ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம் : 13 ஆண் அடிமைகள் மற்றும் பெண் அடிமைகளின் சாட்சியம்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அடிமையின் சாட்சியம், அவன் நேர்மையானவனாக இருந்தால் செல்லுபடியாகும். நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்களும், ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்களும், அடிமையின் சாட்சியம் செல்லும் என்று கூறினார்கள்.
அடிமையின் சாட்சியம் (எல்லா விஷயங்களிலும்) செல்லுபடியாகும்;அடிமை, தன் எஜமானுக்கு சாதகமாக அளிக்கும் சாட்சியத்தைத் தவிர என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அற்பமான, சாதாரண விஷயங்களில் மட்டும் அடிமையின் சாட்சியம் செல்லுபடியாகும் என்று ஹஸன் (ரஹ்) அவர்களும், இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்களும் கூறுகிறார்கள். (தமது கருத்தை நியாயப்படுத்தும் விதத்தில்) நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், நீங்கள் ஒவ்வொருவரும் ஆண் அடிமைகள் மற்றும் பெண் அடிமைகளின் மக்களே என்று கூறினார்கள்.
2659. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
நான் உம்மு யஹ்யா பின்த்து அபீ இஹாபை மணந்தேன். ஒரு கருப்பு நிற அடிமைப் பெண் வந்து, ‘நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கிறேன்.’ என்று கூறினாள். இச்செய்தியை நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (முகம் திருப்பி) என்னை
أَنَّهُ تَزَوَّجَ أُمَّ يَحْيَى بِنْتَ أَبِي إِهَابٍ، قَالَ: فَجَاءَتْ أَمَةٌ سَوْدَاءُ، فَقَالَتْ: قَدْ أَرْضَعْتُكُمَا، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْرَضَ عَنِّي، قَالَ: فَتَنَحَّيْتُ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، قَالَ: «وَكَيْفَ وَقَدْ زَعَمَتْ أَنْ قَدْ أَرْضَعَتْكُمَا» فَنَهَاهُ عَنْهَا
சமீப விமர்சனங்கள்