Author: Farook

Nasaayi-874

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி


سَأَلْنَا عَلِيًّا عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَيُّكُمْ يُطِيقُ ذَلِكَ؟ قُلْنَا: إِنْ لَمْ نُطِقْهُ سَمِعْنَا. قَالَ: «كَانَ إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَا هُنَا كَهَيْئَتِهَا مِنْ هَا هُنَا عِنْدَ الْعَصْرِ صَلَّى رَكْعَتَيْنِ، فَإِذَا كَانَتْ مِنْ هَا هُنَا كَهَيْئَتِهَا مِنْ هَا هُنَا عِنْدَ الظُّهْرِ صَلَّى أَرْبَعًا، وَيُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا ثِنْتَيْنِ، وَيُصَلِّي قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا يَفْصِلُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ بِتَسْلِيمٍ عَلَى الْمَلَائِكَةِ الْمُقَرَّبِينَ وَالنَّبِيِّينَ وَمَنْ تَبِعَهُمْ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ»


Tirmidhi-599

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

599. ஹதீஸ் எண்-588 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

நபி (ஸல்) அவர்கள் பகலில் தொழுத உபரித் தொழுகை குறித்து அறிவிக்கப்பட்ட செய்திகளில், இதுவே மிகச் சிறந்ததாகும் என்று இஸ்ஹாக் பின் இப்ராஹிம்-இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்கள் கூறினார்.

இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை பலவீனமானது எனக் கூறினார். அவர் ஏன் அப்படி கூறினார் என்றால் (அல்லாஹ்வே மிக அறிந்தவன்) இந்த ஹதீஸ் ஆஸிம் பின் ளம்ரா —> அலீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளது. வேறு எந்த வழியிலும் இது அறிவிக்கப்படவில்லை. எனினும், சில ஹதீஸ்துறை அறிஞர்கள் ஆஸிம் பின் ளம்ராவை நம்பகமானவர் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அலீ பின் மதீனி (ரஹ்) கூறினார்:

“ஹாரிஸ் என்பவரின் ஹதீஸை விட ஆஸிம் பின் ளம்ராவின் ஹதீஸ் சிறந்தது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்” என்று ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் கூறினார் என யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் கூறினார்.


نَحْوَهُ،


Tirmidhi-598

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

நபி (ஸல்) அவர்களின் பகல் நேர உபரியானத் தொழுகைகள் எவ்வாறு இருந்தன?

598. ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் பகல் நேர (உபரித்) தொழுகை பற்றி அலி (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அப்போது அவர்கள், ‘அதற்கு உங்களால் இயலாது’ என்று கூறினார்கள். (அதற்கு) நாங்கள், ‘எங்களில் எவருக்கு இயலுமோ அவர் (அதைச் செய்யட்டும்)’ என்று கூறினோம்.

அதற்கு அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் அஸர் தொழுகையின் போது (மேற்குத் திசையில்) இருப்பது போன்று இருக்கும்போது (சூரிய உதயத்திற்கு பின்பு), நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

சூரியன் லுஹர் தொழுகையின் போது (நடுவானில்) இருப்பது போன்று இருக்கும்போது நான்கு ரக்அத்கள் (லுஹாத்) தொழுவார்கள்.

லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களும், அதற்குப் பின் இரண்டு ரக்அத்களும், அஸருக்கு முன் நான்கு ரக்அத்களும் தொழுவார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத்களுக்கும் இடையில் நெருக்கமான வானவர்கள், இறைத்தூதர்கள், மற்றும் அவர்களை அடுத்துள்ள முஃமின்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு ஸலாம் கூறிப் பிரிப்பார்கள்.


سَأَلْنَا عَلِيًّا عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ النَّهَارِ؟ فَقَالَ: إِنَّكُمْ لَا تُطِيقُونَ ذَاكَ، فَقُلْنَا: مَنْ أَطَاقَ ذَاكَ مِنَّا، فَقَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا كَهَيْئَتِهَا مِنْ هَاهُنَا عِنْدَ العَصْرِ صَلَّى رَكْعَتَيْنِ، وَإِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا كَهَيْئَتِهَا مِنْ هَاهُنَا عِنْدَ الظُّهْرِ صَلَّى أَرْبَعًا، وَصَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَقَبْلَ العَصْرِ أَرْبَعًا، يَفْصِلُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ بِالتَّسْلِيمِ عَلَى المَلَائِكَةِ المُقَرَّبِينَ، وَالنَّبِيِّينَ، وَالمُرْسَلِينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُؤْمِنِينَ، وَالمُسْلِمِينَ»


Tirmidhi-424

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

424. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களும், அதற்குப் பின் இரண்டு ரக்அத்களும் தொழுபவர்களாக இருந்தார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பொடப் பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. அலி (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் “ஹஸன்” தரத்தில் உள்ளதாகும்.

ஆஸிம் பின் ளம்ரா அவர்களின் ஹதீஸ் ஹாரிஸ் என்பவரின் ஹதீஸை விட சிறந்தது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம் என்று ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா பின் ஸயீத் அவர்கள் அறிவித்துள்ளார்.

நபித்தோழர்கள், மற்றும் அவர்களுக்குப் பின் வந்த பெரும்பாலான அறிஞர்கள் இந்த ஹதீஸின் அடிப்படையில் செயல்படுகிறார்கள். லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களை சேர்த்து தொழுவதை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இதுவே ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரின் கருத்தும் ஆகும்.

வேறுசில அறிஞர்கள் இரவிலும் பகலிலும் தொழும் உபரியான தொழுகைகளை இரண்டிரண்டாக தொழுவதையே ஏற்கிறார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத்களுக்கு இடையில் பிரிப்பதை அவர்கள் சரியானதாகக் கருதுகிறார்கள். இதுவே ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் (ரஹ்) ஆகியோரின் கருத்தும் ஆகும்.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا رَكْعَتَيْنِ»


Abu-Dawood-1272

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1272. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்துகள் தொழுதுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي قَبْلَ الْعَصْرِ رَكْعَتَيْنِ»


Ibn-Majah-1174

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒரு ரக்அத் வித்ர் தொழுவது பற்றி வந்துள்ளவை.

1174. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، وَيُوتِرُ بِرَكْعَةٍ»


Ibn-Majah-1161

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

பகல் நேர உபரியான தொழுகைகள் குறித்து வந்துள்ளவை.

1161. ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் பகல் நேர உபரியான தொழுகைகள் பற்றிக் கூறுங்கள்” என்று கேட்டோம். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “அதை நீங்கள் தாங்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள். நாங்கள், “அதிலிருந்து எங்களால் முடிந்ததை எடுத்துக்கொள்வதற்காகவாவது எங்களுக்கு அதை அறிவியுங்கள்” என்றோம்.

அதற்கு அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதுவிட்டு சிறிது நேரம் பொறுத்திருப்பார்கள். கிழக்குத் திசையில் சூரியன் இந்த அளவுக்கு (உதித்து) வரும்போது – (அதாவது மேற்கு திசையில் அஸருடைய நேரத்தின் அளவுக்கு வரும்போது) – எழுந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.

பிறகு, சிறிது நேரம் பொறுத்திருப்பார்கள். கிழக்குத் திசையில் சூரியன் இந்த அளவுக்கு (உயர்ந்து) வரும்போது – (அதாவது மேற்குத் திசையில் ளுஹருடைய நேரத்தின் அளவுக்கு உயரும்போது) – எழுந்து நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள்.

மேலும், சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் ளுஹர் தொழுகைக்கு முன்னால் நான்கு ரக்அத்துகளும், அதற்குப் பின்னால் இரண்டு ரக்அத்துகளும் தொழுவார்கள்.

அஸர் தொழுகைக்கு முன்னால் நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள்,

سَأَلْنَا عَلِيًّا، عَنْ تَطَوُّعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ فَقَالَ: إِنَّكُمْ لَا تُطِيقُونَهُ، فَقُلْنَا: أَخْبِرْنَا بِهِ نَأْخُذْ مِنْهُ مَا اسْتَطَعْنَا، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا صَلَّى الْفَجْرَ يُمْهِلُ، حَتَّى إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا – يَعْنِي مِنْ قِبَلِ الْمَشْرِقِ – بِمِقْدَارِهَا مِنْ صَلَاةِ الْعَصْرِ مِنْ هَاهُنَا – يَعْنِي مِنْ قِبَلِ الْمَغْرِبِ – قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ يُمْهِلُ حَتَّى إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا، – يَعْنِي مِنْ قِبَلِ الْمَشْرِقِ – مِقْدَارَهَا مِنْ صَلَاةِ الظُّهْرِ مِنْ هَاهُنَا قَامَ فَصَلَّى أَرْبَعًا، وَأَرْبَعًا قَبْلَ الظُّهْرِ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَأَرْبَعًا قَبْلَ الْعَصْرِ، يَفْصِلُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ بِالتَّسْلِيمِ عَلَى الْمَلَائِكَةِ الْمُقَرَّبِينَ وَالنَّبِيِّينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ الْمُسْلِمِينَ وَالْمُؤْمِنِينَ»
قَالَ عَلِيٌّ: فَتِلْكَ سِتَّ عَشْرَةَ رَكْعَةً، تَطَوُّعُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ، وَقَلَّ مَنْ يُدَاوِمُ عَلَيْهَا،
قَالَ وَكِيعٌ: زَادَ فِيهِ أَبِي: فَقَالَ حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ يَا أَبَا إِسْحَاقَ مَا أُحِبُّ أَنَّ لِي بِحَدِيثِكَ هَذَا مِلْءَ مَسْجِدِكَ هَذَا ذَهَبًا


Musnad-Ahmad-6400

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6400.


صَلَّيْتُ مَعَ ابْنِ عُمَرَ بِجَمْعٍ، فَأَقَامَ، فَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثًا، ثُمَّ صَلَّى الْعِشَاءَ رَكْعَتَيْنِ، بِإِقَامَةٍ وَاحِدَةٍ، قَالَ: فَسَأَلَهُ خَالِدُ بْنُ مَالِكٍ؟ فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ مِثْلَ هَذَا فِي هَذَا الْمَكَانِ»


Musnad-Ahmad-5538

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5538.


أَنَّهُ شَهِدَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ أَقَامَ بِجَمْعٍ قَالَ: وَأَحْسِبُهُ وَأَذَّنَ فَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثًا، ثُمَّ سَلَّمَ فَصَلَّى الْعِشَاءَ رَكْعَتَيْنِ ثُمَّ قَالَ: صَنَعَ بِنَا ابْنُ عُمَرَ فِي هَذَا الْمَكَانِ مِثْلَ هَذَا، وَقَالَ ابْنُ عُمَرَ: «صَنَعَ بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَكَانِ مِثْلَ هَذَا»


Musnad-Ahmad-5506

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5506.


شَهِدْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ بِجَمْعٍ فَأَقَامَ الصَّلَاةَ، فَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثًا وَسَلَّمَ، وَصَلَّى الْعَتَمَةَ رَكْعَتَيْنِ، وَحَدَّثَ سَعِيدٌ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ صَلَّاهَا فِي هَذَا الْمَكَانِ فَصَنَعَ مِثْلَ ذَا، وَحَدَّثَ ابْنُ عُمَرَ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ هَذَا فِي هَذَا الْمَكَانِ»


Next Page » « Previous Page