Author: Farook

muwatta-malik-470

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

470. ஒவ்வொரு ரக்அத்திலும் (இருப்பில்) உட்கார வேண்டிய தொழுகை எது? எனக் கேட்ட ஸயீத் இப்னு முஸய்யப் அவர்கள், பின்பு அவர்களாகவே, ”அது மஹ்ரிப் தான்””.உமக்கு அதில் ஒரு ரக்அத் தவறி விட்டால் தான் (அந்நிலை ஏற்படும்) என்றும் கூறினார்கள் என இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்.


«مَا صَلَاةٌ يُجْلَسُ فِي كُلِّ رَكْعَةٍ مِنْهَا؟» ثُمَّ قَالَ سَعِيدٌ: «هِيَ الْمَغْرِبُ إِذَا فَاتَتْكَ مِنْهَا رَكْعَةٌ، وَكَذَلِكَ سُنَّةُ الصَّلَاةِ كُلُّهَا»


muwatta-malik-469

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

469. அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்களிடம் ”ஒட்டகம் கட்டுமிடத்தில் நான் தொழலாமா? என அங்கே தொழுவதை தவறாக கருதாத முஹாஜிரின்கள் ஒருவர் கேட்டார். அதற்கு அப்துல்லா(ரலி) அவர்கள் ”கூடாது””. எனினும் ஆட்டுத் தொழுவத்தில் தொழுது கொள்”” என்று கூறினார்கள் என உர்வா கூறுகின்றார்கள்.


أَأُصَلِّي فِي عَطَنِ الْإِبِلِ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ: «لَا وَلَكِنْ صَلِّ فِي مُرَاحِ الْغَنَمِ»


muwatta-malik-468

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

468. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கிப்லாவின் சுவற்றில் தன் முதுகை சாய்த்து (அமர்ந்து) இருந்த போது, நான் தொழுது கொண்டிருந்தேன். என் தொழுகையை நான் முடித்ததும், (என்) இடது புறத்தில் இருந்த அவர்களை நோக்கித் திரும்பினேன். ”நீ உன் வலது புறம் திரும்பாமல் இருக்கக் காரணம் என்ன?”” என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவாகள் கேட்டார்கள். உங்களை (இடதுபுறம்) பார்த்தேன். அதனால் உங்கள் பக்கம் திரும்பினேன் என்று நான் கூறினேன். ”நிச்சயமாக நீ சாரியாகச் சொன்னாய். சில பேர் வலது பக்கம் (மட்டும்) திரும்பு”” என்கின்றனர். (அவ்வாறு அல்ல). நீ தொழுதால் நீ உன் வலத புறம் (திரும்ப) விரும்பினாலும், இடப்புறம் (திரும்ப) விரும்பினாலும் நீ விரும்பும் பக்கம் திரும்பு என்னு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதாக வாயிஉ இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.


كُنْتُ أُصَلِّي وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مُسْنِدٌ ظَهْرَهُ إِلَى جِدَارِ الْقِبْلَةِ، فَلَمَّا قَضَيْتُ صَلَاتِي انْصَرَفْتُ إِلَيْهِ مِنْ قِبَلِ شِقِّي الْأَيْسَرِ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «مَا مَنَعَكَ أَنْ تَنْصَرِفَ عَنْ يَمِينِكَ؟» قَالَ فَقُلْتُ: رَأَيْتُكَ، فَانْصَرَفْتُ إِلَيْكَ. قَالَ عَبْدُ اللَّهِ: ” فَإِنَّكَ قَدْ أَصَبْتَ. إِنَّ قَائِلًا يَقُولُ: انْصَرِفْ عَنْ يَمِينِكَ، فَإِذَا كُنْتَ تُصَلِّي، فَانْصَرِفْ حَيْثُ شِئْتَ. إِنْ شِئْتَ عَنْ يَمِينِكَ. وَإِنْ شِئْتَ عَنْ يَسَارِكَ


muwatta-malik-467

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

467. ஒருவர் தொழுகையைத் (தொழ) மறந்து அவர் (மற்றொரு தொழுகையை) இமாமுடன் தொழும் போதே நினைவு வருமாயின் இமாம் சலாம் கொடுத்ததும் ஏற்கனவே மறந்த தொழுகையைத் தொழட்டும். பின்பு (அந்த நேரத்;திற்குரிய தொழுகையான) மற்றொன்றை மீண்டும் தொழட்டும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


«مَنْ نَسِيَ صَلَاةً فَلَمْ يَذْكُرْهَا إِلَّا وَهُوَ مَعَ الْإِمَامِ، فَإِذَا سَلَّمَ الْإِمَامُ، فَلْيُصَلِّ الصَّلَاةَ الَّتِي نَسِيَ، ثُمَّ لِيُصَلِّ بَعْدَهَا الْأُخْرَى»


muwatta-malik-466

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

466. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த ஒருவரைத் தாண்டி செல்லும் போது, அவருக்கு ஸலாம் கூறினார்கள். அவர் வார்த்தையால்( வ அலைக்குமுஸ் ஸலாம்) என்று பதில் கூறினார்கள். அவரிடம் திரும்பி வந்த அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகின்ற உங்களில் ஒருவருக்கு ஸலாம் கூறினால் அவர் பேச வேண்டாம், தன் கையால் சமிக்ஞை செய்யட்டும் எனக் கூறினார்கள் என்று நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ مَرَّ عَلَى رَجُلٍ وَهُوَ يُصَلِّي. فَسَلَّمَ عَلَيْهِ. فَرَدَّ الرَّجُلُ كَلَامًا. فَرَجَعَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فَقَالَ لَهُ: «إِذَا سُلِّمَ عَلَى أَحَدِكُمْ وَهُوَ يُصَلِّي فَلَا يَتَكَلَّمْ، وَلْيُشِرْ بِيَدِهِ»


muwatta-malik-465

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

465. மக்கள் தொழுது முடித்த நிலையில் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் பள்ளிக்கு வந்தால் அதற்கு முன்னால் எதையும் தொழாமல் கடமையான தொழுகையைத் தொழ ஆரம்பித்து விடுவார்கள். இதை ரபீஆ இப்னு அபூ அப்துர் ரஹ்மான் கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «كَانَ إِذَا جَاءَ الْمَسْجِدَ، وَقَدْ صَلَّى النَّاسُ، بَدَأَ بِصَلَاةِ الْمَكْتُوبَةِ، وَلَمْ يُصَلِّ قَبْلَهَا شَيْئًا»


muwatta-malik-464

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

464. நோயாளிக்கு ஸஜ்தா செய்ய இயலவில்லையானால் தன் தலையால் அவன் சைகை செய்வான். தன் நெற்றியின் பக்கம் எதையும் உயர்த்த வேண்டாம் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


«إِذَا لَمْ يَسْتَطِعِ الْمَرِيضُ السُّجُودَ، أَوْمَأَ بِرَأْسِهِ إِيمَاءً، وَلَمْ يَرْفَعْ إِلَى جَبْهَتِهِ شَيْئًا»


muwatta-malik-463

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

463. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்!

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


«اجْعَلُوا مِنْ صَلَاتِكُمْ فِي بُيُوتِكُمْ»


muwatta-malik-462

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

462. மது அருந்துபவன், திருடுபவன், விபச்சாரம் செய்பவன் ஆகியோரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் (நபித்தோழர்களிடம்) கேட்டார்கள். (இவர்கள் சம்பந்தமான தண்டனை பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்பு இது நடந்ததாகும்) எனவே அவர்கள், “அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதருமே மிக அறிந்தவர்கள் என்று பதில் கூறினர். ”அவைகள் மோசமான செயல்கள். அவைகளுக்கு தண்டனையுண்டு. தன்னுடைய தொழுகையில் ஒருவன் திருடுவதே திருட்டில் மிகக் கெட்டது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! ஒருவர் தொழுகையில் எப்படித் திருட முடியும்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ”தொழுகையின் ருகூஉ வையும், ஸஜ்தாவையும் முழுமையாக நிறைவேற்றாமல் தொழுவதே (தொழுகையில் திருடுவதாகும்) என்று நபி (ஸல்) அவா்கள் பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் முர்ரா அல்அன்ஸாரீ (ரஹ்)


«مَا تَرَوْنَ فِي الشَّارِبِ، وَالسَّارِقِ وَالزَّانِي؟ وَذَلِكَ قَبْلَ أَنْ يُنْزَلَ فِيهِمْ»، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «هُنَّ فَوَاحِشُ. وَفِيهِنَّ عُقُوبَةٌ. وَأَسْوَأُ السَّرِقَةِ الَّذِي يَسْرِقُ صَلَاتَهُ»، قَالُوا: وَكَيْفَ يَسْرِقُ صَلَاتَهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودَهَا»


muwatta-malik-461

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

461. நபி(ஸல்) அவர்கள் வாகனத்திலோ, நடந்தோ ‘குபா” விற்கு வருவார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَأْتِي قُبَاءَ رَاكِبًا وَمَاشِيًا»


Next Page » « Previous Page