالصَّلاَةِ هَذِهِ السَّاعَةَ»، قَالَ ابْنُ جُرَيْجٍ: عَنْ عَطَاءٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ: أَخَّرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الصَّلاَةَ فَجَاءَ عُمَرُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَقَدَ النِّسَاءُ وَالوِلْدَانُ، فَخَرَجَ وَهُوَ يَمْسَحُ المَاءَ عَنْ شِقِّهِ يَقُولُ: «إِنَّهُ لَلْوَقْتُ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي»، وَقَالَ عَمْرٌو، حَدَّثَنَا عَطَاءٌ لَيْسَ فِيهِ ابْنُ عَبَّاسٍ، أَمَّا عَمْرٌو فَقَالَ: رَأْسُهُ يَقْطُرُ، وَقَالَ ابْنُ جُرَيْجٍ، يَمْسَحُ المَاءَ عَنْ شِقِّهِ، وَقَالَ عَمْرٌو: «لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي»، وَقَالَ ابْنُ جُرَيْجٍ: «إِنَّهُ لَلْوَقْتُ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي»، وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-7238

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 (இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந் திருக்கும் என்பதைச் சுட்டும்) லவ்’ எனும் (வியங்கோள் இடைச்) சொல்லைப் பயன் படுத்துவது எந்த அளவிற்குச் செல்லும்?15 அல்லாஹ் கூறுகின்றான்: உங்களைத் தடுக்கும் அளவிற்கு எனக்கு பலம் இருந்தி ருக்குமானால் (தடுத்திருப்பேன்) என்று (நபி) லூத் கூறினார். (11:80)

7238. காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் (‘லிஆன்’ செய்த ஒரு தம்பதியரைக் பற்றிக் குறிப்பிட்டார்கள். உடனே அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத்(ரஹ்) அவர்கள், ‘நான் சாட்சி இல்லாமலேயே ஒரு பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால் (இவளுக்கு அளித்திருப்பேன்)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியது இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், ‘இல்லை; அவள் வெளிப்படையாகவே தவறு செய்து வந்தவள்’ என்று கூறினார்கள்.16

Book : 94


ذَكَرَ ابْنُ عَبَّاسٍ، المُتَلاَعِنَيْنِ فَقَالَ: عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ أَهِيَ الَّتِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كُنْتُ رَاجِمًا امْرَأَةً مِنْ غَيْرِ بَيِّنَةٍ» قَالَ: لاَ، تِلْكَ امْرَأَةٌ أَعْلَنَتْ


Bukhari-7237

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது விரும்பத் தக்கதன்று.

இது தொடர்பாக நபி (ஸல்) அவர் களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஹதீஸ் அறிவித்துள்ளார்கள்.13

7237. உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களிடம் எழுத்தராகப் பணிபுரிந்தவரும் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையுமான அபுந் நள்ர் சாலிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். நான் அதை (அவர்களுக்கு)ப் படித்துக் காட்டினேன். அதில், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், எதிரிகளை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போர் அழிவுகளிலிருந்து) பாதுகாப்புக் கோருங்கள். என்றார்கள்’ என்றிருந்தது.14

பகுதி 9

(இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்பதைச் சுட்டும்) ‘லவ்’ எனும் (வியங்கோள் இடைச்) சொல்லைப் பயன்படுத்துவது எந்த அளவிற்குச் செல்லும்?15

كَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى فَقَرَأْتُهُ، فَإِذَا فِيهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تَتَمَنَّوْا لِقَاءَ العَدُوِّ، وَسَلُوا اللَّهَ العَافِيَةَ»


Bukhari-7236

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 அல்லாஹ் இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழியடைந்திருக்கமாட்டோம் என்று ஒருவர் சொல்வது.

7236. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

அகழ்ப்போரின்போது எங்களுடன் நபி(ஸல்) அவர்களும் மண்ணைச் சுமந்து எடுத்துவந்தார்கள். அவர்கள் (சுமந்து வந்த) மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்திருந்ததை பார்த்தேன். அப்போது அவர்கள், ‘(இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்.

நாங்கள் தர்மம் செய்யதிருக்கவுமாட்டோம்;

தொழுதிருக்கவுமாட்டோம்.

எனவே, எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக!

‘இவர்கள்’ அல்லது ‘(குறைஷித்) தலைவர்கள்’ எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள்.

இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால்

அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்’

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقُلُ مَعَنَا التُّرَابَ يَوْمَ الأَحْزَابِ، وَلَقَدْ رَأَيْتُهُ وَارَى التُّرَابُ بَيَاضَ بَطْنِهِ، يَقُولُ: ” لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا نَحْنُ، وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا، فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا، إِنَّ الأُلَى – وَرُبَّمَا قَالَ: المَلاَ – قَدْ بَغَوْا عَلَيْنَا، إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا أَبَيْنَا “، يَرْفَعُ بِهَا صَوْتَهُ