பாடம் : 107
(நான்கு ரக்அத் தொழுகையின்) பிந்திய இரண்டு ரக்அத்களிலும் அல்ஃபாத்திஹா’ ஆரம்ப அத்தியாயத்தை ஓத வேண்டும்.
அபூகதாதா (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அத்தியாயத்தையும் துணை அத்தியாயங்களிரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கும் ஒதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும் ஸுபுஹிலும் செய்வார்கள்.
அத்தியாயம்: 10
(புகாரி: 776)بَابٌ: يَقْرَأُ فِي الأُخْرَيَيْنِ بِفَاتِحَةِ الكِتَابِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الكِتَابِ، وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الكِتَابِ وَيُسْمِعُنَا الآيَةَ، وَيُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مَا لاَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ، وَهَكَذَا فِي العَصْرِ وَهَكَذَا فِي الصُّبْحِ»
Bukhari-Tamil-776.
Bukhari-TamilMisc-776.
Bukhari-Shamila-776.
Bukhari-Alamiah-734.
Bukhari-JawamiulKalim-737.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . ஃபள்ல் பின் அம்ர்-அபூநுஐம்-அல்மலாஈ
3 . ஹிஸாம் பின் ஸன்பிர்-அத்தஸ்துவாயி
4 . யஹ்யா பின் ஸாலிஹ்-அத்தாயீ
5 . அப்துல்லாஹ் பின் ஹாரிஸ்-அல்அன்ஸாரீ
6 . ஹாரிஸ் பின் ரபீஃ (ரலி)-அஸ்ஸலமீ
மேலும் பார்க்க: புகாரி-759.
சமீப விமர்சனங்கள்