Author: Farook

Shuabul-Iman-3539

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3539. அல்லாஹ்வின் தூதரே! எந்த நோன்பு மிகச் சிறந்து? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளானை கண்ணியப்படுத்த (வைக்கப்படும்) ஷஅபான் மாத நோன்பு” என்று பதிலளித்தார்கள்.

(பிறகு) எந்த தர்மம் மிகச் சிறந்தது? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளான் மாதத்தில் வழங்கப்படும் தர்மம் (மிகச் சிறந்தது)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


قِيلَ: يَا رَسُولَ اللهِ أَيُّ الصَّوْمِ أَفْضَلُ؟، قَالَ: ” صَوْمُ شَعْبَانَ تَعْظِيمًا لِرَمَضَانَ “، قِيلَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟، قَالَ: ” صَدَقَةٌ فِي رَمَضَانَ


Kubra-Bayhaqi-8517

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8517. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், ரமளான் மாத நோன்புக்கு அடுத்து மிகச் சிறந்த நோன்பு எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளானை கண்ணியப்படுத்த (வைக்கப்படும்) ஷஅபான் மாத நோன்பு” என்று பதிலளித்தார்கள்.

(பிறகு) எது மிகச் சிறந்த தர்மம்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளான் மாதத்தில் வழங்கப்படும் தர்மம் (மிகச் சிறந்தது)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


قِيلَ: يَا رَسُولَ اللهِ أِيُّ الصَّوْمِ أَفْضَلُ؟ قَالَ: ” صَوْمُ شَعْبَانَ تَعْظِيمًا لِرَمَضَانَ ” قَالَ: فَأِيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: ” صَدَقَةٌ فِي رَمَضَانَ


Abi-Yala-3431

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3431. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், (ரமளான் மாத நோன்புக்கு அடுத்து) மிகச் சிறந்த நோன்பு எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளானை கண்ணியப்படுத்த (வைக்கப்படும்) ஷஅபான் மாத நோன்பு” என்று பதிலளித்தார்கள்.


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَفْضَلِ الصِّيَامِ، قَالَ: «شَعْبَانُ تَعْظِيمًا لِرَمَضَانَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-9763

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9763. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், (ரமளான் மாத நோன்புக்கு அடுத்து) மிகச் சிறந்த நோன்பு எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளானை கண்ணியப்படுத்த (வைக்கப்படும்) ஷஅபான் மாத நோன்பு” என்று பதிலளித்தார்கள்.


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ أَفْضَلِ الصِّيَامِ فَقَالَ: «صِيَامُ شَعْبَانَ تَعْظِيمًا لِرَمَضَانَ»


Tirmidhi-663

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

663. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், ரமளான் மாத நோன்புக்கு அடுத்து மிகச் சிறந்த நோன்பு எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளானை கண்ணியப்படுத்த (வைக்கப்படும்) ஷஅபான் மாத நோன்பு” என்று பதிலளித்தார்கள்.

(பிறகு) எது மிகச் சிறந்த தர்மம்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளான் மாதத்தில் வழங்கப்படும் தர்மம் (மிகச் சிறந்தது)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதில் வரும் ஸதகா பின் மூஸா என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களிடம் அந்த அளவிற்கு பலமானவர் அல்ல.


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الصَّوْمِ أَفْضَلُ بَعْدَ رَمَضَانَ؟ فَقَالَ: «شَعْبَانُ لِتَعْظِيمِ رَمَضَانَ»، قِيلَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «صَدَقَةٌ فِي رَمَضَانَ»


Bazzar-6496

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6496.நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் நுழைந்தால், இரட்சகனே! எங்களுக்கு ரஜபிலும் ஷஃபானிலும் பரகத் செய்வாயாக மேலும், ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக’ என்று பிரார்த்திப்பார்கள்…

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


أَنَّ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ، وَكان إِذَا كَانَ لَيْلَةَ الْجُمُعَةِ قَالَ: هَذِهِ لَيْلَةٌ عزاء ويوم أزهر.


Shuabul-Iman-3534

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3534. நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் நுழைந்தால், இரட்சகனே! எங்களுக்கு ரஜபிலும் ஷஃபானிலும் பரகத் செய்வாயாக மேலும், ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக’ என்று பிரார்த்திப்பார்கள்”

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ، قَالَ: ” اللهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ


Musnad-Ahmad-2346

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2346. நபி (ஸல்) அவர்கள், ரஜப் மாதம் வந்துவிட்டால், “அல்லாஹ்வே! ரஜபிலும், ஷஃபானிலும் எங்களுக்கு பரக்கத் (அபிவிருத்தி) செய்வாயாக! மேலும், ரமளானிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக!” என்று பிரார்த்திப்பார்கள்.

மேலும், “வெள்ளிக்கிழமையின் இரவு பிரபலமானதாகும்; அதனுடைய பகல், ஒளிவீசக்கூடியதாகும்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ، قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ، وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ»

وَكَانَ يَقُولُ: «لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ، وَيَوْمُهَا أَزْهَرُ»


Almujam-Alawsat-3939

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3939. நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் நுழைந்தால், இரட்சகனே! எங்களுக்கு ரஜபிலும் ஷஃபானிலும் பரகத் செய்வாயாக மேலும், ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக’ என்று பிரார்த்திப்பார்கள்”

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ»


Almujam-Alawsat-2098

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2098. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பார்கள். சிலவேளை அவற்றை நோற்காமல் அவ்வருடத்தில் (விடுபட்ட) முழு நோன்பும் ஒன்று சேரும் வரை பிற்படுத்துவார்கள். பின்பு (விடுபட்ட) அந்த நோன்புகளை ஷஃபானில் நோற்பார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ، فَرُبَّمَا أَخَّرَ ذَلِكَ حَتَّى يَجْتَمِعَ عَلَيْهِ صَوْمُ السَّنَةِ، وَرُبَّمَا أَخَّرَهُ حَتَّى يَصُومَ شَعْبَانَ»


Next Page » « Previous Page