பாடம் 101
சுப்ஹில் குனூத் ஓதுதல்.
438. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகை எதிலும் குனூத் ஓத மாட்டார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «لَا يَقْنُتُ فِي شَيْءٍ مِنَ الصَّلَاةِ»
பாடம் 101
சுப்ஹில் குனூத் ஓதுதல்.
438. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகை எதிலும் குனூத் ஓத மாட்டார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «لَا يَقْنُتُ فِي شَيْءٍ مِنَ الصَّلَاةِ»
437. தொழுகையில் ஒருவர் தன் வலது கையை இடது குடங்கையில் வைக்க வேண்டும் என மக்கள் ஏவப்பட்டிருந்தனர் என்று ஸஹ்ல் இப்னு ஸஹ்து அஸ்ஸுஇதி(ரலி) அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸ் (நபி(ஸல்) வரை) உயர்த்தப்பட்டதாகவே தவிர நான் அறியவில்லை என அபூ ஹாஸிம் கூறுகின்றார்கள்.
(இது புகாரியில் இடம் பெற்றுள்ளது).
«كَانَ النَّاسُ يُؤْمَرُونَ أَنْ يَضَعَ الرَّجُلُ الْيَدَ الْيُمْنَى عَلَى ذِرَاعِهِ الْيُسْرَى فِي الصَّلَاةِ» قَالَ أَبُو حَازِمٍ: لَا أَعْلَمُ إِلَّا أَنَّهُ يَنْمِي ذَلِكَ
பாடம் 100
தொழுகையில் கைகளை ஒன்றின் மீது ஒன்று வைத்தல்
436. உனக்கு வெட்கமில்லையானால் நீ விரும்பியதை செய்து கொள் என்பது நபி(ஸல்) அவர்களின் சொல்லில் உள்ளதாகும். இரண்டு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது தொழுகையில் வைப்பதும், வலது கையை இடது கையின் மீது வைப்பதும், நோன்பு திறப்பதை சீக்கிரம் செய்வதும், ஸஹர் செய்வதை தாமதமாகச் செய்வதும் நபிவழியாகும் என அபூமகாரிகல் பஸ்ரி அவர்களின் மகன் அப்துல் காரிம் கூறுகிறார்கள்.
«مِنْ كَلَامِ النُّبُوَّةِ إِذَا لَمْ تَسْتَحْيِ فَافْعَلْ مَا شِئْتَ، وَوَضْعُ الْيَدَيْنِ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فِي الصَّلَاةِ، يَضَعُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى وَتَعْجِيلُ الْفِطْرِ وَالِاسْتِينَاءُ بِالسَّحُورِ»
435. உதுமான்(ரலி) அவர்களுடன் நான் இருந்தேன். தொழுகை நேரம் வந்தது. நான் எனக்குரிய கடமைகள் பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். தன் செருப்புகளால் பொடிக் கற்களை சரிசமப்படுத்திய அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஸஃப்புகளைச் சரி செய்யும்படி அவர்கள் நியமித்த சிலர் அவர்களிடம் வந்து ஸஃப்புகள் சரியாகி விட்டது என தகவல் கூறினார்கள். ”ஸஃப்பில் சேர்ந்து கொள்”” என என்னிடம் கூறினார்கள். பின்பு தக்பீர் கூறினார்கள் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
كُنْتُ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَقَامَتِ الصَّلَاةُ، وَأَنَا أُكَلِّمُهُ فِي أَنْ يَفْرِضَ لِي، فَلَمْ أَزَلْ أُكَلِّمُهُ، وَهُوَ يُسَوِّي الْحَصْبَاءَ بِنَعْلَيْهِ، حَتَّى جَاءَهُ رِجَالٌ، قَدْ كَانَ وَكَلَهُمْ بِتَسْوِيَةِ الصُّفُوفِ، فَأَخْبَرُوهُ أَنَّ الصُّفُوفَ قَدِ اسْتَوَتْ. فَقَالَ لِي: «اسْتَوِ فِي الصَّفِّ، ثُمَّ كَبَّرَ»
பாடம் 99
ஸஃப்பு(வரிசை)களைச் சரி செய்தல்
434. உமர்(ரலி) அவர்கள் ஸஃப்புகளைச் சரி செய்யும்படி (சிலருக்குக்) கட்டளையிட்டார்கள். அவர்கள், அவர்களிடம் வந்து ஸஃப்பு சரியாக உள்ளது என தகவல் கூறியதுமே தக்பீர் (தஹ்ரிமா) கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ «يَأْمُرُ بِتَسْوِيَةِ الصُّفُوفِ»، فَإِذَا جَاءُوهُ فَأَخْبَرُوهُ أَنْ قَدِ اسْتَوَتْ. «كَبَّرَ»
433. பொடிக் கற்களை அப்புறப்படுத்துவது என்பது ஒரு தடவை தான் அதை விடுவது சிவப்பு ஒட்டகங்களை விட (அதாவது அவை கிடைப்பதை விட) சிறந்ததாகும் என்று அபூதர்(ரலி) அவர்கள் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்தது என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.
أَنَّ أَبَا ذَرٍّ كَانَ يَقُولُ: «مَسْحُ الْحَصْبَاءِ مَسْحَةً وَاحِدَةً، وَتَرْكُهَا، خَيْرٌ مِنْ حُمْرِ النَّعَمِ»
பாடம் 98
தொழுகையில் பொடிக் கற்களை தடவுதல்
432. அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் ஸஜ்தா செய்யும் போது தன் நெற்றியை வைப்பதற்காக (தரையில் உள்ள) பொடிக் கற்களை லேசாகத் தடவுவதை நான் பார்த்தேன் என அபூ ஜஹ்ஃபர் காரி கூறுகின்றார்கள்.
رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ إِذَا أَهْوَى لِيَسْجُدَ، «مَسَحَ الْحَصْبَاءَ لِمَوْضِعِ جَبْهَتِهِ، مَسْحًا خَفِيفًا»
431. திறந்த வெளியில் தடுப்பேதுமின்றி தன் தந்தை உர்வா தொழுவார்கள் என ஹிஷாம் கூறுகின்றார்கள்.
أَنَّ أَبَاهُ كَانَ: «يُصَلِّي فِي الصَّحْرَاءِ إِلَى غَيْرِ سُتْرَةٍ»
பாடம் 97
பயணி தன் தொழுகையின் போது முன்னே தடுப்பை ஏற்படுத்துதல் !
430. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுதால் தன் வாகனத்தையே தடுப்பாக்கிக் கொள்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَسْتَتِرُ بِرَاحِلَتِهِ إِذَا صَلَّى»
429. தொழுகையாளியின் குறுக்கே நடப்பதினால் தொழுகையை முறித்து விடாது என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள் என ஸாலிம் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.
«لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ مِمَّا يَمُرُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي»
சமீப விமர்சனங்கள்