தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-34215

 

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

34215. ஒரு மனிதர் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து அதைப் பற்றி விசாரித்தார். ஆனால், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அதற்குப் பதிலளிக்காமல் புறக்கணித்துவிட்டு, மக்களுடன் அவர்களின் பேச்சில் ஈடுப்பட்டார்கள்.

பின்னர் அப்துல்லாஹ் அவர்களின் பார்வை அந்த மனிதர் மீது விழுந்தபோது, அந்த மனிதரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிவதைக் கண்டார்கள். உடனே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இதோ பார்! நீ என்னிடம் கேட்க வந்த விஷயம் என்னை மிகவும் கவலைப்படச் செய்துவிட்டது. நிச்சயமாக சொர்க்கத்திற்கு ஏழு வாசல்கள் உள்ளன. பாவமன்னிப்புக் கதவு எப்போதும் திறக்கப்பட்டே இருக்கும். மற்ற அனைத்துக் கதவுகளும் திறக்கப்படும், மூடப்படும். அந்தப் பாவமன்னிப்புக் கதவுக்கு ஒரு வானவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, (நற்செயல்களைச்) செய்வீராக; ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளாதீர்” என்று கூறினார்கள்.

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 34215)

حَدَّثَنَا، مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ، أَبِي سِنَانٍ، عَنْ، يَعْقُوبَ بْنِ سُفْيَانَ الْكَسْرِيِّ، عَنْ، عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ:

” أَتَاهُ رَجُلٌ قَدْ أَلَمَّ بِذَنْبٍ فَسَأَلَهُ عَنْهُ فَلَهَى عَنْهُ , وَأَقْبَلَ عَلَى الْقَوْمِ بِحَدِيثِهِمْ فَحَانَتْ نَظْرَةٌ مِنْ عَبْدِ اللَّهِ فَإِذَا عَيْنُ الرَّجُلِ تُهْرَاقُ , فَقَالَ: هَذَا وَإِنَّكَ أَهَمَّنِي مَا جِئْتَ تَسْأَلُنِي عَنْهُ , إِنَّ لِلْجَنَّةِ سَبْعَةَ أَبْوَابٍ كُلُّهُمَا يُفْتَحُ وَيُغْلَقُ غَيْرُ بَابِ التَّوْبَةِ , مُوَكَّلٌ بِهِ مَلَكٌ فَاعْمَلْ وَلَا تَيْأَسْ “


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-34215.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.