Author: Farook

Bukhari-3327

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3327. ‘சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பெளர்ணமி இரவில் (ஒளிவீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களின் தந்தை ஆதம்(அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60


«إِنَّ أَوَّلَ زُمْرَةٍ يَدْخُلُونَ الجَنَّةَ عَلَى صُورَةِ القَمَرِ لَيْلَةَ البَدْرِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ عَلَى أَشَدِّ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً، لاَ يَبُولُونَ وَلاَ يَتَغَوَّطُونَ، وَلاَ يَتْفِلُونَ وَلاَ يَمْتَخِطُونَ، أَمْشَاطُهُمُ الذَّهَبُ، وَرَشْحُهُمُ المِسْكُ، وَمَجَامِرُهُمْ الأَلُوَّةُ الأَنْجُوجُ، عُودُ الطِّيبِ وَأَزْوَاجُهُمُ الحُورُ العِينُ، عَلَى خَلْقِ رَجُلٍ وَاحِدٍ، عَلَى صُورَةِ أَبِيهِمْ آدَمَ، سِتُّونَ ذِرَاعًا فِي السَّمَاءِ»


Bukhari-3326

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 60.

நபிமார்களின் செய்திகள்.

பாடம்: 1

ஆதம் (அலை) அவர்களையும், அவர்களின் சந்ததிகளையும் படைத்தது.

அல்லாஹ் கூறுகின்றான்: கருப்புக் களிமண்ணில் இருந்து – மணல் கலந்த களிமண்ணில் இருந்து – மனிதனைப் படைத்தோம். (அல்குர்ஆன்: 15:26)

இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்றமெடுக்கும் களிமண் என்றும் சொல்லப்படுகிறது.

கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். நான் அதைக் கவிழ்த்தேன் என்பதைக் குறிக்கும் ‘கப்கப்துஹு’ என்பது போன்றதாகும்.

புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது.

…..அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது … (அல்குர்ஆன்: 7:189)

அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது.

(ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!)

خَلَقَ اللَّهُ آدَمَ وَطُولُهُ سِتُّونَ ذِرَاعًا، ثُمَّ قَالَ: اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ مِنَ المَلاَئِكَةِ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ، فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ، فَقَالُوا: السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ ، فَزَادُوهُ: وَرَحْمَةُ اللَّهِ، فَكُلُّ مَنْ يَدْخُلُ الجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ، فَلَمْ يَزَلِ الخَلْقُ يَنْقُصُ حَتَّى الآنَ


Bukhari-3325

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3325. சாயிப் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்.

‘விவசாய நிலத்தைப் பாதுகாக்கவோ, அல்லது கால்நடைகளைப் பாதுகாக்கவோ அல்லாமல் (தேவையின்றி) நாய் வைத்திருப்பவரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு குறைந்து விடுகிறது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(ரலி) சொல்ல கேட்டேன்.

உடனே, நான் அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் இதைக் கேட்டீர்களா?’ என்று வினவினேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; இந்த கிப்லா(இறை)யில்லம் கஅபா)வின் அதிபதியின் மீது சத்தியமாக!’ என்று பதிலளித்தார்கள்.
Book :59


«مَنِ اقْتَنَى كَلْبًا، لاَ يُغْنِي عَنْهُ زَرْعًا وَلاَ ضَرْعًا، نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ» فَقَالَ السَّائِبُ: أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِي وَرَبِّ هَذِهِ القِبْلَةِ


Bukhari-3324

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3324. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாய் வைத்திருப்பவரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ அளவு குறைந்து விடுகிறது; விவசாயப் பண்ணையைப் பாதுகாக்கும் நாயையும், கால்நடைகளைப் பாதுகாக்கும் நாயையும் தவிர. என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book :59


«مَنْ أَمْسَكَ كَلْبًا يَنْقُصْ مِنْ عَمَلِهِ كُلَّ  يَوْمٍ قِيرَاطٌ إِلَّا كَلْبَ حَرْثٍ، أَوْ كَلْبَ مَاشِيَةٍ»


Bukhari-3323

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3323. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்.
Book : 59


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الكِلاَبِ»


Bukhari-3322

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3322. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாயோ உருவப் படமோ உள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.
Book :59


«لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ»


Bukhari-3321

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3321. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது.

அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். எனவே, அது பிழைத்தது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


غُفِرَ لِامْرَأَةٍ مُومِسَةٍ، مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ، قَالَ: كَادَ يَقْتُلُهُ العَطَشُ، فَنَزَعَتْ خُفَّهَا، فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا، فَنَزَعَتْ لَهُ مِنَ المَاءِ، فَغُفِرَ لَهَا بِذَلِكَ


Bukhari-3320

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3320. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவருடைய பானத்திலாவது ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


«إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ ثُمَّ لِيَنْزِعْهُ، فَإِنَّ فِي إِحْدَى جَنَاحَيْهِ دَاءً وَالأُخْرَى شِفَاءً»


Bukhari-3319

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3319. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத் தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அவர் தம் (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார்.

அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு, ‘உங்களைக் கடித்தது ஒரேயொர் எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா?)’ என்று வஹீ (இறைச்செய்தி) அறிவித்(து அவரைக் கண்டித்)தான்.
Book : 59


نَزَلَ نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ، فَلَدَغَتْهُ نَمْلَةٌ، فَأَمَرَ بِجَهَازِهِ فَأُخْرِجَ مِنْ تَحْتِهَا، ثُمَّ أَمَرَ بِبَيْتِهَا فَأُحْرِقَ بِالنَّارِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ: فَهَلَّا نَمْلَةً وَاحِدَةً


Bukhari-3318

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3318. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருபெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) வழியாகவும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :59


«دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تُطْعِمْهَا، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ»


Next Page » « Previous Page