Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-1346

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1346. ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நள்ளிரவுத் தொழுகை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை கூட்டாக தொழுதுவிட்டு, அதன் பின் தம் குடும்பத்தாரிடம் வந்து, நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் பின் படுக்கைக்கு வந்து, தூங்கி விடுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ய அவர்களின் தலைக்கு அருகில் பல் துலக்கும் குச்சி, தண்ணீர் உள்ளிட்டவை மூடி வைக்கப்பட்டிருக்கும். அவர்களை அல்லாஹ் இரவில் எழுப்ப நாடும்போது எழுவார்கள். (எழுந்த பின்) பல் துலக்கி அங்கத் தூய்மையை நிறைவாகச் செய்வார்கள்.

பின்பு தொழும் இடத்திற்கு வந்து, எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். ‘அல்ஃபாத்திஹா’ எனும் அத்தியாயத்தையும், குர்ஆனிலிருந்து சில அத்தியாயங்களையும், அல்லாஹ் நாடிய அளவு ஓதுவார்கள். இவற்றில் எந்த ரக்அத்திலும் (அத்தஹியாத்திற்கு) உட்கார மாட்டார்கள்.  எட்டாவது ரக்அத்தில்தான் அமர்வார்கள். ஆனால், ஸலாம் கொடுக்க மாட்டார்கள்.
ஒன்பதாவது ரக்அத்திற்கு (எழுந்து) குர்ஆன் வசனங்களை ஓதிய பின்பு அமர்ந்து அல்லாஹ் நாடும் அளவு பிரார்த்திப்பார்கள். அல்லாஹ்விடம் தம் தேவைகளைக் கேட்பார்கள். அல்லாஹ்வின் பக்கம் முழு கவனத்தையும்

أَنَّ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا سُئِلَتْ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَوْفِ اللَّيْلِ، فَقَالَتْ: ” كَانَ يُصَلِّي الْعِشَاءَ فِي جَمَاعَةٍ، ثُمَّ يَرْجِعُ إِلَى أَهْلِهِ، فَيَرْكَعُ أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ يَأْوِي إِلَى فِرَاشِهِ، وَيَنَامُ وَطَهُورُهُ مُغَطًّى عِنْدَ رَأْسِهِ، وَسِوَاكُهُ مَوْضُوعٌ، حَتَّى يَبْعَثَهُ اللَّهُ سَاعَتَهُ الَّتِي يَبْعَثُهُ مِنَ اللَّيْلِ، فَيَتَسَوَّكُ، وَيُسْبِغُ الْوُضُوءَ، ثُمَّ يَقُومُ إِلَى مُصَلَّاهُ، فَيُصَلِّي ثَمَانِيَ رَكَعَاتٍ، يَقْرَأُ فِيهِنَّ: بِأُمِّ الْكِتَابِ، وَسُورَةٍ مِنَ الْقُرْآنِ، وَمَا شَاءَ اللَّهُ، وَلَا يَقْعُدُ فِي شَيْءٍ مِنْهَا حَتَّى يَقْعُدَ فِي الثَّامِنَةِ، وَلَا يُسَلِّمُ، وَيَقْرَأُ فِي التَّاسِعَةِ، ثُمَّ يَقْعُدُ، فَيَدْعُو بِمَا شَاءَ اللَّهُ أَنْ يَدْعُوَهُ، وَيَسْأَلَهُ، وَيَرْغَبَ إِلَيْهِ، وَيُسَلِّمُ تَسْلِيمَةً وَاحِدَةً شَدِيدَةً يَكَادُ يُوقِظُ أَهْلَ الْبَيْتِ مِنْ شِدَّةِ تَسْلِيمِهِ، ثُمَّ يَقْرَأُ وَهُوَ قَاعِدٌ بِأُمِّ الْكِتَابِ، وَيَرْكَعُ وَهُوَ قَاعِدٌ، ثُمَّ يَقْرَأُ الثَّانِيَةَ، فَيَرْكَعُ وَيَسْجُدُ وَهُوَ قَاعِدٌ، ثُمَّ يَدْعُو مَا شَاءَ اللَّهُ أَنْ يَدْعُوَ، ثُمَّ يُسَلِّمُ وَيَنْصَرِفُ، فَلَمْ تَزَلْ تِلْكَ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَّنَ، فَنَقَّصَ مِنَ التِّسْعِ ثِنْتَيْنِ، فَجَعَلَهَا إِلَى السِّتِّ وَالسَّبْعِ، وَرَكْعَتَيْهِ وَهُوَ قَاعِدٌ، حَتَّى قُبِضَ عَلَى ذَلِكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “،


Abu-Dawood-1582

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1582. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று காரியங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் ருசியைச் சுவைத்து விட்டார்.

1 . வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டும் வணங்குதல்.
2 . ஒவ்வொரு வருடமும் தனது பொருளின் ஜகாத்தை மன விருப்பத்துடன் வழங்குதல்.
3 . கிழப் பருவம் அடைந்தது, சொறி பிடித்தது, நோயுற்றது, அற்பமானது ஆகியவற்றைக் கொடுக்காமல் நடுத்தரமானதை வழங்குதல்.

அல்லாஹ் உங்களிடம் (அவைகளில்) சிறந்தவற்றைக் கேட்கவில்லை. கெட்டவற்றை (தருமாறு) அவன் கட்டளையிடவில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஆவியா அல்ஃகாளிரீ ?


ثَلَاثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ طَعِمَ طَعْمَ الْإِيمَانِ: مَنْ عَبَدَ اللَّهَ وَحْدَهُ وَأَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَعْطَى زَكَاةَ مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ، رَافِدَةً عَلَيْهِ كُلَّ عَامٍ، وَلَا يُعْطِي الْهَرِمَةَ، وَلَا الدَّرِنَةَ، وَلَا الْمَرِيضَةَ، وَلَا الشَّرَطَ اللَّئِيمَةَ، وَلَكِنْ مِنْ وَسَطِ أَمْوَالِكُمْ، فَإِنَّ اللَّهَ لَمْ يَسْأَلْكُمْ خَيْرَهُ، وَلَمْ يَأْمُرْكُمْ بِشَرِّهِ


Abu-Dawood-4339

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

4339. ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஒரு கூட்டத்தாரில் பாவங்கள் நடைபெறும்போது அதைத் தடுப்பதற்கு சக்தியுள்ள மனிதர்கள் அதைத் தடுக்காவிட்டால், அவர்கள் இறப்பதற்குள் அல்லாஹ்வின் தண்டனை அவர்களை வந்தடையும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.


«مَا مِنْ رَجُلٍ يَكُونُ فِي قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي، يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا عَلَيْهِ، فَلَا يُغَيِّرُوا، إِلَّا أَصَابَهُمُ اللَّهُ بِعَذَابٍ مِنْ قَبْلِ أَنْ يَمُوتُوا»


Abu-Dawood-2513

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

அம்பெறிதல் (எனும் கலை)

2513. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் செவியேற்றுள்ளேன் :

திண்ணமாக அல்லாஹ் ஓர் அம்பின் மூலம் மூன்று பேரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்கிறான்:

1 . செய்கின்றபோது நன்மையை நாடி அதைச் செய்பவர்.
2 . அதை எறிபவர்.
3 . அம்பெறிவதற்காக (மீண்டும் பயன்படுத்த எடுத்துக் கொடுத்தோ பொருளாதார ரீதியாகவோ) உதவி செய்பவர்.

(எனவே) அம்பெறி(ந்து பயிற்சி செய்)யுங்கள். (குதிரை) சவாரி செய்யுங்கள். நீங்கள் (குதிரை) சவாரி செய்வதைவிட அம்பெறி(ந்து பயிற்சி செய்)வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.)


மூன்று விஷயங்களில் வீண் என்பது கிடையாது.

1 . ஒருவர் தனது குதிரைக்குப் பயிற்சியளிப்பது.
2 . ஒருவர் தனது மனைவியுடன் விளையாடுவது.
3 . ஒருவர் தனது வில்லால் அம்பெறிந்து பயிற்சி செய்வது.


அம்பெறியும் கலையை ஒருவர் அறிந்தபின் அதைப் புறக்கணித்து விட்டுவிட்டால் அவர் (அல்லாஹ்வின் அந்த) அருட்கொடையை விட்டுவிட்டவர் அல்லது மறுத்து விட்டவர் ஆவார்.


 


” إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُدْخِلُ بِالسَّهْمِ الْوَاحِدِ ثَلَاثَةَ نَفَرٍ الْجَنَّةَ، صَانِعَهُ يَحْتَسِبُ فِي صَنْعَتِهِ الْخَيْرَ، وَالرَّامِيَ بِهِ، وَمُنْبِلَهُ. وَارْمُوا، وَارْكَبُوا، وَأَنْ تَرْمُوا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ تَرْكَبُوا. لَيْسَ مِنَ اللَّهْوِ إِلَّا ثَلَاثٌ: تَأْدِيبُ الرَّجُلِ فَرَسَهُ، وَمُلَاعَبَتُهُ أَهْلَهُ، وَرَمْيُهُ بِقَوْسِهِ وَنَبْلِهِ، وَمَنْ تَرَكَ الرَّمْيَ بَعْدَ مَا عَلِمَهُ رَغْبَةً عَنْهُ، فَإِنَّهَا نِعْمَةٌ تَرَكَهَا «، أَوْ قَالَ» كَفَرَهَا “


Abu-Dawood-808

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

808.


دَخَلْتُ عَلَى ابْنِ عَبَّاسٍ، فِي شَبَابٍ مِنْ بَنِي هَاشِمٍ فَقُلْنَا لِشَابٍّ مِنَّا: سَلِ ابْنَ عَبَّاسٍ أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ؟ فَقَالَ: لَا، لَا، فَقِيلَ لَهُ: فَلَعَلَّهُ كَانَ يَقْرَأُ فِي نَفْسِهِ، فَقَالَ: خَمْشًا هَذِهِ شَرٌّ مِنَ الْأُولَى، كَانَ عَبْدًا مَأْمُورًا بَلَّغَ مَا أُرْسِلَ بِهِ وَمَا اخْتَصَّنَا دُونَ النَّاسِ بِشَيْءٍ إِلَّا بِثَلَاثِ خِصَالٍ «أَمَرَنَا أَنْ نُسْبِغَ الْوُضُوءَ، وَأَنْ لَا نَأْكُلَ الصَّدَقَةَ، وَأَنْ لَا نُنْزِيَ الْحِمَارَ عَلَى الْفَرَسِ»


Abu-Dawood-1492

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1492.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَعَا فَرَفَعَ يَدَيْهِ، مَسَحَ وَجْهَهُ بِيَدَيْهِ»


Abu-Dawood-5005

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5005.


«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُبْغِضُ الْبَلِيغَ مِنَ الرِّجَالِ الَّذِي يَتَخَلَّلُ بِلِسَانِهِ تَخَلُّلَ الْبَاقِرَةِ بِلِسَانِهَا»


Abu-Dawood-5267

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5267. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எறும்பு, தேனீ, கொண்டலாத்தி பறவை, கீச்சாங்குருவி ஆகிய நான்கு உயிரினங்களைக் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.


إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ: النَّمْلَةُ، وَالنَّحْلَةُ، وَالْهُدْهُدُ، وَالصُّرَدُ


Abu-Dawood-3664

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அல்லாஹ்விற்காக இல்லாமல் பிறருக்காக கல்வியைக் கற்பது.

3664. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரும் கல்வியை உலக ஆதாயத்துக்காக மட்டுமே ஒருவர் கற்றால் அவர் மறுமையில் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللَّهِ عَزَّ وَجَلَّ لَا يَتَعَلَّمُهُ إِلَّا لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنَ الدُّنْيَا، لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ» يَعْنِي رِيحَهَا


Abu-Dawood-1517

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1517. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், “அஸ்தஃக்ஃபிருல்லாஹல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யல் கய்யூம், வ அதூபு இலைஹ்”

(பொருள்: நான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புத் தேடி அவனிடமே திரும்புகின்றேன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்)

என்று மூன்று தடவை கூறினால் அவருடைய பாவங்கள் (அல்லாஹ்வால்) மன்னிக்கப்படும். அவர் போரில் புறமுதுகிட்டு ஓடியிருந்தாலும் (அதையும் மன்னிக்கப்படும்).

அறிவிப்பவர்: ஸைத் பின் பவ்லா (ரலி)


مَنْ قَالَ: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ، وَأَتُوبُ إِلَيْهِ، غُفِرَ لَهُ، وَإِنْ كَانَ قَدْ فَرَّ مِنَ الزَّحْفِ


Next Page » « Previous Page