Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-4348

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4348.


صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ صَلَاةَ الْعِشَاءِ فِي آخِرِ حَيَاتِهِ، فَلَمَّا سَلَّمَ قَامَ، فَقَالَ: «أَرَأَيْتُكُمْ لَيْلَتَكُمْ هَذِهِ، فَإِنَّ عَلَى رَأْسِ مِائَةِ سَنَةٍ مِنْهَا لَا يَبْقَى مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الْأَرْضِ أَحَدٌ»،

قَالَ ابْنُ عُمَرَ: فَوَهِلَ النَّاسُ فِي مَقَالَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تِلْكَ فِيمَا يَتَحَدَّثُونَ عَنْ هَذِهِ الْأَحَادِيثِ عَنْ مِائَةِ سَنَةٍ، وَإِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبْقَى مِمَّنْ هُوَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الْأَرْضِ»، يُرِيدُ بِأَنْ يَنْخَرِمَ ذَلِكَ الْقَرْنُ


Abu-Dawood-4206

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4206. ரிஃபாஆ பின் யஸ்ரிபீ-அபூரிம்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தையுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுக்கு மருதாணியால் சாயமிடப்பட்ட, காது மடல்கள் வரை தொங்கும் தலைமுடி இருந்தது. மேலும் அவர்கள் இரண்டு பச்சை நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள்.


انْطَلَقْتُ مَعَ أَبِي نَحْوَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَإِذَا هُوَ «ذُو وَفْرَةٍ بِهَا رَدْعُ حِنَّاءٍ، وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ


Abu-Dawood-4207

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4207. ஹதீஸ் எண்-4206 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் சிறிது கூடுதலாக வந்துள்ளது. அதன் விவரம்:

அப்போது என் தந்தை, ‘உங்கள் முதுகில் உள்ளதை எனக்குக் காட்டுங்கள். நான் ஒரு மருத்துவன். (அதற்கு மருத்துவம் செய்கிறேன்)’ என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே மருத்துவன் (உண்மையில் குணப்படுத்துபவன்). மாறாக, நீர் ஒரு இரக்க குணமுள்ளவர். அதைப் படைத்தவனே அதற்கு மருத்துவன் ஆவான்” என்று கூறினார்கள்.


فِي هَذَا الْخَبَرِ، قَالَ: فَقَالَ لَهُ أَبِي: أَرِنِي هَذَا الَّذِي بِظَهْرِكَ، فَإِنِّي رَجُلٌ طَبِيبٌ، قَالَ: «اللَّهُ الطَّبِيبُ، بَلْ أَنْتَ رَجُلٌ رَفِيقٌ، طَبِيبُهَا الَّذِي خَلَقَهَا»


Abu-Dawood-4611

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

4611. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் தோழர்களில் ஒருவரான யஸீத் பின் உமைரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் எந்த ஒரு திக்ருடைய அமர்வில் அமர்ந்தாலும், ‘அல்லாஹ்தான் நீதியுள்ள தீர்ப்பாளன்; சந்தேகங்கொண்டோர் அழிந்தனர்!’ என்று கூறாமல் இருந்ததில்லை.

ஒருநாள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் சொன்னார்கள்:

“நிச்சயமாக உங்களுக்குப் பின்னால் பெரும் குழப்பங்கள் வர இருக்கின்றன. அவற்றில் (சில), செல்வம் (அளவுக்கு அதிகமாக) பெருகும். மேலும், குர்ஆனின் (கல்வி) விரிவுபடுத்தப்படும். அதனால் அதை நம்பிக்கை கொண்டோரும், நயவஞ்சகர்களும், ஆணும், பெண்ணும், சிறியோரும், பெரியோரும், அடிமையும், சுதந்திரமானவரும் என அனைவரும் கற்றுக்கொள்வார்கள்.

அப்போது (குர்ஆனைப் படித்த) ஒருவர், ‘நான் குர்ஆனைப் படித்துள்ளேன்! ஏன் மக்கள் என்னைப் பின்பற்ற மறுக்கிறார்கள்? நான் அவர்களுக்காக இதல்லாத வேறொன்றைப் புதிதாக உருவாக்காமல், அவர்கள் என்னைப் பின்பற்றப்போவதில்லை’ என்று சொல்லும் நிலை ஏற்படலாம்.

எனவே, நீங்கள் புதிதாக உருவாக்கப்பட்டவற்றை விட்டும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் வழிகேடே ஆகும்.

ஒரு அறிஞர் நேர்வழியிலிருந்து விலகுவதைப் பற்றி நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் சில

كَانَ لَا يَجْلِسُ مَجْلِسًا لِلذِّكْرِ حِينَ يَجْلِسُ إِلَّا قَالَ: «اللَّهُ حَكَمٌ قِسْطٌ هَلَكَ الْمُرْتَابُونَ»، فَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ يَوْمًا: ” إِنَّ مِنْ وَرَائِكُمْ فِتَنًا يَكْثُرُ فِيهَا الْمَالُ، وَيُفْتَحُ فِيهَا الْقُرْآنُ حَتَّى يَأْخُذَهُ الْمُؤْمِنُ وَالْمُنَافِقُ، وَالرَّجُلُ، وَالْمَرْأَةُ، وَالصَّغِيرُ، وَالْكَبِيرُ، وَالْعَبْدُ، وَالْحُرُّ، فَيُوشِكُ قَائِلٌ أَنْ يَقُولَ: مَا لِلنَّاسِ لَا يَتَّبِعُونِي وَقَدْ قَرَأْتُ الْقُرْآنَ؟ مَا هُمْ بِمُتَّبِعِيَّ حَتَّى أَبْتَدِعَ لَهُمْ غَيْرَهُ، فَإِيَّاكُمْ وَمَا ابْتُدِعَ، فَإِنَّ مَا ابْتُدِعَ ضَلَالَةٌ، وَأُحَذِّرُكُمْ زَيْغَةَ الْحَكِيمِ، فَإِنَّ الشَّيْطَانَ قَدْ يَقُولُ كَلِمَةَ الضَّلَالَةِ عَلَى لِسَانِ الْحَكِيمِ، وَقَدْ يَقُولُ الْمُنَافِقُ كَلِمَةَ الْحَقِّ “، قَالَ: قُلْتُ لِمُعَاذٍ: مَا يُدْرِينِي رَحِمَكَ اللَّهُ أَنَّ الْحَكِيمَ قَدْ يَقُولُ كَلِمَةَ الضَّلَالَةِ وَأَنَّ الْمُنَافِقَ قَدْ يَقُولُ كَلِمَةَ الْحَقِّ؟ قَالَ: «بَلَى، اجْتَنِبْ مِنْ كَلَامِ الْحَكِيمِ الْمُشْتَهِرَاتِ الَّتِي يُقَالُ لَهَا مَا هَذِهِ، وَلَا يُثْنِيَنَّكَ ذَلِكَ عَنْهُ، فَإِنَّهُ لَعَلَّهُ أَنْ يُرَاجِعَ، وَتَلَقَّ الْحَقَّ إِذَا سَمِعْتَهُ فَإِنَّ عَلَى الْحَقِّ نُورًا»،


Abu-Dawood-2038

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2038.


أَنَّ سَعْدًا، وَجَدَ عَبِيدًا مِنْ عَبِيدِ الْمَدِينَةِ يَقْطَعُونَ مِنْ شَجَرِ الْمَدِينَةِ فَأَخَذَ مَتَاعَهُمْ، وَقَالَ: يَعْنِي لِمَوَالِيهِمْ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى أَنْ يُقْطَعَ مِنْ شَجَرِ الْمَدِينَةِ شَيْءٌ، وَقَالَ: «مَنْ قَطَعَ مِنْهُ شَيْئًا فَلِمَنْ أَخَذَهُ سَلَبُهُ»


Abu-Dawood-3477

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3477. ஹிஜ்ரத் செய்த நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்:

நான் நபி (ஸல்) அவர்களுடன் மூன்று முறை போரில் கலந்துக் கொண்டுள்ளேன். அவர்கள், “முஸ்லிம் (மக்கள்) அனைவருக்கும் மூன்று (விஷயங்களில்) பொதுவான பங்கு உண்டு. அவை மேய்ச்சல் நிலம், தண்ணீர், நெருப்பு” என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.


غَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا أَسْمَعُهُ، يَقُولُ: ” الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلَاثٍ: فِي الْكَلَإِ، وَالْمَاءِ، وَالنَّارِ “


Abu-Dawood-886

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

886. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ருகூஃ செய்தால், ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ (மகத்தான என் இரட்சகனைத் துதிக்கிறேன்) என்பதை மூன்று முறை கூறட்டும். இதுவே குறைந்தபட்ச அளவாகும்.

மேலும், அவர் ஸஜ்தா செய்தால், ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ (உயர்ந்த என் இரட்சகனைத் துதிக்கிறேன்) என்பதை மூன்று முறை கூறட்டும். இதுவே குறைந்தபட்ச அளவாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இது முர்ஸலான அறிவிப்பாளர்தொடராகும். (ஏனெனில் இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அவ்ன் பின் அப்துல்லாஹ் அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை.


” إِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيَقُلْ ثَلَاثَ مَرَّاتٍ: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ، وَذَلِكَ أَدْنَاهُ، وَإِذَا سَجَدَ فَلْيَقُلْ: سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى ثَلَاثًا، وَذَلِكَ أَدْنَاهُ “،


Abu-Dawood-4010

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4010. அபுல்மலீஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஷாம் (எனும் சிரியா) நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது ஆயிஷா (ரலி), “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் ஷாம் நாட்டினர்” என்று பதிலளித்தனர்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “உங்கள் ஊரில் பெண்கள் பொதுக் குளிப்பிடங்களுக்கு செல்கின்றார்கள் தானே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்” என்று கூறினர். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அறிந்து கொள்ளுங்கள்! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவ்வாறு கூற செவியுற்றிருக்கிறேன்:

தனது வீட்டைத் தவிர வேறு இடத்தில் தனது ஆடையைக் களையும் எந்தப் பெண்ணும் அவளுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான திரையைக் கிழித்துவிட்டாள் (அதாவது வெட்கத்தைக் கைவிட்டுவிட்டாள்).


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இது ஜரீர் பின் அப்துல்ஹமீத் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸாகும். இதுவே முழுமையானது.

ஜரீர் அவர்கள் அபுல்மலீஹ் அவர்களைக் குறிப்பிடவில்லை. (மாறாக மன்ஸூர் —> ஸாலிம் பின் அபுல்ஜஃத் —> ஆயிஷா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றே குறிப்பிட்டுள்ளார்.


دَخَلَ نِسْوَةٌ مِنْ أَهْلِ الشَّامِ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَتْ: مِمَّنْ أَنْتُنَّ قُلْنَ مِنْ أَهْلِ الشَّامِ قَالَتْ: لَعَلَّكُنَّ مِنَ الْكُورَةِ الَّتِي تَدْخُلُ نِسَاؤُهَا الْحَمَّامَاتِ قُلْنَ: نَعَمْ قَالَتْ: أَمَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنَ امْرَأَةٍ تَخْلَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِهَا إِلَّا هَتَكَتْ، مَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ تَعَالَى»


Abu-Dawood-5191

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

அனுமதி கோர வேண்டிய மூன்று அந்தரங்க நேரங்கள்.

5191. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களில் அதிகமானோர் (அல்குர்ஆன்: 24:58) இல் வரும் அனுமதி கோரும் இறைவசனத்தின்படி நடக்கவில்லை. ஆனால், நான் என்னுடைய இந்த அடிமைப்பெண்ணை என்னிடம் வருவதற்கு அனுமதி கோருமாறு ஏவுகிறேன்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அபூயஸீத் (ரஹ்)


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளார்.


«لَمْ يُؤْمَرْ بِهَا أَكْثَرُ النَّاسِ آيَةَ الْإِذْنِ، وَإِنِّي لَآمُرُ جَارِيَتِي هَذِهِ تَسْتَأْذِنُ عَلَيَّ»


Abu-Dawood-5192

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5192. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஈராக்வாசிகளில் சிலர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து, “இப்னு அப்பாஸ் அவர்களே! அல்லாஹ் நமக்கு உத்தரவிட்ட ஒரு வசனத்தைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அந்த வசனத்தின்படி யாரும் செயல்படுவதில்லையே!. அந்த வசனம் (கீழ்க்கண்ட) இதுதான்” என்று கூறினர்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய மூன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 24:58)

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் விசயத்தில் பொறுமையுடையவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கிறான். மறைப்பதை அவன் விரும்புகிறான்.

அன்றைய

أَنَّ نَفَرًا مِنْ أَهْلِ الْعِرَاقِ قَالُوا: يَا ابْنَ عَبَّاسٍ كَيْفَ تَرَى فِي هَذِهِ الْآيَةِ الَّتِي أُمِرْنَا فِيهَا بِمَا أُمِرْنَا، وَلَا يَعْمَلُ بِهَا أَحَدٌ؟ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ} [النور: 58] لَكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُمْ قَرَأَ الْقَعْنَبِيُّ إِلَى {عَلِيمٌ حَكِيمٌ} [النور: 59] قَالَ ابْنُ عَبَّاسٍ: «إِنَّ اللَّهَ حَلِيمٌ رَحِيمٌ بِالْمُؤْمِنِينَ يُحِبُّ السَّتْرَ، وَكَانَ النَّاسُ لَيْسَ لِبُيُوتِهِمْ سُتُورٌ وَلَا حِجَالٌ، فَرُبَّمَا دَخَلَ الْخَادِمُ أَوِ الْوَلَدُ أَوْ يَتِيمَةُ الرَّجُلِ وَالرَّجُلُ عَلَى أَهْلِهِ، فَأَمَرَهُمُ اللَّهُ بِالِاسْتِئْذَانِ فِي تِلْكَ الْعَوْرَاتِ، فَجَاءَهُمُ اللَّهُ بِالسُّتُورِ وَالْخَيْرِ، فَلَمْ أَرَ أَحَدًا يَعْمَلُ بِذَلِكَ بَعْدُ»


Next Page » « Previous Page