தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-777

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 108  லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுவது. 

777. அபூ மஃமர் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் ஓதுபவர்களாக இருந்தார்களா? என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றனர். ‘இதை எப்படி நீங்கள் அறிந்து கொண்டீர்கள்?’ என்று திரும்பவும் நாங்கள் கேட்டோம். அதற்கு கப்பாப்(ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களின் தாடியின் அசைவு மூலம் அறிந்து கொண்டேன்’ என்று விடையளித்தார்கள்.
Book : 10

(புகாரி: 777)

بَابُ مَنْ خَافَتَ القِرَاءَةَ فِي الظُّهْرِ وَالعَصْرِ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ

قُلْتُ لِخَبَّابٍ: أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالعَصْرِ؟ قَالَ: نَعَمْ، قُلْنَا: مِنْ أَيْنَ عَلِمْتَ؟ قَالَ: «بِاضْطِرَابِ لِحْيَتِهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.