Category: அல்அதபுல் முஃப்ரத்

Al-Adab al-Mufrad

Al-Adabul-Mufrad-40

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தனது தந்தை இணைத்து வாழ்ந்த (உறவுகளை) இணைத்து வாழ்பவரின் நன்மை பற்றிய பாடம்.

ஒரு பயணத்தில் இப்னு உமர் (ரலி) அவர்களை ஒரு அரபி கடந்து சென்றார். அந்த அரபியுடைய தந்தை உமர் (ரலி) அவர்களின் தோழரராவார். நீ இன்னாருடைய மகன் தானே? என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அந்த அரபியிடம் கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று பதிலளித்தார். பிறகு அவரை பின் தொடரும் கழுதையை அவருக்கு கொடுக்கும்படி இப்னு உமர் (ரலி) அவர்கள் கட்டையிட்டார்கள். மேலும் தனது தலையில் இருந்த தலைப்பாகை அவரிடம் கழற்றிக் கொடுத்தார். அவருக்கு இரண்டு திர்ஹம்கள் போதுமானதக இல்லையா? என்று அவருடன் இருந்த சிலர் கேட்டார்கள். அதற்கு  (இப்னு உமர் ரலி) அவர்கள்: உன் தந்தையின் நேசத்திற் குரியவர்களின்  உறவை நீ பாதுகாத்துக் கொள். அவர்களின் உறவை துண்டிக்காதே பிறகு அல்லாஹ் உனது ஒளியை அணைத்துவிடுவான்” என்று அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


مَرَّ أَعْرَابِيٌّ فِي سَفَرٍ، فَكَانَ أَبُو الأَعْرَابِيِّ صَدِيقًا لِعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ لِلأَعْرَابِيِّ: أَلَسْتَ ابْنَ فُلانٍ ؟، قَالَ: بَلَى، فَأَمَرَ لَهُ ابْنُ عُمَرَ بِحِمَارٍ كَانَ يَسْتَعْقِبُ، وَنَزَعَ عِمَامَتَهُ عَنْ رَأْسِهِ، فَأَعْطَاهُ، فَقَالَ بَعْضُ مَنْ مَعَهُ: أَمَا يَكْفِيهِ دِرْهَمَانِ؟ فَقَالَ: قَالَ النَّبِيُّ : احْفَظْ وُدَّ أَبِيكَ، لا تَقْطَعْهُ فَيُطْفِئُ اللَّهُ نُورَكَ “


Al-Adabul-Mufrad-35

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக செய்யப்படும் நல்லறங்கள் பற்றிய பாடம்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஒரு மனிதர் எழுந்து அல்லாஹுவின் தூதரே! என் பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்கு நான் நன்மையைப் பெற்றுத் தரும் நல்லறங்கள் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹுவின் தூதர் (ஸல்) ஆம். அவை நான்கு காரியங்கள் ஆகும். அவை அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது, அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்பது, அவர்கள் அளித்துச் சென்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களுடைய தோழர்களை கண்ணிப்படுத்துவது. மேலும் அவர்கள் வழியாகவே தவிர உள்ள உறவினர்களை இணைத்து வாழ்வதும் ஆகும் என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத்


يُحَدِّثُ الْقَوْمَ، قَالَ: ” كُنَّا عِنْدَ النَّبِيِّ K فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ بَعْدَ مَوْتِهِمَا أَبَرُّهُمَا؟، قَالَ: نَعَمْ، خِصَالٌ أَرْبَعٌ: الدُّعَاءُ لَهُمَا، وَالاسْتِغْفَارُ لَهُمَا، وَإِنْفَاذُ عَهْدِهِمَا، وَإِكْرَامُ صَدِيقِهِمَا، وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لا رَحِمَ لَكَ إِلا مِنْ قِبَلِهِمَا “


Al-Adabul-Mufrad-30

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பெற்றோர்களை நோவினை செய்வது தண்டனைக்குரியது என்பது பற்றிய பாடம்.

30. விபச்சாரம், மது அருந்துவது மற்றும் திருட்டு பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள் அல்லாஹுவும் அவனது தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று கூறினோம். அவை மானக்கேடான மற்றும் தண்டனைக்குறிய காரியங்களாகும் என்று கூறினார்கள். பெரும் பாவங்களை பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா ? அவை அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பது பெற்றோரை நோவினை செய்வது மற்றும் பொய் பேசுவதும் ஆகும் என்று சாய்ந்த நிலையில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் இப்னு ஹுசைன்.


مَا تَقُولُونَ فِي الزِّنَا، وَشُرْبِ الْخَمْرِ، وَالسَّرِقَةِ؟ قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: هُنَّ الْفَوَاحِشُ، وَفِيهِنَّ الْعُقُوبَةُ، أَلا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ؟ الشِّرْكُ بِاللَّهِ  وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَكَانَ مُتَّكِئًا، فَاحْتَفَزَ، قَالَ: وَالزُّور


Al-Adabul-Mufrad-22

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 11

பெற்றோருக்கு நன்மை செய்பவருடைய வாழ்நாளை அல்லாஹ் அதிகப்படுத்துவான்.

22. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெற்றோருக்கு நன்மை செய்பவருக்கு நல்வாழ்த்துகள்! அவருடைய வாழ்நாளை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக!

அறிவிப்பவர் : முஆத் பின் அனஸ் (ரலி)


«مَنْ بَرَّ وَالِدَيْهِ طُوبَى لَهُ، زَادَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي عُمْرِهِ»


Al-Adabul-Mufrad-12

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி


أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَسْتَخْلِفُهُ مَرْوَانُ، وَكَانَ يَكُونُ بِذِي الْحُلَيْفَةِ، فَكَانَتْ أُمُّهُ فِي بَيْتٍ وَهُوَ فِي آخَرَ‏.‏ قَالَ‏:‏ فَإِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ وَقَفَ عَلَى بَابِهَا فَقَالَ‏:‏ السَّلاَمُ عَلَيْكِ يَا أُمَّتَاهُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، فَتَقُولُ‏:‏ وَعَلَيْكَ السَّلاَمُ يَا بُنَيَّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، فَيَقُولُ‏:‏ رَحِمَكِ اللَّهُ كَمَا رَبَّيْتِنِي صَغِيرًا، فَتَقُولُ‏:‏ رَحِمَكَ اللَّهُ كَمَا بَرَرْتَنِي كَبِيرًا، ثُمَّ إِذَا أَرَادَ أَنْ يَدْخُلَ صَنَعَ مِثْلَهُ‏


Al-Adabul-Mufrad-7

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


مَا مِنْ مُسْلِمٍ لَهُ وَالِدَانِ مُسْلِمَانِ يُصْبِحُ إِلَيْهِمَا مُحْتَسِبًا، إِلاَّ فَتْحَ لَهُ اللَّهُ بَابَيْنِ يَعْنِي‏:‏ مِنَ الْجَنَّةِ وَإِنْ كَانَ وَاحِدًا فَوَاحِدٌ، وَإِنْ أَغْضَبَ أَحَدَهُمَا لَمْ يَرْضَ اللَّهُ عَنْهُ حَتَّى يَرْضَى عَنْهُ، قِيلَ‏:‏ وَإِنْ ظَلَمَاهُ‏؟‏ قَالَ‏:‏ وَإِنْ ظَلَمَاهُ


Al-Adabul-Mufrad-712

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

712. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ مِنَ الدُّعَاءِ»


Al-Adabul-Mufrad-658

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

658. யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபப்படுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ لَمْ يَسْأَلِ اللَّهَ غَضِبَ اللَّهُ عَلَيْهِ»


Al-Adabul-Mufrad-111

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

111. அண்டைவீட்டாருக்கு நலம் நாடாமல் தான் மட்டும் நன்றாக இருந்தவனுக்கு எதிராக அவனின் அண்டைவீட்டான் அல்லாஹ்விடம் முறையிட்டு நீதி கேட்பான்.

தன் அண்டைவீட்டாருடன் தொடர்புள்ள எத்தனையோ பேர், அல்லாஹ்விடம் என் இறைவா! இவன் என்னை (வீட்டுக்குள்) விடாமல் கதவை தாளிட்டுக் கொண்டான், நல்லதை (எனக்கு தராமல்) தடுத்தான் என்று மறுமை நாளில் கூறுவான்…

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


لَقَدْ أَتَى عَلَيْنَا زَمَانٌ – أَوْ قَالَ: حِينٌ – وَمَا أَحَدٌ أَحَقُّ بِدِينَارِهِ وَدِرْهَمِهِ مِنْ أَخِيهِ الْمُسْلِمِ، ثُمَّ الْآنَ الدِّينَارُ وَالدِّرْهَمُ أَحَبُّ إِلَى أَحَدِنَا مِنْ أَخِيهِ الْمُسْلِمِ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” كَمْ مِنْ جَارٍ مُتَعَلِّقٌ بِجَارِهِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ: يَا رَبِّ، هَذَا أَغْلَقَ بَابَهُ دُونِي، فَمَنَعَ مَعْرُوفَهُ “


Al-Adabul-Mufrad-63

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

63. உறவை துண்டித்தவன் இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் (ரஹ்மத் எனும்) அருள் இறங்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி)


«إِنَّ الرَّحْمَةَ لَا تَنْزِلُ عَلَى قَوْمٍ فِيهِمْ قَاطِعُ رَحِمٍ»


Next Page » « Previous Page