பாடம்: 8
சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பவர் ஸலாமுக்கு பதில் கூறலாமா?
16. (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களைக் கடந்து சென்ற ஒருவர் அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் (ஸலாம்) கூறவில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
நபி (ஸல்) அவர்கள் தயம்மும் செய்த பின்னர் அம்மனிதருக்கு பதில் ஸலாம் கூறினார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாகவும், மற்றவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
«مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ، فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ»
சமீப விமர்சனங்கள்