490. அபூபக்கர்(ரலி) அவர்கள், உமர்(ரலி) அவர்கள் ஆகியோரும் இவ்வாறே செய்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
أَنَّ أَبَا بَكْرٍ وَعُمَرَ كَانَا يَفْعَلَانِ ذَلِكَ
490. அபூபக்கர்(ரலி) அவர்கள், உமர்(ரலி) அவர்கள் ஆகியோரும் இவ்வாறே செய்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
أَنَّ أَبَا بَكْرٍ وَعُمَرَ كَانَا يَفْعَلَانِ ذَلِكَ
பாடம் 112
பெருநாட்களில் குத்பாவிற்கு முன் தொழுதல் !
489. நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாட்களில் பிரசங்கம் செய்யும் முன் நபி(ஸல்) அவர்கள் தொழ வைப்பார்கள் என இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ الْأَضْحَى قَبْلَ الْخُطْبَةِ»
488. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் பெருநாள் அன்று தொழுமிடத்திற்கு தொழச் செல்லும் முன் குளித்துக் கொள்வார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ قَبْلَ أَنْ يَغْدُوَ إِلَى الْمُصَلَّى»
பாடம் 111
பெருநாட்களில் குளித்தல். அவற்றில் பாங்கு, இகாமத்?
487. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இரந்து இன்று வரை நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாட்களில் தொழ பாங்கு, இகாமத் இல்லை என பல அறிஞர்களும் கூறியதாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
لَمْ يَكُنْ فِي عِيدِ الْفِطْرِ وَلَا فِي الْأَضْحَى، نِدَاءٌ، وَلَا إِقَامَةٌ، مُنْذُ زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَوْمِ،
قَالَ مَالِكٌ وَتِلْكَ السُّنَّةُ الَّتِي لَا اخْتِلَافَ فِيهَا عِنْدَنَا
486. உங்களில் ஒருவர் தூங்கும் போது, அவாரின் தலை உச்சியில் ஷைத்தான் மூன்று முடிச்சுக்களைப் போடுகின்றான். ஒவ்வொரு முடிச்சின் போதும் நீண்ட இரவு நேரம் உள்ளது. நன்றாகத் தூங்கு’ என்று கூறுவான். அப்போது அவர் விழித்து, அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒருமுடிச்சு அவிழ்ந்து விடும். அவர் ஒளுச் செய்து விட்டால், ஒரு முடிச்சு அவிழ்ந்து விடும். அடுத்து அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. இதனால் அவர் சுதந்திரமானவராக உளத்தூய்மையானவராக காலையில் எழுவார். இவ்வாறு நடந்து கொள்ளவில்லையென்றால், கடின இதயமானவராக, சோம்பேறியாக எழுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
«يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ، إِذَا هُوَ نَامَ، ثَلَاثَ عُقَدٍ. يَضْرِبُ مَكَانَ كُلِّ عُقْدَةٍ، عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ، فَارْقُدْ. فَإِنِ اسْتَيْقَظَ، فَذَكَرَ اللَّهَ، انْحَلَّتْ عُقْدَةٌ. فَإِنْ تَوَضَّأَ، انْحَلَّتْ عُقْدَةٌ. فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقَدُهُ. فَأَصْبَحَ نَشِيطًا، طَيِّبَ النَّفْسِ. وَإِلَّا، أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلَانَ»
பாடம்: 110
தொழுகையில் ஆர்வமூட்டல்.
485. ‘நஜ்த் என்ற ஊரைச் சார்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரின் குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளைத் தொழுகைகள்’ என்றார்கள்.
உடனே அவர் ‘அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?’ என்றார். அதற்கவர்கள் ‘நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை’ என்றார்கள். அடுத்து ‘ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் ‘அதைத்தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமையுண்டா?’ என்றார். அதற்கவர்கள் ‘நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை’ என்றார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் கூறினார்கள். அதற்கவர் ‘அதைத் தவிர வேறு தர்மங்கள் கடமையில்லை’ என்றார்கள். உடனே அம்மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்றார். அப்போது ‘இவர் கூறியதற்கேற்ப நடந்தால் வெற்றியடைந்துவிட்டார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்
جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ، ثَائِرُ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ، وَلَا نَفْقَهُ مَا يَقُولُ. حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الْإِسْلَامِ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ»، قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ»، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ»، قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ»، قَالَ: وَذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «الزَّكَاةَ». فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ»، قَالَ: فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا، وَلَا أَنْقُصُ مِنْهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ الرَّجُلُ إِنْ صَدَقَ»
484. உமர்(ரலி) அவர்கள் பள்ளியில் ஓரத்தில் ‘பதீஹா’ என்று பெயாரிடப்பட்ட ஒரு திண்ணையைக் காட்டினார்கள். ‘ஒருவர் சப்தமிட்டு பேசவோ, பாட்டுப் பாடவோ விரும்பினால் இந்த திண்ணையின் பக்கம் வரட்டும்’ என்று உமர்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ بَنَى رَحْبَةً فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، تُسَمَّى الْبُطَيْحَاءَ، وَقَالَ: «مَنْ كَانَ يُرِيدُ أَنْ يَلْغَطَ أَوْ يُنْشِدَ شِعْرًا، أَوْ يَرْفَعَ صَوْتَهُ، فلْيَخْرُجْ إِلَى هَذِهِ الرَّحْبَةِ»
483. பள்ளியில் வியாபாரம் செய்வோரைக் கண்டால் அவரை அழைத்து உன்னிடம் இருப்பது என்ன? நீ என்ன விரும்புகின்றாய்? என்று அதாஉ இப்ன யஸார் அவர்கள் கேட்பார்கள். அவர் தன் வியாபாரம் செய்வதைப் பற்றிக் கூறினால், ‘நீ உலக கடைவீதிக்குச் செல், இதுவோ மறுமையின் கடையாகும்’ என்று கூறுவார்கள் என்று தனக்கு செய்தி கிடைத்தாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ كَانَ إِذَا مَرَّ عَلَيْهِ بَعْضُ مَنْ يَبِيعُ فِي الْمَسْجِدِ، دَعَاهُ فَسَأَلَهُ مَا مَعَكَ؟ وَمَا تُرِيدُ؟ فَإِنْ أَخْبَرَهُ أَنَّهُ يُرِيدُ أَنْ يَبِيعَهُ، قَالَ: «عَلَيْكَ بِسُوقِ الدُّنْيَا. وَإِنَّمَا هَذَا سُوقُ الْآخِرَةِ»
482. இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவ்விருவாரில் ஒருவர் மற்றவருக்கு 40 நாட்களுக்கு (இரவுகளுக்கு) முன் இறந்து விட்டார். நபி(ஸல்) அவர்களிடம் முதல் நபாரின் சிறப்புப் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இரண்டாம் நபர் முஸ்லிமாக இருக்கவில்லையா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! ஆம். அவர் குற்றமற்றவராக இருந்தார் என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அவாரின் தொழுகை எதை ஏற்படுத்தும் என்பதை உங்களுக்கு அறிவித்தது எது?’ நிச்சயமாக தொழுகையின் உதாரணம், உங்களிருவாரின் வாசலில் நிறைந்து ஓடும் ஆறு உதாரணமாகும். அதில் அவர் ஐந்து தடவை ஒவ்வொரு நாளும் குளிக்கிறார். அவாரின் அழுக்கு ஏதும் இருக்காது என அறிவீர்கள் தானே. (இவ்வாறு தான்) அவாரின் தொழுகை எதைப் பெற்றுத்தந்தது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்’ என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள். இதை ஸஹ்து இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் கூறியதாக ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
….
இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் தனது சகோதரருக்கு நாற்பது இரவுகள் முன்னதாக மரணமடைந்தார். முந்தியவரின் சிறப்பு நபி (ஸல்) அவர்களிடம் குறிப்பிடப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மற்றவர் முஸ்லிமாக இருக்கவில்லையா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம், அல்லாஹ்வின்
كَانَ رَجُلَانِ أَخَوَانِ. فَهَلَكَ أَحَدُهُمَا قَبْلَ صَاحِبِهِ بِأَرْبَعِينَ لَيْلَةً. فَذُكِرَتْ فَضِيلَةُ الْأَوَّلِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ: «أَلَمْ يَكُنِ الْآخَرُ مُسْلِمًا؟» قَالُوا: بَلَى. يَا رَسُولَ اللَّهِ، وَكَانَ لَا بَأْسَ بِهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا يُدْرِيكُمْ مَا بَلَغَتْ بِهِ صَلَاتُهُ؟» إِنَّمَا مَثَلُ الصَّلَاةِ كَمَثَلِ نَهْرٍ غَمْرٍ عَذْبٍ بِبَابِ أَحَدِكُمْ. يَقْتَحِمُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ. فَمَا تَرَوْنَ ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ؟ فَإِنَّكُمْ لَا تَدْرُونَ مَا بَلَغَتْ بِهِ صَلَاتُهُ؟
481. எவர் தான் செய்யும் (வணக்க வழிபாட்டுச்) செயலில் நிரந்தரமாக இருக்கிறாரோ அவாரின் அந்தச் செயலே நபி(ஸல்) அவர்களுக்கு மிக விருப்பமாகும் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
كَانَ «أَحَبُّ الْعَمَلِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي يَدُومُ عَلَيْهِ صَاحِبُهُ»
சமீப விமர்சனங்கள்