ஹதீஸின் தரம்: விபரம் கீழே
5787. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராகவும், பிறர் அவருடன் பழகக்கூடிய நிலையிலும் இருப்பார். ஒருவர் பிறருடன் பழகாதவராகவும், பிறர் அவருடன் பழகாத நிலையிலும் அவர் இருந்தால் அவரிடத்தில் எந்த நன்மையும் இல்லை.
மக்களில் சிறந்தவர், மக்களுக்கு அதிகம் பயன்தரக்கூடியவரே ஆவார்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
தப்ரானீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸை இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அப்துல்மலிக் பின் அபூகரீமா என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். மேலும் இவரிடமிருந்து அலீ பின் பஹ்ராம் என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.
«الْمُؤْمِنُ يَأْلَفُ وَيُؤْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ، وَخَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ»
சமீப விமர்சனங்கள்