Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-108

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

108. உலூச் செய்யும் முறை பற்றி இப்னு அபி முலைக்கா அவர்களிடம் வினவப்பட்டபோது, ‎அவர் உஸ்மான் (ரலி) அவர்களிடம் உலூச் செய்யும் முறை பற்றி வினவப்பட்டது. ‎அப்போது அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிச் சொன்னார்கள். அவர்களிடம் ஒரு ‎தண்ணீர் பாத்திரம் கொண்டு வரப்பட்டதும் அதை தனது வலது கையில் சாய்த்து (நீர் விட்டு ‎கழுவிய பின்) கையை தண்ணீர் பாத்திரத்திற்குள் செலுத்தி மூன்று முறை வாய் ‎கொப்பளித்தார்கள். மும்முறை நாசிக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தார்கள். மும்முறை ‎முகத்தை கழுவினார்கள். பின்பு மூன்று முறை வலது கையையும்,. மூன்று முறை இடது ‎கையையும் கழுவினார்கள். பின்பு கையை தண்ணீருள் செலுத்தி தண்ணீர் எடுத்து தமது ‎தலைக்கு மஸஹ் செய்தார்கள் (காதுகளுக்கு மஸஹ் செய்யும் போது) காதுகளின் உட்புறம் ‎வெளிப்புறமும் ஒரு தடவை கழுவினார்கள். பின்பு இரு கால்களையும் கழுவினார்கள். ‎பிறகு உலூவின் முறை பற்றி கேட்டவர் எங்கே? (என்று வினவி) இவ்வாறே நான் ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்யக் கண்டேன் என்று உஸ்மான் பின் ‎அப்பாஸ் (ரலி) கூறினார்கள். ‎

அறிவிப்பவர் : உஸ்மான் பின் அப்துர்ரஹ்மான் அத்தைமியி

Read More »

Abu-Dawood-106

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 50

அண்ணல் நபி ஸல் அவர்கள் உளூச் செய்த விதம்.

106. உஸ்மான் (ரலி) அவர்கள் உலூச் செய்த போது தன் இரு கைகளிலும் தண்ணீர் ஊற்றிக் ‎கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் ‎முகத்தை மும்முறை கழுவினார்கள். பின்னர் வலது கையை முழங்கை உட்பட மூன்று ‎முறை கழுவினார்கள். பின்னர் இடது கையையும் அதே போலக் கழுவினார்கள். பின்னர் ‎தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் வலது காலை மூன்று முறை கழுவினார்கள். ‎அதே போல இடது காலையும் கழுவினார்கள். பின்பு நான் இப்போது உலூச் செய்தது ‎போலவே நபி (ஸல்) அவர்களையும் உலூச் செய்யப் பார்த்திருக்கிறேன் என்றார்கள். யார் ‎நான் உலூச் செய்தது போலேவே உலூச் செய்து அவர் தனது மனதில் எவ்வித ‎எண்ணங்களுக்கும் இடமளிக்காமல் இரண்டு ரக்அத் தொழுதால் அவரது முன் பாவங்களை ‎அல்லாஹ் மன்னித்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் ‎‎(ரலி) அறிவிக் கிறார்கள். இதை உஸ்மான் (ரலி) அவர் களின் அடிமை அபான் ‎அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் ‎பெற்றுள்ளது.)‎


رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ تَوَضَّأَ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ ثَلَاثًا فَغَسَلَهُمَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَغَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثًا، ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ، ثُمَّ غَسَلَ قَدَمَهُ الْيُمْنَى ثَلَاثًا، ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا، ثُمَّ قَالَ: «مَنْ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»


Abu-Dawood-3097

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3097.


«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، وَعَادَ أَخَاهُ الْمُسْلِمَ مُحْتَسِبًا بُوعِدَ مِنْ جَهَنَّمَ، مَسِيرَةَ سَبْعِينَ خَرِيفًا» قُلْتُ: يَا أَبَا حَمْزَةَ، وَمَا الْخَرِيفُ؟ قَالَ: «الْعَامُ»،


Abu-Dawood-5042

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5042.


«مَا مِنْ مُسْلِمٍ يَبِيتُ عَلَى ذِكْرٍ طَاهِرًا، فَيَتَعَارُّ مِنَ اللَّيْلِ فَيَسْأَلُ اللَّهَ خَيْرًا مِنَ الدُّنْيَا وَالْآخِرَةِ إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ» قَالَ ثَابِتٌ الْبُنَانِيُّ: قَدِمَ عَلَيْنَا أَبُو ظَبْيَةَ، فَحَدَّثَنَا بِهَذَا الْحَدِيثِ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ ثَابِتٌ: قَالَ فُلَانٌ: لَقَدْ جَهِدْتُ أَنْ أَقُولَهَا حِينَ أَنْبَعِثُ فَمَا قَدَرْتُ عَلَيْهَا


Abu-Dawood-466

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

466. ஹைவா பின் ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உக்பா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, நபி (ஸல்) அவர்கள், பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ‘அவூது பில்லாஹில் அளீம், வபிவஜ்ஹிஹில் கரீம், வ ஸுல்தானிஹில் கதீம், மினஷ்ஷைத்தானிர்ரஜீம்” (பொருள்: மகத்துவ மிக்க அல்லாஹ்வைக் கொண்டும், அவனின் சங்கையான திருமுகத்தைக்கொண்டும், அவனின் புராதான (நிலைத்திருக்கும்) ஆட்சியைக்கொண்டும் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன்)

என்று கூறுவார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாக நீங்கள் அறிவித்தீர்கள் எனக் கேள்விப்பட்டேன் என்று கூறினேன்.

அதற்கு உக்பா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள், இந்த அளவுதானா? (உமக்கு செய்தி கிடைத்தது?) என்று கேட்டார். நான், ஆம் என்று கூறினேன். அதற்கு அவர்கள், இந்த துஆவைக் கூறினால் ஷைத்தான், “இந்த நாள் முழுவதும் இவர் என்னைவிட்டு பாதுகாக்கப்பட்டுவிட்டார் என்று கூறுவான்” எனக் கூறினார்கள்.


لَقِيتُ عُقْبَةَ بْنَ مُسْلِمٍ، فَقُلْتُ لَهُ: بَلَغَنِي أَنَّكَ حَدَّثْتَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ قَالَ: «أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ»، قَالَ: أَقَطْ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: فَإِذَا قَالَ: ذَلِكَ قَالَ الشَّيْطَانُ: حُفِظَ مِنِّي سَائِرَ الْيَوْمِ


Abu-Dawood-465

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

பள்ளிவாசலுக்குள் நுழைபவர் என்ன சொல்ல வேண்டும்?

465. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது “நபி (ஸல்) அவர்கள் மீது ஸலாம் கூறட்டும். பின்பு, “அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக” (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்;

பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக” (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்.

அறிவிப்பவர்கள்: அபூஹுமைத் (ரலி), அல்லது அபூஉசைத் (ரலி)


إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ لِيَقُلْ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، فَإِذَا خَرَجَ فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ


Abu-Dawood-2386

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2386. நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் என்னை முத்தமிடுவார்கள்; மேலும் என் நாவை உறுஞ்சுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இப்னுல் அஃராபீ அவர்கள் இது சரியான அறிவிப்பாளர்தொடரல்ல என்று கூறியுள்ளார்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ، وَيَمُصُّ لِسَانَهَا»،


Abu-Dawood-2384

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2384. நானும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நோன்பு வைத்த நிலையிலும், அவர்கள் என்னை முத்தமிடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُنِي وَهُوَ صَائِمٌ، وَأَنَا صَائِمَةٌ»


Abu-Dawood-2383

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2383. நபி (ஸல்) அவர்கள் நோன்பு மாதத்தில் (தம் மனைவியரை) முத்தமிடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ فِي شَهْرِ الصَّوْمِ»


Abu-Dawood-179

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

179.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَ امْرَأَةً مِنْ نِسَائِهِ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ»، قَالَ عُرْوَةُ: مَنْ هِيَ إِلَّا أَنْتِ؟ فَضَحِكَتْ،


Next Page » « Previous Page