1492.
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَعَا فَرَفَعَ يَدَيْهِ، مَسَحَ وَجْهَهُ بِيَدَيْهِ»
1492.
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَعَا فَرَفَعَ يَدَيْهِ، مَسَحَ وَجْهَهُ بِيَدَيْهِ»
5005.
«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُبْغِضُ الْبَلِيغَ مِنَ الرِّجَالِ الَّذِي يَتَخَلَّلُ بِلِسَانِهِ تَخَلُّلَ الْبَاقِرَةِ بِلِسَانِهَا»
5267. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எறும்பு, தேனீ, கொண்டலாத்தி பறவை, கீச்சாங்குருவி ஆகிய நான்கு உயிரினங்களைக் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.
إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ: النَّمْلَةُ، وَالنَّحْلَةُ، وَالْهُدْهُدُ، وَالصُّرَدُ
பாடம்:
அல்லாஹ்விற்காக இல்லாமல் பிறருக்காக கல்வியைக் கற்பது.
3664. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரும் கல்வியை உலக ஆதாயத்துக்காக மட்டுமே ஒருவர் கற்றால் அவர் மறுமையில் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللَّهِ عَزَّ وَجَلَّ لَا يَتَعَلَّمُهُ إِلَّا لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنَ الدُّنْيَا، لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ» يَعْنِي رِيحَهَا
1517. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், “அஸ்தஃக்ஃபிருல்லாஹல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யல் கய்யூம், வ அதூபு இலைஹ்”
(பொருள்: நான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புத் தேடி அவனிடமே திரும்புகின்றேன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்)
என்று மூன்று தடவை கூறினால் அவருடைய பாவங்கள் (அல்லாஹ்வால்) மன்னிக்கப்படும். அவர் போரில் புறமுதுகிட்டு ஓடியிருந்தாலும் (அதையும் மன்னிக்கப்படும்).
அறிவிப்பவர்: ஸைத் பின் பவ்லா (ரலி)
مَنْ قَالَ: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ، وَأَتُوبُ إِلَيْهِ، غُفِرَ لَهُ، وَإِنْ كَانَ قَدْ فَرَّ مِنَ الزَّحْفِ
பாடம்:
இஸ்லாமிய அரசின்கீழ் வாழும், (நோயுற்ற) பிறமதத்தவர்களை நலம் விசாரித்தல்.
3095. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி-ஸல்-அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த) ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, ‘இஸ்லாதை ஏற்றுக் கொள்!’ என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான்.
அப்போது அவர், ‘அபுல் காஸிம் (நபி-ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு’ என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே சகல புகழும்’ எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
أَنَّ غُلَامًا، مِنَ الْيَهُودِ كَانَ مَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ: أَسْلِمْ فَنَظَرَ إِلَى أَبِيهِ، وَهُوَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ أَبُوهُ: أَطِعْ أَبَا الْقَاسِمِ فَأَسْلَمَ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَقُولُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ بِي مِنَ النَّارِ»
4911.
«لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ، يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا، وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ»
4912. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு இறைநம்பிக்கையாளர், மற்றொரு இறைநம்பிக்கையாளரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.
மூன்று நாட்கள் கடந்துவிட்டால், அவரை சந்தித்து அவருக்கு ஸலாம் கூறவேண்டும். அவரும் பதில் ஸலாம் கூறிவிட்டால் இருவரும் நன்மையில் சமமாகிவிடுவார்கள். அவர் பதில் ஸலாம் கூறாவிட்டால் அவர் பாவத்தைச் செய்தவராவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அஹ்மத் பின் ஸயீத் அவர்கள், “முதலில் ஸலாம் கூறியவர் பேசாமல் இருந்த குற்றத்தை விட்டு நீங்கிவிடுவார்” என்ற வாக்கியத்தை கூடுதலாக அறிவித்துள்ளார்.
«لَا يَحِلُّ لِمُؤْمِنٍ أَنْ يَهْجُرَ مُؤْمِنًا فَوْقَ ثَلَاثٍ، فَإِنْ مَرَّتْ بِهِ ثَلَاثٌ، فَلْيَلْقَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإِنْ رَدَّ عَلَيْهِ السَّلَامَ فَقَدِ اشْتَرَكَا فِي الْأَجْرِ، وَإِنْ لَمْ يَرُدَّ عَلَيْهِ فَقَدْ بَاءَ بِالْإِثْمِ»
زَادَ أَحْمَدُ «وَخَرَجَ الْمُسَلِّمُ مِنَ الْهِجْرَةِ»
4914. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம், தனது (முஸ்லிமான) சகோதரனுடன் மூன்று நாட்களுக்குமேல் (நட்பை முறித்து) பேசாமலிருப்பது ஆகுமானதல்ல.
ஒருவர் மூன்று நாட்களுக்குமேல் பேசாமலிருந்து அந்நிலையில் அவர் இறந்துவிட்டால் அவர் நரகத்துக்குச் செல்வார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ، فَمَنْ هَجَرَ فَوْقَ ثَلَاثٍ فَمَاتَ دَخَلَ النَّارَ»
பாடம்:
சனிக்கிழமையை மட்டும் தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பதற்கு வந்துள்ள தடை.
2421. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு கடமையாக்கப்பட்டவற்றைத் தவிர (வேறு எந்த நோன்பையும்) சனிக்கிழமையில் நோற்காதீர்கள். உங்களில் ஒருவர் (சனிக்கிழமை அன்று உண்பதற்காக) திராட்சையின் காம்பு அல்லது மரத்தின் குச்சியைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அதையாவது மென்று கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அஸ்ஸம்மாஉ பின்த் புஸ்ர் (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இது மாற்றப்பட்ட சட்டமாகும்.
«لَا تَصُومُوا يَوْمَ السَّبْتِ إِلَّا فِي مَا افْتُرِضَ عَلَيْكُمْ، وَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا لِحَاءَ عِنَبَةٍ، أَوْ عُودَ شَجَرَةٍ فَلْيَمْضَغْهُ»،
சமீப விமர்சனங்கள்