Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-3221

ஹதீஸின் தரம்: More Info

3221. இறந்தவரின் பிரேதத்தை அடக்கம் செய்து முடித்தவுடன் அதன் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு (மக்களை நோக்கி) ‘உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்’ என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا فَرَغَ مِنْ دَفْنِ الْمَيِّتِ وَقَفَ عَلَيْهِ، فَقَالَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ، وَسَلُوا لَهُ بِالتَّثْبِيتِ، فَإِنَّهُ الْآنَ يُسْأَلُ»


Abu-Dawood-3311

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3311. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ»


Abu-Dawood-3310

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3310.


أَنَّ امْرَأَةً، جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنَّهُ كَانَ عَلَى أُمِّهَا صَوْمُ شَهْرٍ أَفَأَقْضِيهِ عَنْهَا، فَقَالَ: «لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ: «فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى»


Abu-Dawood-3308

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3308. ஒரு பெண் கடல் பயணம் சென்றார். அப்போது அவர் (கடல் பயணத்தின் ஆபத்திலிருந்து) அல்லாஹ் காப்பாற்றிவிட்டால் ஒரு மாதம் நோன்பு வைப்பேன் என்று நேர்ச்சை செய்துக்கொண்டார். அல்லாஹ்வும் அவரைக் காப்பாற்றிவிட்டான். அந்த நோன்புகளை நிறைவேற்றாமல் அவர் இறந்துவிட்டார். அவரின் மகளோ அல்லது சகோதரியோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றி  கூறினார். நபி (ஸல்) அவர்கள் (இறந்துவிட்டவரின் சார்பாக) நீங்கள் அந்த நோன்பை நிறைவேற்றுங்கள் என்று அவருக்கு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி


أَنَّ امْرَأَةً رَكِبَتِ الْبَحْرَ فَنَذَرَتْ إِنْ نَجَّاهَا اللَّهُ أَنْ تَصُومَ شَهْرًا، فَنَجَّاهَا اللَّهُ، فَلَمْ تَصُمْ حَتَّى مَاتَتْ فَجَاءَتْ، ابْنَتُهَا أَوْ أُخْتُهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَمَرَهَا أَنْ تَصُومَ عَنْهَا»


Abu-Dawood-3307

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3307. என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், அதை அவரின் சார்பாக நீர் நிறைவேற்றுவீராக! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ اسْتَفْتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ لَمْ تَقْضِهِ؟ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْضِهِ عَنْهَا»


Abu-Dawood-2401

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2401.


«إِذَا مَرِضَ الرَّجُلُ فِي رَمَضَانَ، ثُمَّ مَاتَ وَلَمْ يَصُمْ أُطْعِمَ عَنْهُ، وَلَمْ يَكُنْ عَلَيْهِ قَضَاءٌ، وَإِنْ كَانَ عَلَيْهِ نَذْرٌ قَضَى عَنْهُ وَلِيُّهُ»


Abu-Dawood-2400

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்து விட்டால்…?

2400. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ»


Abu-Dawood-1681

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1681. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் தாய்-உம்மு ஸஅது இறந்து விட்டார். (அவர் சார்பில் நான் செய்யும்) எந்த தர்மம் சிறந்த தர்மம்?’ என்று கேட்டேன். அதற்கு ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் ஒரு கிணற்றை வெட்டி இது உம்மு ஸஅதின் (நன்மைக்கான) கிணறு என்று கூறினார்.

அறிவிப்பவர் : ஒரு மனிதர்


أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ، فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟، قَالَ: «الْمَاءُ»، قَالَ: فَحَفَرَ بِئْرًا، وَقَالَ: هَذِهِ لِأُمِّ سَعْدٍ


Abu-Dawood-1679

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1679. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘எந்த தர்மம் உங்களிடத்தில் விருப்பமான தர்மம்?’ என்று கேட்டார். அதற்கு தண்ணீர் (வழங்குதல்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்)


أَنَّ سَعْدًا، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَيُّ الصَّدَقَةِ أَعْجَبُ إِلَيْكَ؟ قَالَ: «الْمَاءُ»،


Abu-Dawood-3132

ஹதீஸின் தரம்: Pending

3132. (ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், மூத்தா போரில் கொல்லப்பட்டு மரணித்த செய்தியை மக்களுக்கு அறிவித்துவிட்டு) ‘ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)


«اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا، فَإِنَّهُ قَدْ أَتَاهُمْ أَمْرٌ شَغَلَهُمْ»


Next Page » « Previous Page