நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது, “இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்” என்று கூறினார்கள்.
பிறகு ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள்.
அது பற்றி மக்கள், நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்டபோது “இவ்விரு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் வரை அவர்களின் வேதனை குறைக்கப்படலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
புகாரீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸை முஹம்மத் பின் முஸன்னா அவர்கள் வகீஃ அவர்களிடமிருந்து வகீஃ —> அஃமஷ்.. என்று மற்றொரு அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார். அதில் அஃமஷ் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை முஜாஹித் (ரஹ்) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றதாக இடம்பெற்றுள்ளது. மேலும் ஹதீஸின் வார்த்தையில் சிறிது மாற்றம் உள்ளது.
அத்தியாயம்: 4
(புகாரி: 218)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ
مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ، فَقَالَ: «إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنَ البَوْلِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ» ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً، فَشَقَّهَا نِصْفَيْنِ، فَغَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ: «لَعَلَّهُ يُخَفِّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا»
وَقَالَ مُحَمَّدُ بْنُ المُثَنَّى، وَحَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا مِثْلَهُ: «يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ»
Bukhari-Tamil-218.
Bukhari-TamilMisc-218.
Bukhari-Shamila-218.
Bukhari-Alamiah-211.
Bukhari-JawamiulKalim-213.
இந்தச் செய்தியின் கருத்து பல நபித்தோழர்கள் வழியாக, பல வகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. சிலர் இதை சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்
2 . முஹம்மத் பின் முஸன்னா
3 . முஹம்மத் பின் காஸிம்
4 . அஃமஷ்
5 . முஜாஹித்
6 . தாவூஸ் பின் கைஸான்
7 . இப்னு அப்பாஸ் (ரலி)
மற்றொரு அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்
2 . முஹம்மத் பின் முஸன்னா
3 . வகீஃ பின் ஜர்ராஹ்
4 . அஃமஷ்
5 . முஜாஹித்
6 . தாவூஸ் பின் கைஸான்
7 . இப்னு அப்பாஸ் (ரலி)
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அஃமஷ் —> முஜாஹித் —> தாவூஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: புகாரி-218, 1361, 1378, 6052, முஸ்லிம்-491, இப்னு மாஜா-347, அபூதாவூத்-20, திர்மிதீ-70, நஸாயீ-31, 2069, …
- மன்ஸூர் —> முஜாஹித் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: புகாரி-216, 6055, அபூதாவூத்-21, நஸாயீ-2068, …
…
2 . அபூஹுரைரா
3 . அபூபக்ரா
4 . யஃலா பின் முர்ரா
5 . ஜாபிர் பின் அப்துல்லாஹ்..
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-348,
சமீப விமர்சனங்கள்