Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-558

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

558. கடமையான தொழுகைக்காக தன்னுடைய வீட்டிலிருந்து உலூச் செய்து செல்பவரின் கூலி இஹ்ராம் ஆகி ஹஜ் செய்பவரின் கூலியை போன்றதாகும். வேறு எந்த நோக்கதிற்காகவும் இல்லாமல் லுஹா தொழுகைக்காகவே சிரமப்பட்டு லுஹா தொழுபவரின் கூலி, உம்ரா செய்பவரின் கூலியைப் போன்றதாகும்.

இடையில் எந்தவித வீண்பேச்சு இல்லாமல் ஒரு தொழுகைக்குப்பின் தொழுகின்ற இன்னொரு தொழுகை இல்லிய்யீனில் பதியப்படுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«مَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ مُتَطَهِّرًا إِلَى صَلَاةٍ مَكْتُوبَةٍ فَأَجْرُهُ كَأَجْرِ الْحَاجِّ الْمُحْرِمِ، وَمَنْ خَرَجَ إِلَى تَسْبِيحِ الضُّحَى لَا يَنْصِبُهُ إِلَّا إِيَّاهُ فَأَجْرُهُ كَأَجْرِ الْمُعْتَمِرِ، وَصَلَاةٌ عَلَى أَثَرِ صَلَاةٍ لَا لَغْوَ بَيْنَهُمَا كِتَابٌ فِي عِلِّيِّينَ»


Abu-Dawood-557

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

557. (மதீனாவில்) ஒருவர் இருந்தார். மதீனாவாசிகளில் இந்த கிப்லாவை நோக்கி தொழக்கூடிய மக்களில் அவரைவிட பள்ளியிலிருந்து வீடு தூரமாக அமைந்த யாரையும் நான் அறிந்திருக்கவில்லை. அவருக்கு எந்த தொழுகைமே தவறுவது கிடையாது! கடுமையான வெப்பத்திலும் இருளிலும் நீ ஏறிவருவதற்கு ஒரு கழுதையை வாங்கினால் நான்றாக இருக்குமல்லவா? என நான் கேட்டதற்கு என்னுடைய வீடு பள்ளிக்கருகில் இருப்பதை நான் விரும்பவில்லை என பதிலளித்தார்.

இந்த செய்தி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர்கள் அவரிடம் அதைப்பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர் பள்ளிக்கு நான் வருவதும், (தொழுது விட்டு) திரும்பும் போது நான் வீட்டிற்கு செல்வதும் பதியப்பட வேண்டும் என விரும்புகின்றேன் என்று பதில் சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இதை அனைத்தையும் அல்லாஹ் உனக்கு வழங்குவானாக! (அல்லாஹ்வுக்காக) நீ விரும்பிய அனைத்தையும் அல்லாஹ் உனக்கு வழங்குவானாக! என்று சொன்னார்கள்.

இவ்வாறு உபை பின் கஃப் அறிவிக்கின்றார்கள்.

இதே கருத்தில் உள்ள ஹதீஸ் முஸ்லிம், இப்னுமாஜா ஆகிய நூல்களில்

كَانَ رَجُلٌ لَا أَعْلَمُ أَحَدًا مِنَ النَّاسِ مِمَّنْ يُصَلِّي الْقِبْلَةَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ أَبْعَدَ مَنْزِلًا مِنَ الْمَسْجِدِ مِنْ ذَلِكَ الرَّجُلِ، وَكَانَ لَا تُخْطِئُهُ صَلَاةٌ فِي الْمَسْجِدِ، فَقُلْتُ: لَوِ اشْتَرَيْتَ حِمَارًا تَرْكَبُهُ فِي الرَّمْضَاءِ وَالظُّلْمَةِ، فَقَالَ: مَا أُحِبُّ أَنَّ مَنْزِلِي إِلَى جَنْبِ الْمَسْجِدِ فَنُمِيَ الْحَدِيثُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنْ قَوْلِهِ ذَلِكَ، فَقَالَ: أَرَدْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْ يُكْتَبَ لِي إِقْبَالِي إِلَى الْمَسْجِدِ وَرُجُوعِي إِلَى أَهْلِي إِذَا رَجَعْتُ، فَقَالَ: «أَعْطَاكَ اللَّهُ ذَلِكَ كُلَّهُ، أَنْطَاكَ اللَّهُ جَلَّ وَعَزَّ مَا احْتَسَبْتَ كُلَّهُ أَجْمَعَ»


Abu-Dawood-556

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 192

தொழுகைக்கு நடந்து செல்வதின் சிறப்பு.

556. பள்ளிக்கு மிகமிக தூரத்தில் இருப்பவர் மகத்தான கூலி பெறுபவராவார் என்று நபி (ஸல் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸ் இப்னுமாஜாவில் இடம் பெறுகின்றது.


«الْأَبْعَدُ فَالْأَبْعَدُ مِنَ الْمَسْجِدِ أَعْظَمُ أَجْرًا»


Abu-Dawood-553

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

553. அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக மதீனா நகரம் விஷசந்துகள், கொடிய மிருகங்கள் நிறைந்த நகரமாகும். (நான் வீட்டில் தொழலாமா?) என்று வினவிய போது ஹய்ய அலஸ் ஸலாத், ஹய்ய அலல் ஃபலாஹ் (என்ற வார்த்தைகள்) உன் காதில் விழுகின்றதா? என்று அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் (ரலி) கேட்டார்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்

சுப்யானிடமிருந்து காஸிம் அல்ஜர்மி இவ்வாறு தான் அறிவிக்கின்றார். ஆனால் ஹைய ஹலா (விரைந்து வாருங்கள் என்ற வார்த்தை இடம் பெறவில்லை.

இந்த ஹதீஸ் நஸயீயில் இடம் பெறுகின்றது.


يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْمَدِينَةَ كَثِيرَةُ الْهَوَامِّ وَالسِّبَاعِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَسْمَعُ حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ؟ فَحَيَّ هَلًا»


Abu-Dawood-552

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

552. அல்லாஹ்வின் தூதரே! நான் பார்வை குருடானவன்! வீடும் தூரமானவன்! எனக்கு ஒரு வழிகாட்டியும் உண்டு. ஆனால் அவர் எனக்கு ஒத்துழைக்கமாட்டார். எனவே நான் எனது வீட்டில் தொழ அனுமதி உண்டா? என்று அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, பாங்கு சப்தத்தை செவியுறுகின்றாயா? என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு ஆம் என்றதும் அப்படியானால் உனக்கு நான் அனுமதி வழங்க முடியாது என்று பதில் சொன்னார்கள்.


أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَجُلٌ ضَرِيرُ الْبَصَرِ شَاسِعُ الدَّارِ، وَلِي قَائِدٌ لَا يُلَائِمُنِي فَهَلْ لِي رُخْصَةٌ أَنْ أُصَلِّيَ فِي بَيْتِي؟، قَالَ: «هَلْ تَسْمَعُ النِّدَاءَ»، قَالَ: نَعَمْ، قَالَ: «لَا أَجِدُ لَكَ رُخْصَةً»


Abu-Dawood-551

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

551. முஅத்தினின் அதானை வெவியுற்றுவிட்டு அதன்படி ஒருவர் (பள்ளிக்கு) வெல்வதைவிட்டும் எந்த ஓர் இடையூறும் தடையாக அமையவில்லை எனில் அவரிடமிருந்து அவர் தொழுத எந்த தொழுகையும் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள். நபித்தோழர்கள் இடையூறு என்றால் என்ன வென்று கேட்கும் போது அச்சம் அல்லது நோய் என்று பதிலளித்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.

இதைவிட சிறந்த அறிவிப்பாளர் தொடருடன் இந்த ஹதீஸ் இப்னுமாஜாவில் பதிவாகியுள்ளது.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

இந்த ஹதீஸை அபூமக்ராவிடமிருந்து அபூ இஸ்ஹாக் அறிவிக்கின்றார்.


«مَنْ سَمِعَ الْمُنَادِيَ فَلَمْ يَمْنَعْهُ مِنَ اتِّبَاعِهِ، عُذْرٌ»، قَالُوا: وَمَا الْعُذْرُ؟، قَالَ: «خَوْفٌ أَوْ مَرَضٌ، لَمْ تُقْبَلْ مِنْهُ الصَّلَاةُ الَّتِي صَلَّى»


Abu-Dawood-550

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

550. ஐந்து நேரத் தொழுகைகளுக்காக அழைப்பு விடுக்கப் படும் போது அந்த தொழுகைகளை பேணிக் கொள்ளுங்கள்! ஏனெனில் நிச்சயமாக அவை நேர்வழிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக கண்ணியமும், மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் தன்னுடைய நேர்வழிகளையே மார்க்கமாக்கியிருக்கின்றான். தெளிவான நயவஞ்சகக் காரனை தவிர வேறு யாரும் அத்தொழுகைகளை விட்டும் விலகிவிடுவதில்லை என்றே நாங்கள் விளங்கி வைத்திருக்கின்றோம். நிச்சயமாக ஒருவர் இருவர்களுக்கிடையே கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டு வரிசையில் கொண்டு வந்து நிறுத்தப் படுவதை நாங்கள் கண்டிருக்கின்றோம். உங்களில் ஒவ்வொருவருக்கும் அவரது வீட்டில் தொழக் கூடிய இடம் இல்லாமல் இருப்பதில்லை. (இதனால்) உங்களுடைய வீடுகளில் தொழுது கொண்டு உங்களுடைய பள்ளிவாசல்களை விட்டு விடுவீர்களானால் நிச்சயமாக உங்களுடைய நபி வழியை விட்டவராவீர்கள்! உங்களுடைய நபி வழியை விட்டு விடுவீர்களெனில் நிச்சயமாக இறை நிராகரிப்பு செய்தவர்களாவீர் என்று அப்துல்லாஹ் பின் மவூத் (ரலி) கூறுகின்றார்கள்.

இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.


«حَافِظُوا عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ الْخَمْسِ، حَيْثُ يُنَادَى بِهِنَّ فَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى، وَإِنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُنَنَ الْهُدَى، وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنْهَا إِلَّا مُنَافِقٌ بَيِّنُ النِّفَاقِ، وَلَقَدْ رَأَيْتُنَا وَإِنَّ الرَّجُلَ لَيُهَادَى بَيْنَ الرَّجُلَيْنِ حَتَّى يُقَامَ فِي الصَّفِّ، وَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَلَهُ مَسْجِدٌ فِي بَيْتِهِ، وَلَوْ صَلَّيْتُمْ فِي بُيُوتِكُمْ وَتَرَكْتُمْ مَسَاجِدَكُمْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكَفَرْتُمْ»


Abu-Dawood-545

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

545. இகாமத் சொல்லப்படும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை குறைவாகக் கண்டால் தொழாமல் உட்கார்ந்து விடுவார்கள். மக்கள் கூட்டமாக இருந்தால் தொழுவிப்பார்கள் என்று ஸாயிம் அபுன்னார் (ரலி) அறிவிக்கின்றார்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «حِينَ تُقَامُ الصَّلَاةُ فِي الْمَسْجِدِ إِذَا رَآهُمْ قَلِيلًا جَلَسَ لَمْ يُصَلِّ، وَإِذَا رَآهُمْ جَمَاعَةً صَلَّى»


Abu-Dawood-544

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

544. தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டது. பள்ளியின் ஓரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தார்கள். மக்கள் தூங்கும் வரை அவர்கள் தொழுவிக்கவில்லை என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நுல்களில் இடம் பெறுகின்றது.)


«أُقِيمَتِ الصَّلَاةُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَجِيٌّ فِي جَانِبِ الْمَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلَاةِ حَتَّى نَامَ الْقَوْمُ»


Next Page » « Previous Page