Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-4509

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4509. ஒரு யூதப் பெண் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆட்டை அன்பளிப்பாகக் கொடுத்தார். என்றாலும் நபி (ஸல்) அவர்கள், அதற்காக அவளை (தண்டித்து) பழிவாங்கவில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கொடுத்த இந்த யூதப்பெண், முரஹ்ஹப் என்ற யூதனின் சகோதரி ஆவார்.


أَنَّ امْرَأَةً، مِنَ الْيَهُودِ أَهْدَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: شَاةً مَسْمُومَةً، قَالَ: «فَمَا عَرَضَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Abu-Dawood-4358

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4358.


كَانَ عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ يَكْتُبُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَزَلَّهُ الشَّيْطَانُ، فَلَحِقَ بِالْكُفَّارِ، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقْتَلَ يَوْمَ الْفَتْحِ، فَاسْتَجَارَ لَهُ عُثْمَانُ بْنُ عَفَّانَ، فَأَجَارَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Abu-Dawood-4359

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4359.

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், அப்துல்லாஹ் இப்னு சஅத் இப்னு அபீ ஸர்ஹ் (ரலி) அவர்கள், உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்களிடம் ஒளிந்து கொண்டார். பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் அவரை அழைத்து வந்து நபி (ஸல்) அவர்களிடம் நிறுத்தினார். அப்போது அவர், “யா ரசூலல்லாஹ்! அப்துல்லாஹ்வுக்குப் பைஅத் செய்யுங்கள்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி மூன்று முறை அவரைப் பார்த்தார்கள். அந்த மூன்று முறையும் பைஅத் செய்ய மறுத்தார்கள். மூன்று முறைக்குப்பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர் தங்கள் தோழர்களை நோக்கி, “நான் இவருக்குப் பைஅத் செய்ய என் கையைத் தடுத்தபோது, இவரைப் பிடித்துக் கொல்ல ஒரு புத்திசாலி மனிதர் கூட உங்களில் இல்லையா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “யா ரசூலல்லாஹ்! உங்கள் மனதில் என்ன இருந்தது என்று எங்களுக்கு எப்படித் தெரியும்? உங்கள் கண்ணால் எங்களுக்குச் சைகை செய்திருக்கக்கூடாதா?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரு நபிக்கு கண்களால் சைகை செய்யும் துரோகம் இருக்கக் கூடாது” என்று கூறினார்கள்.


لَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ، اخْتَبَأَ عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ عِنْدَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَجَاءَ بِهِ حَتَّى أَوْقَفَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، بَايِعْ عَبْدَ اللَّهِ، فَرَفَعَ رَأْسَهُ، فَنَظَرَ إِلَيْهِ ثَلَاثًا، كُلُّ ذَلِكَ يَأْبَى، فَبَايَعَهُ بَعْدَ ثَلَاثٍ، ثُمَّ أَقْبَلَ عَلَى أَصْحَابِهِ، فَقَالَ: «أَمَا كَانَ فِيكُمْ رَجُلٌ رَشِيدٌ يَقُومُ إِلَى هَذَا حَيْثُ رَآنِي كَفَفْتُ يَدِي عَنْ بَيْعَتِهِ، فَيَقْتُلُهُ؟» فَقَالُوا: مَا نَدْرِي يَا رَسُولَ اللَّهِ مَا فِي نَفْسِكَ، أَلَّا أَوْمَأْتَ إِلَيْنَا بِعَيْنِكَ؟ قَالَ: «إِنَّهُ لَا يَنْبَغِي لِنَبِيٍّ أَنْ تَكُونَ لَهُ خَائِنَةُ الْأَعْيُنِ»


Abu-Dawood-2683

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2683.

…மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், நபி (ஸல்) அவர்கள் நான்கு ஆண்களையும் இரண்டு பெண்களையும் தவிர்த்து மற்ற அனைவருக்கும் அபயம் அளித்தார்கள். மேலும் அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார்கள். – இப்னு அபீ ஸர்ஹ் பற்றி குறிப்பிட்டபோது – ஹதீஸைச் சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இப்னு அபீ ஸர்ஹ் விஷயத்தில், அவர் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்களிடம் ஒளிந்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குப் பைஅத் செய்ய அழைத்தபோது, உஸ்மான் (ரலி) அவர்கள் அவரை அழைத்து வந்து நபி (ஸல்) அவர்களிடம் நிறுத்தினார். அப்போது அவர், ‘யா நபி (ஸல்) அவர்களே! அப்துல்லாஹ்வுக்குப் பைஅத் செய்யுங்கள்’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி அவரைப் பார்த்தார்கள். மூன்று முறையும் பைஅத் செய்ய மறுத்தார்கள். மூன்று முறைக்குப்பிறகு பைஅத் செய்தார்கள்.

பிறகு தங்கள் தோழர்களை நோக்கி, “நான் இவருக்குப் பைஅத் செய்ய என் கையைத் தடுத்தபோது, இவரைப் பிடித்துக் கொல்ல ஒரு புத்திசாலி மனிதர் கூட உங்களில் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “யா ரசூலல்லாஹ்! உங்கள் மனதில் என்ன இருந்தது என்று எங்களுக்கு எப்படித் தெரியும்? உங்கள் கண்ணால் எங்களுக்குச் சைகை செய்திருக்கக்கூடாதா?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரு

لَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ أَمَّنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ إِلَّا أَرْبَعَةَ نَفَرٍ وَامْرَأَتَيْنِ وَسَمَّاهُمْ. – وَابْنُ أَبِي سَرْحٍ، فَذَكَرَ الْحَدِيثَ – قَالَ: وَأَمَّا ابْنُ أَبِي سَرْحٍ فَإِنَّهُ اخْتَبَأَ عِنْدَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَلَمَّا دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ إِلَى الْبَيْعَةِ جَاءَ بِهِ حَتَّى أَوْقَفَهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ بَايِعْ عَبْدَ اللَّهِ، فَرَفَعَ رَأْسَهُ فَنَظَرَ إِلَيْهِ ثَلَاثًا كُلُّ ذَلِكَ يَأْبَى فَبَايَعَهُ بَعْدَ ثَلَاثٍ، ثُمَّ أَقْبَلَ عَلَى أَصْحَابِهِ فَقَالَ: «أَمَا كَانَ فِيكُمْ رَجُلٌ رَشِيدٌ يَقُومُ إِلَى هَذَا حَيْثُ رَآنِي كَفَفْتُ يَدِي عَنْ بَيْعَتِهِ فَيَقْتُلُهُ؟» فَقَالُوا: مَا نَدْرِي يَا رَسُولَ اللَّهِ، مَا فِي نَفْسِكَ أَلَا أَوْمَأْتَ إِلَيْنَا بِعَيْنِكَ. قَالَ: «إِنَّهُ لَا يَنْبَغِي لِنَبِيٍّ أَنْ تَكُونَ لَهُ خَائِنَةُ الْأَعْيُنِ»


Abu-Dawood-4093

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4093.

…நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஃமினின் கீழங்கி கணுக்காலின் பாதியளவாகும். கணுக்காலுக்கும் கரண்டைக்கும் மத்தியில் இருந்தால் குற்றமில்லை. கரண்டைக்கும் கீழாக இருந்தால் அது நரகத்திற்கு உரியதாகும். யார் பெருமையோடு ஆடையை இழுத்துச் செல்கிறாரோ அல்லாஹ் அவரை கியாம நாளில் பார்க்க மாட்டான்.


سَأَلْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ عَنِ الإِزَارِ، فَقَال: عَلَى الْخَبِيرِ سَقَطْتَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِزْرَةُ الْمُسْلِمِ إِلَى نِصْفِ السَّاقِ، وَلَا حَرَجَ – أَوْ لَا جُنَاحَ – فِيمَا بَيْنَهُ وَبَيْنَ الْكَعْبَيْنِ، مَا كَانَ أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ فَهُوَ فِي النَّارِ، مَنْ جَرَّ إِزَارَهُ بَطَرًا لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ»


Abu-Dawood-4094

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4094.

…“ஆடையைத் தொங்க விடுவது என்பது கீழங்கியிலும், சட்டையிலும், தலைப்பாகையிலும் இருக்கிறது. யார் இவைகளைப் பெருமைக்காக இழுத்துச் செல்கிறாரோ அவரை கியாம நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«الْإِسْبَالُ فِي الْإِزَارِ، وَالْقَمِيصِ، وَالْعِمَامَةِ، مَنْ جَرَّ مِنْهَا شَيْئًا خُيَلَاءَ، لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ»


Abu-Dawood-4141

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4141.

…நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஆடை அணியும் போதும் உளூச் செய்யும் போதும் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.


«إِذَا لَبِسْتُمْ، وَإِذَا تَوَضَّأْتُمْ، فَابْدَءُوا بِأَيَامِنِكُمْ»


Abu-Dawood-4018

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4018.

…ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


«لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عُرْيَةِ الرَّجُلِ، وَلَا الْمَرْأَةُ إِلَى عُرْيَةِ الْمَرْأَةِ، وَلَا يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ، وَلَا تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي ثَوْبٍ»


Abu-Dawood-4066

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4066.

அம்ரு பின் ஷுஐப் தன் பாட்டனார் மூலம் அறிவிக்கிறார்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு உயரமான இடத்திலிருந்து இறங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் மீது மிருதுவான ஆடையில் கடுமையாக குங்குமப்பூ சாயமிடப்பட்டிருப்பதைக் கண்டு, “இது என்ன? மிருதுவான ஆடையில் இவ்வளவு காவி நிறத்தால் சாயமிடப்பட்டு இருக்கிறதே?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் வெறுப்பதை நான் அறிந்து என்னுடைய வீட்டிற்கு வந்தேன். அங்கு அடுப்பு மூட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த அடுப்பில் தூக்கி எறிந்து விட்டு மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்த சாயமிடப்பட்ட ஆடையை என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். நான் விஷயத்தைக் கூறினேன் அதற்கு நபியவர்கள், “அதை உன் குடும்பத்தாருக்கு அணிவிக்கக் கொடுத்திருக்க கூடாதா? பெண்கள் அணிவது தவறில்லையே” என்றார்கள்.


هَبَطْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ثَنِيَّةٍ، فَالْتَفَتَ إِلَيَّ وَعَلَيَّ رَيْطَةٌ مُضَرَّجَةٌ بِالْعُصْفُرِ، فَقَالَ: «مَا هَذِهِ الرَّيْطَةُ عَلَيْكَ؟» فَعَرَفْتُ مَا كَرِهَ، فَأَتَيْتُ أَهْلِي وَهُمْ يَسْجُرُونَ تَنُّورًا لَهُمْ، فَقَذَفْتُهَا فِيهِ، ثُمَّ أَتَيْتُهُ مِنَ الْغَدِ، فَقَالَ: «يَا عَبْدَ اللَّهِ، مَا فَعَلَتِ الرَّيْطَةُ؟» فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «أَلَا كَسَوْتَهَا بَعْضَ أَهْلِكَ، فَإِنَّهُ لَا بَأْسَ بِهِ لِلنِّسَاءِ»


Abu-Dawood-4843

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4843. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரைமுடியுள்ள (முதியவரான) முஸ்லிமையும்; குர்ஆனை மனனம் செய்து அதை ஓதுவதில் மிகைப்படுத்தாமலும், அதிலிருந்து விலகாமலும் ஓதிவருபவரையும்; நீதியுடன் ஆட்சி செய்பவரையும் கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துவதில் உள்ளதாகும்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


«إِنَّ مِنْ إِجْلَالِ اللَّهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ، وَحَامِلِ الْقُرْآنِ غَيْرِ الْغَالِي فِيهِ وَالْجَافِي عَنْهُ، وَإِكْرَامَ ذِي السُّلْطَانِ الْمُقْسِطِ»


Next Page » « Previous Page