Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-471

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

471. அடுத்த தொழுகையை எதிர்பார்த்தவராகத்தான் தொழுத இடத்திலேயே அமர்ந்திருக்கும் அடியார் தொழுகையிலேயே திரும்பும் வரை அல்லது ஹதஸ் ஆகும் வரை யாஅல்லாஹ்! இவரை மன்னித்து விடுவாயாக! யாஅல்லாஹ்! அவருக்கு நீ அருள் செய்வாயாக! என்று மலக்குகள் பிரார்த்தி:த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

எது ஹதஸை ஏற்படுத்துகின்றது என்று வினவப்பட்டதற்கு மெதுவாகவோ அல்லது சப்தமாகவோ காற்று பிரிதல் என்று அபூஹுரைரா(ரலி)) பதில் சொன்னார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் பதிவாகியுள்ளது.


لَا يَزَالُ الْعَبْدُ فِي صَلَاةٍ مَا كَانَ فِي مُصَلَّاهُ يَنْتَظِرُ الصَّلَاةَ، تَقُولُ الْمَلَائِكَةُ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، حَتَّى يَنْصَرِفَ، أَوْ يُحْدِثَ “، فَقِيلَ مَا يُحْدِثُ؟ قَالَ: يَفْسُو، أَوْ يَضْرِطُ


Abu-Dawood-470

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

470. உங்களில் ஒருவர் அடுத்த தொழுகைக்காக காத்திருக்கும் போது தொழுகையிலேயே ஈடுபட்டவர் போலாவர். (ஏனெனில்) தொழுகையைத் தவிர வேறெதுவும் அவர் வீட்டுக்கு திரும்புவதை தடுக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் பதிவாகியுள்ளது.


«لَا يَزَالُ أَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا كَانَتِ الصَّلَاةُ تَحْبِسُهُ، لَا يَمْنَعُهُ أَنْ يَنْقَلِبَ إِلَى أَهْلِهِ إِلَّا الصَّلَاةُ»


Abu-Dawood-469

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 163

பள்ளியில் அமர்ந்திருப்பதின் சிறப்பு.

469. ஹதஸ் ஆகாமல் அல்லது இருந்த இடத்திலிருந்து எழாமல் தான் தொழுத இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை உங்களில் ஒருவர் மீது மலக்குகள் துஆ செய்து கொண்டே இருக்கின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ، أَوْ يَقُمْ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ


Abu-Dawood-468

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

468. மேலுள்ள ஹதீஸ்தான் இங்கு இடம் பெறுகின்றது. அவர் விரும்பினால் தொழுத பிறகு உட்கார்ந்து கொள்ளட்டும் அல்லது தனது தேவைக்காக சென்று கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அதிகமான செய்தி இதில் இடம் பெறுகின்றது.


«ثُمَّ لِيَقْعُدْ بَعْدُ إِنْ شَاءَ أَوْ لِيَذْهَبْ لِحَاجَتِهِ»


Abu-Dawood-467

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 162

பள்ளியில் நுழைந்ததும் இரு ரக்அத்கள் தொழுதல்.

467. உங்களில் ஒருவர் பள்ளிக்கு வந்ததும் உட்கார்வதற்கு முன்பாக இரு ரக்அத்கள் தொழுவாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூகதாதா (ரலி) அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


«إِذَا جَاءَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُصَلِّ سَجْدَتَيْنِ مِنْ قَبْلِ أَنْ يَجْلِسَ»


Abu-Dawood-462

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 160

ஆண்களுடன் பெண்கள் பள்ளிகளில் ஒன்று சேராதிருத்தல்.

462. இந்த வாசலை பெண்களுக்காக ஒதுக்கிவிட்டால் (நல்லது தானே) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அந்த வாசல் வழியாக மரணமாகும் வரை இப்னு உமர் (ரலி) பள்ளிக்குள் நுழையவே இல்லை என நாபிஃ (ரஹ்) கூறினார்.

அபூதாவூத் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் வாரிஸ் என்பவரைத் தவிர மற்றவர்கள் உமர் (ரலி) கூறினார் என்று அறிவிக்கின்றனர். இதுதான் மிகச் சரியானதாகும்.


«لَوْ تَرَكْنَا هَذَا الْبَابَ لِلنِّسَاءِ»، قَالَ نَافِعٌ: فَلَمْ يَدْخُلْ مِنْهُ ابْنُ عُمَرَ، حَتَّى مَاتَ،

وَقَالَ غَيْرُ عَبْدِ الْوَارِثِ: قَالَ عُمَرُ: وَهُوَ أَصَحُّ


Abu-Dawood-460

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

460. சரனைக் கற்கள் பள்ளியிலிருந்து வெளியே எடுத்துச் செல்பவரிடம் (தங்களை வெளியே எடுத்துச் செல்ல வேண்டாம் என) முறையிடுகின்றன என அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள். அபூபத்ர் என்ற இத்தொடரில் உள்ள ஓர் அறிவிப்பாளர் தனக்கு முந்திய அறிவிப்பாளர் இதை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று மர்ஃபூ வாக அறிவித்தார் என்றே எனக்கு நினைவு உள்ளது.


«إِنَّ الْحَصَاةَ لَتُنَاشِدُ الَّذِي يُخْرِجُهَا مِنَ الْمَسْجِدِ»


Abu-Dawood-459

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

459. ஒருவர் பள்ளியிலிருந்து சரளைக் கல் எடுத்துச் செல்வாரானால் அவரிடத்தில் அது (என்னை வெளியே எடுத்துச் செல்லாதே என்று) முறையிடுகின்றது என்று கருத்துச் சொல்லப்படுகின்றது.

இவ்வாறு அபூசாலிஹ் கூறுகின்றார்.


إِنَّ الرَّجُلَ إِذَا أَخْرَجَ الْحَصَى مِنَ الْمَسْجِدِ يُنَاشِدُهُ


Abu-Dawood-458

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 158

பள்ளிவாசலில் சரளக் கற்களை, கொண்டுவருதல்.

458. பள்ளிவாசலில் கிடக்கும் சரளைக்கற்களைப் பற்றி இப்னு உமர் (ரலி) யிடம் கேட்டேன். அதற்கு அவர் ஓர் இரவு மழை பெய்து, தரை நல்லா நனைந்து விட்டது. ஒருவர் தனது ஆடையில் கற்களை கொண்டு வந்து தனக்கு கீழ் பரப்பி வைத்திருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் இது அழகாக உள்ளதே என்று சொன்னார்கள் என அபுல் வலீத் அறிவி


سَأَلْتُ ابْنَ عُمَرَ، عَنِ الْحَصَى الَّذِي فِي الْمَسْجِدِ؟ فَقَالَ: مُطِرْنَا ذَاتَ لَيْلَةٍ فَأَصْبَحَتِ الْأَرْضُ مُبْتَلَّةً، فَجَعَلَ الرَّجُلُ يَأْتِي بِالْحَصَى فِي ثَوْبِهِ، فَيَبْسُطُهُ تَحْتَهُ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ، قَالَ: «مَا أَحْسَنَ هَذَا»


Abu-Dawood-455

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் : 156

மக்கள் வாழும் பகுதிகளில் பள்ளிகளை அமைத்தல்.

455. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது. திர்மிதீயில் முர்ஸலாக இடம் பெறுகின்றது.)


«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ»


Next Page » « Previous Page