ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது
பாடம்:
பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக செய்யப்படும் நல்லறங்கள்.
35. அபூஉஸைத்-மாலிக் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஒரு மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்கு நான் நன்மையைப் பெற்றுத் தரும் ஏதேனும் நல்லறங்கள் உள்ளதா? என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். அவை நான்கு காரியங்கள் ஆகும். அவைகள்:
1 . அவர்களின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனை செய்வது,
2 . அவர்கள் விட்டுச் சென்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது,
3 . அவர்களுடைய நண்பர்களை கண்ணியப்படுத்துவது,
4 . உனக்கு அவர்கள் வழியாகவே மட்டுமே உறவினர்களாக ஆனவர்களை இணைத்து வாழ்வது”
என்று கூறினார்கள்.
يُحَدِّثُ الْقَوْمَ، قَالَ: ” كُنَّا عِنْدَ النَّبِيِّ فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ بَعْدَ مَوْتِهِمَا أَبَرُّهُمَا؟، قَالَ: نَعَمْ، خِصَالٌ أَرْبَعٌ: الدُّعَاءُ لَهُمَا، وَالاسْتِغْفَارُ لَهُمَا، وَإِنْفَاذُ عَهْدِهِمَا، وَإِكْرَامُ صَدِيقِهِمَا، وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لا رَحِمَ لَكَ إِلا مِنْ قِبَلِهِمَا “
சமீப விமர்சனங்கள்