Author: Abdul Hakkim

Hakim-59

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

59. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராகவும், பிறர் அவருடன் பழகக்கூடிய நிலையிலும் இருக்கவேண்டும். ஒருவர் பிறருடன் பழகாதவராகவும், பிறர் அவருடன் பழகாத நிலையிலும் இருந்தால் அவரிடத்தில் எந்த நன்மையும் இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இது புகாரி, முஸ்லிம் ஆகிய இரு இமாம்களின் நிபந்தனையின்படி உள்ள சரியான செய்தியாகும். இதில் நான் எந்த குறையையும் அறியவில்லை. எனினும் அவ்விருவரும் இதை (அவர்களின் நூல்களில்) பதிவு செய்யவில்லை.


«إِنَّ الْمُؤْمِنَ يَأْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ وَلَا يُؤْلَفُ»


Musnad-Ahmad-9198

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9198. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராக இருக்கவேண்டும். ஒருவர் பிறருடன் பழகாதவராகவும், பிறர் அவருடன் பழகாத நிலையிலும் இருந்தால் அவரிடத்தில் எந்த நன்மையும் இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الْمُؤْمِنُ مَأْلَفٌ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ»


Almujam-Alawsat-5787

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5787. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராகவும், பிறர் அவருடன் பழகக்கூடிய நிலையிலும் இருப்பார். ஒருவர் பிறருடன் பழகாதவராகவும், பிறர் அவருடன் பழகாத நிலையிலும் அவர் இருந்தால் அவரிடத்தில் எந்த நன்மையும் இல்லை.

மக்களில் சிறந்தவர், மக்களுக்கு அதிகம் பயன்தரக்கூடியவரே ஆவார்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸை இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அப்துல்மலிக் பின் அபூகரீமா என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். மேலும் இவரிடமிருந்து அலீ பின் பஹ்ராம் என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.


«الْمُؤْمِنُ يَأْلَفُ وَيُؤْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ، وَخَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ»


Musnad-Ahmad-5626

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5626. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முஸ்லிம் நாற்பது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரைப் பல வகையான நோய்களிலிருந்து பாதுகாப்பான்; பைத்தியம், தொழுநோய், வெண்புள்ளி போன்ற நோய்களிலிருந்து அவரைப் பாதுகாப்பான்.

அவர் ஐம்பது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரது விசாரணையை எளிதாக்குவான். அவர் அறுபது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரிடம் பாவமீட்சியை வழங்குவான். அதன் காரணமாக அல்லாஹ் அவரைநேசிப்பான்.

அவர் எழுபது வயதை அடைந்தால், அல்லாஹ்வும் வானவர்களும் அவரை நேசிப்பார்கள். அவர் எண்பது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரது நற்செயல்களை ஏற்றுக்கொள்வான். அவரது தீமைகளை அழிப்பான்.

அவர் தொண்ணூறு வயதை அடைந்தால், அவரது முந்திய, பிந்திய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான். மேலும் அவர் பூமியில் அல்லாஹ்வின் கைதி என்று அழைக்கப்படுவார். அவர் (மறுமையில்) தனது குடும்பத்தினருக்காக பரிந்துரை செய்யவும் அனுமதிக்கப்படுவார்.


” إِذَا بَلَغَ الرَّجُلُ الْمُسْلِمُ أَرْبَعِينَ سَنَةً، آمَنَهُ اللَّهُ مِنْ أَنْوَاعِ الْبَلَايَا: مِنَ الْجُنُونِ، وَالْبَرَصِ، وَالْجُذَامِ. وَإِذَا بَلَغَ الْخَمْسِينَ لَيَّنَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ حِسَابَهُ، وَإِذَا بَلَغَ السِّتِّينَ، رَزَقَهُ اللَّهُ إِنَابَةً يُحِبُّهُ عَلَيْهَا، وَإِذَا بَلَغَ السَّبْعِينَ، أَحَبَّهُ اللَّهُ وَأَحَبَّهُ أَهْلُ السَّمَاءِ، وَإِذَا بَلَغَ الثَّمَانِينَ، تَقَبَّلَ اللَّهُ مِنْهُ حَسَنَاتِهِ وَمَحَا عَنْهُ سَيِّئَاتِهِ، وَإِذَا بَلَغَ التِّسْعِينَ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ وَسُمِّيَ أَسِيرَ اللَّهِ فِي الْأَرْضِ وَشُفِّعَ فِي أَهْلِهِ “


Darimi-2723

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஒரு இடத்தில் தங்கினால் இரண்டு ரக்அத்கள் தொழுதல்.

2723. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு இடத்தில் தங்கினால், அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழுத பின்னரே புறப்படுவார்கள். அல்லது அந்த இடத்திற்கு விடை கொடுக்கும் விதமாக இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுச் செல்வார்கள்.


அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்-தாரிமீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் உஸ்மான் பின் ஸஃத் பலவீனமானவர் ஆவார்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ إِذَا نَزَلَ مَنْزِلًا، لَمْ يَرْتَحِلْ مِنْهُ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ، أَوْ يُوَدِّعَ الْمَنْزِلَ بِرَكْعَتَيْنِ»


Shuabul-Iman-1580

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1580.


” الدُّنْيَا مَلْعُونَةٌ، مَلْعُونٌ مَا فِيهَا إِلَّا ذِكْرَ اللهِ أَوْ عَالِمًا أَوْ مُتَعَلِّمًا “


Ibn-Majah-4112

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4112.


«الدُّنْيَا مَلْعُونَةٌ، مَلْعُونٌ مَا فِيهَا، إِلَّا ذِكْرَ اللَّهِ، وَمَا وَالَاهُ، أَوْ عَالِمًا، أَوْ مُتَعَلِّمًا»


Next Page » « Previous Page