தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5553

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 7

கொம்புகள் உள்ள இரு செம்மறியாட்டுக் கடாக்களை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தது.

அவையிரண்டும் கொழுத்தவை என்று (மற்றோர் அறிவிப்பில்) கூறப்படுகின்றது.

உமாமா பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் மதீனாவில் குர்பானிப் பிராணிகளை (நன்றாகத் தீனிபோட்டு) கொழுக்க வைத்து வந்தோம். முஸ்லிம்கள் அனைவருமே (பொதுவாகக் குர்பானிப் பிராணிகளை) கொழுக்க வைத்துவந்தார்கள்.


 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில்) இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்து வந்தார்கள். நானும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்துவந்தேன்.

அத்தியாயம்: 73

(புகாரி: 5553)

بَابٌ فِي أُضْحِيَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَقْرَنَيْنِ، وَيُذْكَرُ سَمِينَيْنِ

وَقَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلٍ، قَالَ: «كُنَّا نُسَمِّنُ الأُضْحِيَّةَ بِالْمَدِينَةِ، وَكَانَ المُسْلِمُونَ يُسَمِّنُونَ»

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُضَحِّي بِكَبْشَيْنِ، وَأَنَا أُضَحِّي بِكَبْشَيْنِ»


Bukhari-Tamil-5553.
Bukhari-TamilMisc-5553.
Bukhari-Shamila-5553.
Bukhari-Alamiah-5127.
Bukhari-JawamiulKalim-5153.




இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . ஆதம் பின் அபூஇயாஸ்-ஆதம் பின் அப்துர்ரஹ்மான்

3 . ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
பின் ஹஜ்ஜாஜ்-அபூபஸ்தாம்

4 . அப்துல்அஸீஸ் பின் ஸுஹைப்-அல்புனானீ

5 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அபூஹம்ஸா


மேற்கண்ட செய்தியின் தலைப்பில் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், 2 செய்திகளை முஅல்லக் ஆக-முழு அறிவிப்பாளர்தொடரைக் கூறாமல் குறிப்பிட்டுள்ளார்.

1 . முதல் செய்தி: நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த இரு செம்மறியாட்டுக் கடாக்களும் “கொழுத்தவையாக இருந்தன” என்று சில ஹதீஸ்களில் வந்துள்ளது. 

“அவையிரண்டும் கொழுத்தவை என்று கூறப்படுகின்றது” என்று இதை புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் “صيغة التمريض – ஸீஃகதுத் தம்ரீள்” எனும் உறுதியில்லாத கருத்தைத் தரும் வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளார்.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இதைப் பற்றிய விளக்கத்தில், “புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் குறிப்பிடும் இந்தக் செய்தியின் கருத்தை அபூஅவானா அவர்கள் சரியான அறிவிப்பாளர்தொடரில் குறிப்பிட்டுள்ளார்.

مستخرج أبي عوانة (2/ 306)
3220 – حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُسْلِمٍ، نَا حَجَّاجٌ، ح وَحَدَّثَنَا يُونُسُ بْنُ حَبِيبٍ، نَا أَبُو دَاوُدَ، ح وَحَدَّثَنَا الصَّغَانِيُّ، نَا أَبُو النَّضْرِ، ح وَحَدَّثَنَا أَبُو قِلَابَةَ، نَا سَعِيدُ بْنُ عَامِرٍ كُلُّهُمْ، عَنْ شُعْبَةَ، قَالَ حَجَّاجٌ: حَدَّثَنِي شُعْبَةُ، عَنْ قَتَادَةَ،، عَنْ أَنَسٍ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُضَحِّي بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ سَمِينَيْنِ يُسَمِّي وَيُكَبِّرُ، وَلَقَدْ رَأَيْتُهُ يَذْبَحُ بَدَنَتَهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا» وَهَذَا لَفْظُ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ، وَمَعْنَى حَدِيثِهِمْ وَاحِدٌ،

تغليق التعليق (5/ 4):
وَهَذَا الْإِسْنَاد صَحِيح مَا أَدْرِي لم لم يجْزم بِهِ البُخَارِيّ وَكَأَنَّهُ مَرضه لشذوذه أَو يكون أَرَادَ بِمَا علقه بِصِيغَة التمريض حَدِيث الثَّوْريّ عَن عبد الله بن مُحَمَّدِ بْنِ عُقَيْلٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَائِشَةَ أَوْ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَرَادَ أَنْ يُضَحِّيَ اشْتَرَى كَبْشَيْنِ عَظِيمَيْنِ سَمِينَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ موجؤين فَذَبَحَ أَحَدَهُمَا عَنْ أُمَّتِهِ مَنْ شَهِدَ لِلَّهِ بِالتَّوْحِيدِ وَشَهِدَ لَهُ بِالْبَلاغِ وَذَبَحَ الآخَرَ عَنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ

இதில் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களிடமிருந்து அறிவிக்கும் (மிகப் பலமானவரான) ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத் அவர்கள் இந்தக் கூடுதல் வார்த்தையை அறிவித்துள்ளார். என்றாலும் மற்றவர்கள் இதை அறிவிக்கவில்லை என்பதாலோ அல்லது ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் வழியாக வரும் வேறு ஒரு செய்தியின் அடிப்படையிலோ இவ்வாறு புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் உறுதியில்லாத வார்த்தையை கூறியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: முஸ்தக்ரஜ் அபூஅவானா-3220, தஃகீலுத் தஃலீக்-5/4)


2 . இரண்டாவது செய்தி: அபூஉமாமா-அஸ்அத் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் வழியாக வரும் செய்தி.

இதை புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், صيغة الجزم – ஸீஃகதுல் ஜஸ்ம் எனும் உறுதியான கருத்தைத் தரும் வார்த்தையைக் கொண்டு குறிப்பிட்டுள்ளார்.

இதன் முழு அறிவிப்பாளர்தொடரை அபூநுஐம் அல்அஸ்பஹானீ அவர்கள் பதிவு செய்துள்ளார் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறியுள்ளார்.

تغليق التعليق (5/ 6):
وَأما رِوَايَة يحيى بن سعيد الْأنْصَارِيّ فَقَالَ أَبُو نعيم فِي مستخرجه على صَحِيح البُخَارِيّ ثَنَا أَبُو إِسْحَاق بن حَمْزَة ثَنَا الْبَغَوِيّ ثَنَا أَحْمد بن حَنْبَل ثَنَا عباد بن الْعَوام أَخْبرنِي يحيى بن سعيد سَمِعت أَبَا أُمَامَة بن سهل بن حنيف يَقُول ‌كَانَ ‌الْمُسلمُونَ ‌يَشْتَرِي أحدهم الْأُضْحِية فيسمنها فيذبحها بعد الْأَضْحَى فِي آخر ذِي الْحجَّة قَالَ أَحْمد هَذَا الحَدِيث عجب

முஸ்லிம்களில் சிலர் குர்பானி கொடுப்பதற்காக பிராணியை வாங்குவார்கள். பின்னர் அதை கொழுக்க வைத்து, ஹஜ்பெருநாள் தினத்திற்கு பிறகு துல்ஹஜ் மாதத்தின் கடைசியில் அதை அறுத்துப் பலியிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா-அஸ்அத் பின் ஸஹ்ல் (ரலி)

(இந்தச் செய்தியில் குர்பானி கொடுக்கும் நாள் துல்ஹஜ் மாத கடைசி வரை உள்ளது என்று கருத்து இருப்பதால்) இதைப் பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இது வினோதமான செய்தி என்று கூறியுள்ளார் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

வேறு சிலர் இதுபோன்ற சில செய்திகளின்படி குர்பானி கொடுக்கும் நாள் மாதக்கடைசி வரை உள்ளது என்று கூறியுள்ளனர் என்பது தனிவிசயம்…


பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள் போன்றவை முர்ஸல் என்பதால் ஆதாரத்திற்கேற்றவை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: குப்ரா பைஹகீ-19257)


எனவே குர்பானி பிராணிகளை முன்கூட்டியே வாங்கி செல்லமாக, பாசத்துடன் வளர்க்கவேண்டும் என்பதற்கோ அல்லது கொழுக்க வைக்க வேண்டும் என்பதற்கோ நபி (ஸல்) அவர்களின் நேரடியான கட்டளை எதுவுமில்லை.


பார்க்க: குர்பானி பிராணிகளை பிள்ளை போல் வளர்த்து அறுக்க வேண்டுமா?.


இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

அப்துல்அஸீஸ் —> அனஸ்

பார்க்க: … புகாரி-5553, நஸாயீ-,

கதாதா —> அனஸ்

பார்க்க: புகாரி-5558, 5564, 5565, 7399, முஸ்லிம்-3975, 3976, இப்னு மாஜா-, அபூதாவூத்-, திர்மிதீ-, நஸாயீ-, …


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.