தனது தந்தை இணைத்து வாழ்ந்த (உறவுகளை) இணைத்து வாழ்பவரின் நன்மை பற்றிய பாடம்.
ஒரு பயணத்தில் இப்னு உமர் (ரலி) அவர்களை ஒரு அரபி கடந்து சென்றார். அந்த அரபியுடைய தந்தை உமர் (ரலி) அவர்களின் தோழரராவார். நீ இன்னாருடைய மகன் தானே? என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அந்த அரபியிடம் கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று பதிலளித்தார். பிறகு அவரை பின் தொடரும் கழுதையை அவருக்கு கொடுக்கும்படி இப்னு உமர் (ரலி) அவர்கள் கட்டையிட்டார்கள். மேலும் தனது தலையில் இருந்த தலைப்பாகை அவரிடம் கழற்றிக் கொடுத்தார். அவருக்கு இரண்டு திர்ஹம்கள் போதுமானதக இல்லையா? என்று அவருடன் இருந்த சிலர் கேட்டார்கள். அதற்கு (இப்னு உமர் ரலி) அவர்கள்: உன் தந்தையின் நேசத்திற் குரியவர்களின் உறவை நீ பாதுகாத்துக் கொள். அவர்களின் உறவை துண்டிக்காதே பிறகு அல்லாஹ் உனது ஒளியை அணைத்துவிடுவான்” என்று அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
مَرَّ أَعْرَابِيٌّ فِي سَفَرٍ، فَكَانَ أَبُو الأَعْرَابِيِّ صَدِيقًا لِعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ لِلأَعْرَابِيِّ: أَلَسْتَ ابْنَ فُلانٍ ؟، قَالَ: بَلَى، فَأَمَرَ لَهُ ابْنُ عُمَرَ بِحِمَارٍ كَانَ يَسْتَعْقِبُ، وَنَزَعَ عِمَامَتَهُ عَنْ رَأْسِهِ، فَأَعْطَاهُ، فَقَالَ بَعْضُ مَنْ مَعَهُ: أَمَا يَكْفِيهِ دِرْهَمَانِ؟ فَقَالَ: قَالَ النَّبِيُّ : احْفَظْ وُدَّ أَبِيكَ، لا تَقْطَعْهُ فَيُطْفِئُ اللَّهُ نُورَكَ “
சமீப விமர்சனங்கள்