Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-481

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

481. ஒருவர் மக்களுக்கு தொழுவித்தார். அவர் அப்போது கிப்லா திசையில் துப்பினார். இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர் தொழுகையை முடித்ததும் இனி இவர் உங்களுக்கு தொழுவிக்க வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதற்கு பிறகு அவர் தொழுவிக்க விரும்பிய போது, அவரை மக்கள் தொழுவிக்க வேண்டாம் என தடுத்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதையும் அவரிடம் தெரிவித்தனர். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்ட போது ஆம் (நான் அவ்வாறு சொன்னேன்) என்று அவர்கள் சொன்னார்கள் என அபூஸஹ்லா அஸ்ஸாயிப் பின் கல்லாத் (ரலி) அறிவிக்கின்றார்.

ஆம் என்ற இடத்தில் நீ அல்லாஹ்வையும் அவனது தூதரையும் வேதனைப் படுத்திவிட்டாய் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நினைக்கின்றேன் என்று இதன் அறிவிப்பாளர் தெரிவிக்கின்றார்.


أَنَّ رَجُلًا أَمَّ قَوْمًا، فَبَصَقَ فِي الْقِبْلَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ فَرَغَ: «لَا يُصَلِّي لَكُمْ»، فَأَرَادَ بَعْدَ ذَلِكَ أَنْ يُصَلِّيَ لَهُمْ فَمَنَعُوهُ وَأَخْبَرُوهُ بِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «نَعَمْ»، وَحَسِبْتُ أَنَّهُ قَالَ: «إِنَّكَ آذَيْتَ اللَّهَ وَرَسُولَهُ»


Abu-Dawood-480

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

480. நபி (ஸல்) அவர்கள் பேரீத்தமரக் குச்சிகளை விரும்புபவர்களாக இருந்தனர். அக்குச்சிகளில் ஏதாவது ஒன்று அவர்களது கையில் இருந்து கொண்டேயிருக்கும். அந்நிலையில் பள்ளியில் நுழைந்ததும் பள்ளியின் கிப்லா திசையில் காரலை கண்டு அந்தக் குச்சியால் தேய்த்து விட்டார்கள். பிறகு கோபமாக மக்களை முன்னோக்கி உங்களில் ஒருவர் தனது முகத்தில் துப்பவிரும்புவாரா? நிச்சயமாக உங்களில் ஒருவர் கிப்லாவை முன்னோக்கும் போது அவர் மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த தன்னுடைய இறைவனைத் தான் முன்னோக்குகின்றார். மலக்கு அவரது வலது பக்கத்தில் இருக்கின்றார். அவர் தனது வலது பக்கத்திலும் தன்னுடைய கிப்லா திசையிலும் அவர் துப்ப வேண்டாம். அவர் தனது இடது பக்கத்தில் அல்லது தன்னுடைய இடது காலுக்கு கீழே துப்புவாராக! அவர் அவசரமாக துப்பியாக வேண்டுமெனில், இவ்வாறு துப்பிவிடுவாராக! என்று சொன்னார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இவ்வாறு துப்பிவிடுவாராக! என்பதற்கு ஒருவர் தனது ஆடையில் துப்பி அதன் ஒரு பகுதியை இன்னொரு பகுதியுடன் தேய்த்து விடுவதாகும் என இப்னு அஜ்லான் விளக்கமளிக்கின்றார்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحِبُّ الْعَرَاجِينَ وَلَا يَزَالُ فِي يَدِهِ مِنْهَا، فَدَخَلَ الْمَسْجِدَ فَرَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَحَكَّهَا، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ مُغْضَبًا، فَقَالَ: «أَيَسُرُّ أَحَدَكُمْ أَنْ يُبْصَقَ فِي وَجْهِهِ؟ إِنَّ أَحَدَكُمْ إِذَا اسْتَقْبَلَ الْقِبْلَةَ فَإِنَّمَا يَسْتَقْبِلُ رَبَّهُ عَزَّ وَجَلَّ، وَالْمَلَكُ عَنْ يَمِينِهِ، فَلَا يَتْفُلْ عَنْ يَمِينِهِ، وَلَا فِي قِبْلَتِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ، فَإِنْ عَجِلَ بِهِ أَمْرٌ فَلْيَقُلْ هَكَذَا» وَوَصَفَ لَنَا ابْنُ عَجْلَانَ ذَلِكَ أَنْ يَتْفُلَ فِي ثَوْبِهِ، ثُمَّ يَرُدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ


Abu-Dawood-479

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது, பள்ளியின் கிப்லா திசையில் சளியை பார்த்து மக்கள் மீது கோபம் கொண்டார்கள். பிறகு அதை தேய்த்து விட்டார்கள். மேலும் நிச்சயமாக உயர்ந்த அல்லாஹ் உங்களுடைய ஒருவரின் முகத்திற்கு முன்னால் இருக்கின்றான். எனவே அவர் தொழும் போது, தனக்கு முன்னால் துப்ப வேண்டாம் என்று சொன்னார்கள் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பாளர் தொடர் : 

இப்னு உமர் ——–> நாபிஉ ———> அய்யூப்

ஹம்மாத் ——-> சுலைமான் பின் தாவூத் ———> அபூதாவூத்

குங்குமத்தைக் கொண்டு வரச் செய்து அதை துடைத்தார்கள் என்று அய்யூப் அறிவித்ததாக நான் கருதுகிறேன் என்று ஹம்மாத் இந்த ஹதீஸின் இடையில் தெரிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் :

நாபிஉ வழியாக அய்யூப் மூலம் இஸ்மாயில், அப்துல் வாரிஸ் ஆகியோரும், நாபிஉ வழியாக மாலிக் உபைத்துல்லா, மூஸா பின் உக்பா ஆகியோரும் இந்த ஹதீஸை அறிவிக்கும்

بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمًا إِذْ رَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَتَغَيَّظَ عَلَى النَّاسِ، ثُمَّ حَكَّهَا، قَالَ: وَأَحْسَبُهُ قَالَ: فَدَعَا بِزَعْفَرَانٍ فَلَطَّخَهُ بِهِ، وَقَالَ: «إِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِ أَحَدِكُمْ إِذَا صَلَّى، فَلَا يَبْزُقْ بَيْنَ يَدَيْهِ»


Abu-Dawood-478

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

478. ஒருவர் தொழுகைக்கு நிற்கும் போது அல்லது உங்களில் ஒருவர் தொழும்போது தன்னுடைய முன்பக்கத்திலோ அல்லது வலது பக்கத்திலோ துப்ப வேண்டாம். எனினும் இடது பக்கம் காலியாக இருக்கும் போது இடது பக்கமாகவோ அல்லது தனது இடது பாதத்திற்கு கீழ் துப்பி அதை தேய்த்து விடுவாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என தாரிக் பின் அல் மஹாரிபி அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


«إِذَا قَامَ الرَّجُلُ إِلَى الصَّلَاةِ، أَوْ إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلَا يَبْزُقْ أَمَامَهُ، وَلَا عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ تِلْقَاءِ يَسَارِهِ، إِنْ كَانَ فَارِغًا أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى ثُمَّ لِيَقُلْ بِهِ»


Abu-Dawood-477

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

477. ஒருவர் பள்ளியில் நுழைந்து எச்சில் அல்லது காரலை துப்பிவிட்டால் மண்ணை தோண்டி புதைத்து விடுவாராக! அவ்வாறு செய்யவில்லை எனில், தனது ஆடையில் துப்பி அந்த ஆடையுடன் வெளியேறி விடுவாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.


«مَنْ دَخَلَ هَذَا الْمَسْجِدَ فَبَزَقَ فِيهِ، أَوْ تَنَخَّمَ فَلْيَحْفِرْ فَلْيَدْفِنْهُ، فَإِنْ لَمْ يَفْعَلْ فَلْيَبْزُقْ فِي ثَوْبِهِ ثُمَّ لِيَخْرُجْ بِهِ»


Abu-Dawood-476

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

476. காரலை பள்ளியில் துப்பிவிடுவது என்று மேலுள்ள ஹதீஸ் போலவே இதன் அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்றனர்.


«النُّخَاعَةُ فِي الْمَسْجِدِ» فَذَكَرَ مِثْلَهُ


Abu-Dawood-475

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

475. பள்ளியில் துப்புவது பாவமாகும். அதை மண்ணில் மூடிவிடுவது அதற்குரிய பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


«الْبُزَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا»


Abu-Dawood-474

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 165

பள்ளிக்குள் துப்புவது கூடாது.

474. பள்ளியில் துப்புவது பாவமாகும். துப்பிய அந்த எச்சியை நீ மண்ணில் மறைப்பது அதற்குரிய பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.)


«التَّفْلُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهُ أَنْ تُوَارِيَهُ»


Abu-Dawood-473

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 164

காணாமல் போன பொருளை அடையாளம் கூறி தேடுதல் கூடாது.

473. காணாமல் போன பொருளை தேடி பள்ளியில் சப்தமிடுவோரின் சப்தத்தை செவியுறும் ஒருவர் (அவரை நோக்கி) உனக்கு அல்லாஹ் அந்த பொருளை தரமாட்டானாக! என்று சொல்வாராக! ஏனெனில், நிச்சயமாக பள்ளிவாசல் இந்த நோக்கத்திற்காக கட்டப்படவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


مَنْ سَمِعَ رَجُلًا يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ، فَلْيَقُلْ: لَا أَدَّاهَا اللَّهُ إِلَيْكَ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا


Abu-Dawood-472

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

472. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒருவர் எந்த நோக்கத்திற்காக பள்ளிவாசலுக்கு வந்தாலும் அதற்குரிய பங்கு அவருக்கு கிடைக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ أَتَى الْمَسْجِدَ لِشَيْءٍ فَهُوَ حَظُّهُ»


Next Page » « Previous Page