தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3577

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3577. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபிய்யா நிகழ்ச்சியின் போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். ஹுதைபிய்யா என்பது (மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையில் இருந்த) ஒரு கிணறாகும். நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) இறைத்தோம். எந்த அளவுக்கென்றால் அதில் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட நாங்கள்விட்டு வைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் கிணற்றின் விளிம்பில் உட்கார்ந்தார்கள்.

பிறகு, சிறிது தண்ணீரை வரவழைத்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு (தம் வாயிலிருந்து நீரை) கிணற்றுக்குள் உமிழ்ந்தார்கள். நாங்கள் சிறிது நேரம் பொறுத்திருந்தோம். பிறகு, நாங்கள் தாகம் தீரும் வரையிலும், எங்கள் வாகனங்கள் தாகம் தீரும் வரையிலும்… அல்லது எங்கள் வாகனங்கள் (தாகம் தீர்ந்து) திரும்பும் வரையிலும்… நாங்கள் (அக்கிணற்றிலிருந்து தண்ணீர்) இறைத்தோம்.

அத்தியாயம்: 61

(புகாரி: 3577)

حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ البَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

كُنَّا يَوْمَ الحُدَيْبِيَةِ أَرْبَعَ عَشْرَةَ مِائَةً وَالحُدَيْبِيَةُ بِئْرٌ، فَنَزَحْنَاهَا، حَتَّى لَمْ نَتْرُكْ فِيهَا قَطْرَةً، فَجَلَسَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَفِيرِ البِئْرِ «فَدَعَا بِمَاءٍ فَمَضْمَضَ وَمَجَّ فِي البِئْرِ» فَمَكَثْنَا غَيْرَ بَعِيدٍ ثُمَّ اسْتَقَيْنَا حَتَّى رَوِينَا، وَرَوَتْ، أَوْ صَدَرَتْ رَكَائِبُنَا


Bukhari-Tamil-3577.
Bukhari-TamilMisc-3577.
Bukhari-Shamila-3577.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.



 

 


இந்தச் செய்தி பற்றி அறிஞர் பி.ஜே அவர்களின் கருத்து:

நபிகளாரின் அற்புதம் என்ற வகையில் இதை நாம் ஏற்கலாம். ஒரே குவளை தண்ணீரில் உமிழ்ந்து ஒருவருக்கு கொடுத்தால் இப்படி எச்சில் படுத்தி கொடுக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி செய்வார்களா? என்ற சந்தேகம் வர வாய்ப்பு உண்டு. ஆனால் கிணற்றில் உமிழ்ந்தார்கள். உமிழ்ந்த பின்னர் கிணற்றில் தண்ணீர் ஊற ஆரம்பித்துள்ளதாக இச்செய்தி கூறுகிறது.

குளம் குட்டகைகளில் வாய் கொப்பளிப்பதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.